ஞாயிறு, 13 செப்டம்பர், 2015

தத்துவக் கதைகள்


தத்துவக் கதைகள் சிவபக்தியுடைய ஒரு பெரியவர் காசிக்கு சென்றார். பய பக்தியுடன் காசி விசுவநாதப் பெருமானை வழிபட்டார். பல நாட்கள் காசியில் தங்கியிருந்து விட்டு ஊருக்கு திரும்பும் நாளில் கங்கையாற்றின் கங்கா தீர்த்தம் ஒரு குடத்தில் எடுத்துக் ெகாண்டு ஊர்வந்து சேர்ந்தார். இப்புனித நீரை இராமேஸ்வரத்திலுள்ள இராமநாத பெருமானுக்கு அபிசேகம் செய்ய வேண்டுமென்று இதனை பூசை அறையில் வைத்திரு்ந்து பாதுகாத்து வந்தார். காசிக்கு போய் வந்ததின் நினைவாக இனி பொய் சொல்வதி்ல்லை சிவனுக்கு ஒவ்வாத உணவுகள் உண்பதில்லை என முடிவெடுத்தார். இராமேஸ்வரம் செல்ல சில காலம் ஆகியிற்று. இதற்கிடையில் கடும பஞ்சம் வந்தது. குடிக்க தண்ணீர் பஞ்சம் வந்தது. கோடை காலம் உச்சி வெயில் நேரம் அக்கால நேரத்தில் ஒரு கழுதை தாகத்தின் மிகுதியால் உயிர் போகும் நிலையில் படுத்துக் கிடந்தது. அக் கணம் பக்தரின் மகன் முக்கண்ணன் என்பான் தன் தந்தையார் வைத்திருந்த கங்கை நீரை இறக்கும் தறுவாயில் இருந்த கழுதைக்கு வைத்து குடிக்க செய்தார். இதை அறிந்த பெரியவர் மிகவும் வருத்தப் பட்டார். இரவு முழுவதும் தூங்க வில்லை. நள்ளிரவில் சற்றே கண் அயர்ந்தார். இராமேஸ்வரத்தில் எழுந்தருளியிருக்கும் இராமநாத பெருமான் கனவில் எழுந்தருளி, " நீ எனக்கு ஆயிரம் குடம் கங்கை நீரை அபிடேகம் செய்த புண்ணியம் பெற்றாய் உன் மகன் தாக முற்றிருந்த கழுதைக்கு கங்கை நீரை அளித்தது என்னை வந்து சேர்ந்தது. என்று கூறி மறைந்தார். பிற உயிர்களை புறக்கணித்தல் கூடாது. இறைபணி மட்டும் பக்தி ஆகாது. பிற உயிர்களுக்கு தக்க சமயத்தில் உதவும் பணியும் இறைப்பணியாகும். ஈகை, இறக்க குணம் , உண்மை, நேர்மை இருந்து பிற உயிர்களிடம் இறக்கம் கொண்டு உதவுதலும் இறைவர் வேண்டும் பகதி நெறியாகும். திருச்சிற்றம்பலம் ஓம்நமசிவாயம் நன்றி ; தமிழ் வேதம் மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக