திங்கள், 13 பிப்ரவரி, 2017

யார் பெரியவர்?

யார் பெரியவர்?
அவ்வையாருக்கு புலமை கர்வம் இருந்தது. அதை உணர்த்த முருகன் நடத்திய திருவிளையாடல்இது. அவ்வை நடந்து வந்ததின் சோர்ந்து ஒரு மர நிழலில் அமர்ந்தார். மரத்தின் மேலே ஆடு மேய்க்கும் சிறுவன் " பாட்டி சோர்வு நீக்க பழம் சாப்பிடுகிறீர்களா? என்றான். சரி என்றார் அவ்வை. உடனே அவன் பாட்டி சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என குறும்பாகக் கேட்டான். அவ்வை குழம்பினாள். இருப்பினும் சுடும் பழம் சுடாத பழம் பற்றி இவனிடம் நாம் சந்தேகம் கேட்டால் நம் புலமைக்கு இழுக்கு என்று கருதி , அவன் பறித்து போடட்டும் என்றிருந்தார். சிறுவன் பழுத்த பழத்தை போட்டான். கீழே விழுந்த பழத்தில் மண் ஒற்றிக் கொண்டிருந்ததை அதை அவ்வை ஊதினார். பாட்டி ரொம்பவும் பழம் சூடாக இருக்கிறதா? இப்படி ஊதிக்கொண்டிருக்கிறீர்களே என்று நகைத்தான். அவ்வைக்கு புலமை கர்வம் அந்த கணமே ஒழிந்தது. அப்பா , என் கர்வம் ஒழிந்தது என்று கூறினார். சிறுவனாக இருந்தவன் முருகனாக தோன்றி அவ்வையே உங்களுக்கு இருக்கும்அறிவே பெரிதென நினைத்ததை திருத்த செய்த சிறு குறும்பு இது என்றான். இந்த உலகத்தில் தான்தான் பெரியவன் என்று பலர் அகந்தையில் இருக்கின்றார்கள் உண்மையில் உலகில் பெரிவர்கள் என்பவர்கள் இறைவனையே வணங்கி இறைவனையே நினைத்துக்கொண்டிருப்பவர்களே, இது பற்றி ஒரு பாட்டு பாடு என்றார் முருகன். அவ்வை பாடினார். அந்த பாட்டின் கருத்து இது.



உலகில் மிகப்பெரியது இந்த உலகம் தான்
இந்த உலகமோ பிரம்மாவால் படைக்கப்பட்டது எனவே பிரம்மா பெரியவர்
பிரம்மா திருமாலின் தொப்பில் குழியில் தோன்றினார் எனவே திருமால் பெரியவர்
திருமாலை கடல்தான் தாங்கிக் கொண்டிருக்கிறது,எனவே கடல்தான் பெரியது
கடலை அகத்தியர் உள்ளங்கையில் அடக்கினார், எனவே அகத்தியர் பெரியவர்
அகத்தியர் சிறு மண்குடத்தில் அடங்கியவர் எனவே மண் குடம் பெரியது
மண்குடமோ பூமியிலுள்ளது எனவே பூமி பெரியது
பூமியை அதிசேடன் என்ற பாம்பு தாங்கிக் கொண்டுள்ளது எனவே பாம்பு பெரியது
அந்த பாம்பு உமையம்மையின் மோதிரத்தில் உள்ளது எனவே உமையம்மைதான் பெரியவர்
அந்த உமையம்மையோ சிவனாரின் பாதியாக ஒடுங்கி உள்ளார் எனவே சிவன்தான் பெரியவர்
அந்த சிவனோ அடியார்களின் உள்ளத்தில் உள்ளார்.
எனவே இறைவனையே சர்வ காலமும் நினைத்து வணங்கும் அடியார்களின் உள்ளத்ததில் குடிகொண்டிருக்கும் அடியார்களே பெரியவர்கள், அடியார்களின் பெருமையே உலகில் சிறந்தது, பெரியது
திருச்சிற்றம்பலம்





தகவல் : பிரதிலிப் ஆன்மீக மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக