வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

குருவின் மகிமைகள்


குருவின் மகிமைகள்


மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற கோட்பாடு அனைத்து மதங்களிலும் உண்டு. குரு உபதேசம் பெற்றால்தான் தெய்வத்தை தெரிய முடியும்,குரு சுட்டிக்காட்டினால்தான் ஜோதியை உணர முடியும்.
' குரு இல்லாத கல்வி கரு இல்லாத விதை ' என்பதும் " சுட்டிக்காட்டாத வித்தை சுட்டுப் போட்டாலும் வராது " என்பன நம் முதுமொழிகள் காட்டும் குருவின் பெருமை.
" தொட்டவுன் ஜோதி தட்டவும் சிவராஜ யோகம் கிட்டவும் " என்று குணங்குடி மஸ்தான் பாடியுள்ளார்.
குரு நினைத்தால் ஒரு சிஷ்யனுடைய ஞானக் கண்ணை உடனே திறக்கலாம். சில குருமார்கள் சிஷ்யனுடைய புருவ மத்தியை அவர்களது வலது கட்டை விரலால் அழுத்துவார்கள், அந்த நொடியிலேயே சிஷ்யனுடைய தலையில் ஒரு பெட்மாக்ஸ் ஒளி மாதிரி ஒரு ஒளிபிளம்பு தலையில ஏற்பட்டு பின் குரு சிஷ்யனின் தலையில் கையை வைத்து மறைத்து விடுவார், பின் சிஷ்யனும் தனது யதார்த்த நிலைக்கு திரும்பி விடுவார். இந்த ஒளி நிலையினை பெற நிரந்தரமாக பெற நீ தவம் செய்ய வேண்டும் என அறிவுரை கூறி தீட்சை கொடுப்பார்.
மந்திரம் - யந்திரம் மூலிகைகள் , தந்திரம் ஆகியவை மூலம் தீட்சை கொடுப்பது சக்தி மார்க்கமாகும்,இதற்கு அஸ்ட கர்மம்எனப்படும்.
மோகனம், வசிகம், தம்பனம், ஆகர்ஷனம் , உச்சாடனம், பதனம் வித்வேடனம், மாரணம் என்னும் எட்டு வித்தைகளும் இதில் அடங்கும். 
ராஜயோகம், சிவராஜயோகம், ஹடயோகம், மற்றும் குண்டலியோகம் என்பன சிவ மார்க்க தீட்சைகளாகும், இவை அஷ்டாங்க யோகம் என்னும் அட்டவனையில் அடங்கும். இவற்றில் மூச்சுப் பயிற்ச்சியும் ஆசனங்களும் முக்கியம்.
ஒரு மனிதன் ஆன்மீக நிலை அடைய வேண்டுமானால் ஒரு குருவிடம் சக்தி மார்க்கத்திலோ, அல்லது சிவ மார்க்கத்திலோ தீட்சை பெற வேண்டும்.
எந்த குருவிடம் போனாலும் நம் கர்மாவை அவர்கள் மாற்ற மாட்டார்கள், அப்படி மாற்றினால் நம் கரமாவானது அவர்களது தவபயனை குறைத்து விடும், அதனால்தான் அவர்கள் நமக்கு வழியைத்தான் காட்டுவார்கள், ஆசிர்வாதம் செய்வார்கள், அவ்வளவுதான், அவர்கள் காட்டிய இலக்கை நோக்கி நாம்தான் பிரயாணப்பட வேண்டும். இதுதான் உண்மை, தீட்சை பெற்றுவிட்டால் கர்ம விவை தீர்ந்துவிடும் என்ற எண்ணம் கூடாது.
தர்மம் செய்தால்தான் கர்மம் நீங்கும், வெறும் புத்தக்படிப்பும், மந்தப்படிப்பும் பலன் தராது. இதனை வழிகாட்டும் குருவிற்கு காரணக்குரு என்பதாகும், இந்த காரண குருதான் உங்கள் தவத்தை பொறுத்து அமைவது, உங்களின் தவ வலிமையில்தான் ஒரு கட்டத்தில் பூமியிலிள்ள ஆகர்ஷன சக்தியிலிருந்து விடுபடும் ஆற்றல் பெறுவீர்கள்,
குருமார்கள் பலவிதம், அவர்கள் அனுபவம் மூலம் பலருக்கு வழிபாட்டுவார்கள், பலவித தீட்சைகள் மூலம் சிஷ்யனை பக்குவப்படுத்திக் காட்டுவார்கள்.
1, ஒரு மந்திரத்தை சிஷ்யனுடைய வலது காதில் உபதேசித்தல் மந்திர தீட்சை எனப்படும். சிஷ்யன்அம்மந்திரத்தை நம்பிக்கையுடன் உபதேசித்தால் அவன் சித்தி அடைவான்,
2, சிஷ்யனை ஒரு சுலோகத்தை மனம் உருகி சொல்லச் செய்து வாசக தீட்சை
3, உடலைத் தொட்டு அவனுள் முடங்கிக் கிடக்கும் சக்தியை தட்டி எழுப்பி விடுவது ஸ்பரிச தீட்சை
4, தான் உண்ட - பருகிய உணவை கொடுப்பது அமிர்த தீட்சை
5, ஆசனப்பயிற்சி மூலம் மூலதார சக்தியை கிளப்பி விடுவது யோக தீட்சை
6. தன்னுடைய காந்தப் பார்வையால் சிஷ்யனின் காந்த சக்தியை வெளிக் கொணர்வது நயன தீட்சை
7. மெளன நிலையில் சின் முத்திரை காட்டி உபதேசிப்பது மெளன தீட்சை, ( தட்சிணா மூர்த்தி தன் சிஷ்யர்களுக்கு உபதேசித்தது)

மேலும் இது போன்று இன்னும் 64 தீட்சைகள் உண்டு எனவும் பெரியோர்கள் கூறுகின்றனர்.

இப்போது நடப்பது கலியுகம் இந்த கலியுகத்தில் சில நல்லனவாகவும் சில தீயனவாகவும் நடைபெற்று வருகின்றன.ஆன்மீகம் என்னும் புனிதத்ததில் காசு பணத்திற்காக பல போலியான குருமார்கள் தோன்றியுள்ளது இக்கால கட்டயாயத்தின் விதியாகும், இதனால் இந்து மதத்தின் புனிதமும், இந்திய நாட்டின் பெருமையும் பெயரும் கெட வாய்ப்புள்ளது, இக்கால கொடுமையான நேரத்திலும், உண்மையான குருமார்களை தேடி இனம் கண்டு அவரை சரணாகதி அடையும் பேறு பெறும் சிஷ்யர்கள் உண்மையில் மிக்பெரிய பாக்கியவான்களாகவே இருப்பார்கள் 
சிவ- சக்தி தீட்சை பெறுவோம், ஆன்மீகத்தின் வழி நடப்போம், சித்தியோகம் அடைவோம்,
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை.பூமாலை, சுந்தரபாண்டியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக