வியாழன், 23 ஜூன், 2016

இறை வழிபாடு பற்றி சிந்தனை

இறை வழிபாடு பற்றி சிந்தனை


இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை,பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பெரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும் பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்

இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.

இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.

இறை வழிபாடு என்பது ஏழை களுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்

இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.

இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,

இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.

இறை வழிபாட்டின் இரண்டு கண்கள் நேர்மையும், உண்மையும் ஆகும்.

விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.


நன்றி : தமிழ் வேதம்

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

**********************************************
பாவமன்னிப்பு என்ற லாஜிக் 

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 



இப்பாடல் சிவஞான சித்தியார் எனும் சாத்திர நூற்பா .இப்பாடலின் பொருள் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அத்தெய்வமாக

அங்கே சிவபெருமான் தான் அருளுவார் ஏனெனில் மற்ற தெய்வங்கள் என்று நீங்கள் சொல்லும் எல்லாமே கருவில் உதித்து இவ்வுலக பிறப்பு இறப்பாகிய வினை அனுபவித்து மரணம் சம்பவித்தவை .கடவுள் அழியாதவர் .ஒரு கருவில் தோன்றி அழியும் ஒருவர் எப்படி கடவுளாகமுடியும் ? நீங்கள் எம்மத கடவுளை வணங்கினாலும் நீங்கள் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப 


அருளுபவர் சிவபெருமான் ஒருவரே அவர் ஒருவரே தோற்றமும் முடிவும் இல்லாதவர் .இந்த உடல் அழியும் ஆனால் உயிர் அழிவில்லாதது .எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிறவிகள் தோறும் பிறந்து அந்த ஆன்மா பக்குவப்பட்டு சைவ சமயம் சார்ந்து தான் பிறப்பில்லா முக்தி அடைய முடியும் .அதனால் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் போய்விடும் என்றால் டீ சாப்பிடுவது போல களவும் கொலையும் கற்பழிப்பும் இன்னபிற தவறுகளும் மலிந்துவிடும் .பாவமன்னிப்பு என்ற லாஜிக்கே தவறு செய்த பாவத்தை நாம் அனுபவித்தே தீர்க்க முடியும் வேறு புற வாசல் வழியாக தீர்ப்போம் என்றால் அது அண்டப்புளுகு தான்
திரு சி ற்றம் பலம்  
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக