சனி, 11 பிப்ரவரி, 2017

எது கெளரவம்?

எது கெளரவம்?
நம்மைவிட உயர்ந்தவர்களைப் பார்த்து பொறாமைப் படாமலும், நம்மைவிட தாழ்ந்தவர்களைப் பார்த்து அவர்கள் மீது வெறுப்பு ஏளனம் காட்டாமலும், எவராக இருந்தாலும், சமமாக பாவித்து அன்பு செலுத்துவது ஒரு வகை பண்பு நன்று, இத்தகையஇனிய பண்பு நலன்கள் நம் மனத்தின் அடி ஆழத்தில் நீர் ஊற்றுப்போல் இருக்கிறது, நம் மனதில் நாம் சேர்த்துக் கொண்ட போட்டி, பொறாமை, வறட்டுக் கெளரவம், போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன. பெரிய மகான்கள், ஞானிகள், குருமார்கள் தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள், அவர்கள் கொஞ்சம் கூட கவுரவம் பார்க்காமல், ஏற்றத் தாழ்வு காணாமல் சாதி இனம் பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்பு காட்டுவார்கள். நமக்கு தான் எத்தனை ஆணவம், அகம்பாவம், வறட்டுக்கெளரவம் உள்ளது. சக மனிதர்களையே பேதம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் நம்மை விட மேலான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள்புரிய வேண்டும்என ஆசைப்படுகிறோம். இது நியாயம் தானா? 

இது பற்றிய சிறிய வரலாற்கு கதையை காண்போம்
பாரதப் போர் முடிவடைந்த தருணம், கிருஷ்ணன் களைபடிந்து தன் கண்களில் ஒளியிழந்து உடல் சோர்உற்று காணப்பட்டார், இதற்கு காரணம் , பாரதப் போருக்காக , துரியோதனனும் அர்ச்சுனனும் கிருஷ்ணனிடம் நாடியபோது, கிருஷ்ணனிடமிருந்து துரியோதனன் தனக்கு கிருஷ்ணனின் அனைத்து சேனைகளையும், அர்ச்சுனன் தன்னையும் பெற்றார்கள், இறுதியில் வெற்றியும் கண்டனர் பாண்டவர் வம்சவழியினர், தனது படைகள் போரில் மடிந்தன, இந்த பாவம் அவரைத் தாக்கியது, இதன் பொருட்டு கிருஷ்ணன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார், விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டனர். அப்போது விருந்துண்பவர்களிடம் கிருஷ்ணன் ஒரு வரம் கேட்டார், அதற்கு யாவரும் சம்மதம் தெரிவித்தனர். திடீரென்று விருந்து முடிந்தவுடன் கிருஷ்ணன் விருந்துண்டவர்களின் இலையை எடுத்துக் கொண்டிருந்தார் அதை எல்லோரும் தடுத்தனர். அதற்கு கிருஷ்ணன் எனக்கு தாங்கள் எல்லோரும் வரம் கொடுத்துள்ளீர்கள் அதனை மறக்கக் கூடாது. அதுதான் இது, என்றார். எனவே தான் நானே இலையை எடுக்கிறேன் என்றார். இச்செயல்கள் முடிந்தவுடன் கிருஷ்ணன் உற்சாகம் கொண்டவராக காணப்பட்டார். அவர் முகத்தில் அழகு கலை பிறந்தது. தன் பாவம் நீங்கியது நான் ஒவ்வொரு இலையை எடுக்கும் போது பாவம் நீங்கி புண்ணியம் கிடைத்தது. உண்ண உணவு கொடுப்பதைவிட உண்ட இலையை எடுப்பதில் பாவம் விலகி புண்ணியம் பெருகிறது என்பதை எல்லோருக்கும் விளக்கினார். இதனை உணர்த்தவே இச்சம்பவம் உருவாக்கப்பட்டது. நாம் வறட்டு கெளரவம் சாதி இனம் ஏழை செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்காதிருக்கவே இந்த நிகழ்வை நடத்தி உணர்த்தினார் பகவான்.


திருச்சிற்றம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக