புதன், 30 செப்டம்பர், 2015

திருத் தல யாத்திரை


தற்காலத்தில் தான் ஆன்மிக சிந்தனைகள் வளர்ந்த நிலையில் திருத்தல யாத்திரைத் தலங்கள் நாம் பல யாத்ரா சர்வீஸ் கள் மூலம் பல தலங்களுக்கு சென்று வருகிறோம், இதற்கென்று பல வழிகாட்டிகள் இதற்காகவே உள்ளனர், அவர்கள் அந்தந்த யாத்திர தலங்களின் வரலாறுகளையும் பெருமைகளையும் நமக்கு எடுத்துக் கூறுகின்றனர். இந்த வசதிகள் இல்லாத இதிகாசங்களில் சிவத்தல ங்களின் சிறப்புக்களையும் அதன் பெருமைகளையும் சிவனடியார்களான நம் குருநாதர்கள், சமயக் குரவர்கள் நால்வரும் தமிழ்நாட்டிலுள்ள தும், வட நாட்டிலுள்ளதுமானதும், ஈழ தேசத்திலுள்ளதுமான சிவதலங்கைள தங்கள்பாடல்கள் வாய்லாகவும், அந்தந்த தலங்களுக்கு சென்று அங்குள்ள இறைவர்களையும், அவர்களால் நமக்கு கிடைக்கும் பரிகார நலங்களையும் கண்டு தங்கள் பாடல் வாயலாக தெளிவு படுத்தியுள்ளார்கள். நம் பாரத தேசத்திலுள்ள 242 சிவலாயங்களையும், அவைகள் காவிரிக்கரையின் தென்கரை, வடகரை,மற்றும் பாண்டிய நாட்டு தலங்கள் சோழ வள நாட்டுத்தலங்கள், பல்லவ தேச தலங்கள் என பிரித்து வகைப்படுத்தியும் உள்ளனர், அவர்கள் நமக்கு அறிவித்த தலங்கள் இன்றும் பாடல் பெற்ற தலங்கள் என்னும் வரிசையில் இயங்கி வருகின்றன. நல்ல அறநெறியில் ஈட்டிய செல்வத்தை கொண்டு நாம் , நம் மனைவி, மக்கள், சுற்றத்தோடும், அடியார்களோடும் திருக் கோவில்கள் சென்று வழிபடுதல் வேண்டும். " நாடும் நகரமும், நல் திருக்கோவிலும் தேடித் திரிந்து சிவபெருமான் என்று பாடுமின் பாடிப் பணிமின் பணிந்த பின் கூடிய நெஞ்சத்து கோயிலாய் க் கொள்வானே " என்று திருமூலர் அருளியுள்ளார். சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறியில் நிற்பவர்களுக்கும் அவரவர்களுக்கு ஏற்ப அருள் செய்யும் இடம் திருக்கோயிலாகும், ஆக எல்லோருக்கும் உரிய இடமாக திகழும் திருக்கோயில்கள் கட்டுவது, பராமரிப்பது போன்ற பணிகள் காலம் கடந்து நிற்கும் அற்புதப் பணியாகும். திருத்தலங்கள் ெசல்லும் நாம் நம்மால் இயன்ற திருப்பணிகளும்,உழவாரப்பணிகளும் செய்வது சைவரின் கடமையாகும்,. ஆக திருத்தல யாத்திரைகள் மேற்கொள்வதன் மூலம் இறைவனது பல்வேறு திருமேனிகளை அதன் பயனாக நம் உள்ளத்துள்ளே இறைவனைத் தொழும் பேறு பெறலாம். இத்தலங்கள் எங்கெங்கு உள்ளன என்பதை திருஞானசம்பந்தரின் திரு சேத்திரக்கோவை எ்ன்ற பதிகத்தின் வாயிலாக நாம் காண்போம் இரண்டாம் திருமுறை ஆரூர்தில்லை யம்பலம் வல்லந்நல்லம் வடகச்சியு மச்சிறு பாக்கநல்ல கூரூர்குட வாயில் குடந்தைவெண்ணி கடல்சூழ்கழிப் பாலைதென் கோடிபீடார் நீரூர்வய னின்றியூர் குன்றியூருங் குருகாவையூர் நாரையூர் நீடுகானப் பேரூர்நன் னீள்வய னெய்த்தானமும் பிதற்றாய்பிறை சூடிதன் பேரிடமே. பொழிப்புரை : பிறைசூடிய பெருமானின் பெருந்தலங்களாய ஆரூர்தில்லையம்பலம் முதலானதலங்களின் பெயர்களைப் பலகாலும் சொல்லிக்கொண்டிரு. உனக்குப் பெரும்பயன் விளையும். பெருந்தலங்கள். குடந்தை, குடந்தைக்கீழ்க்கோட்டம், குடமூக்கு, குடந்தைக் காரோணம் நான்கும் இப்போது கும்பகோணம் என்னும் நகரில் உள்ள வெவ்வேறு சிவத்தலங்கள். இதில் குடவாயில் குடந்தை அண்ணாமலை யீங்கோயு மத்திமுத்தா றகலாமுது குன்றங் கொடுங்குன்றமுங் கண்ணார்கழுக் குன்றங் கயிலை கோணம் பயில்கற்குடி காளத்தி வாட்போக்கியும் பண்ணார்மொழி மங்கையோர் பங்குடையான் பரங்குன்றம் பருப்பதம் பேணிநின்றே எண்ணாயிர வும்பகலு மிடும்பைக்கட னீந்தலாங் காரணமே. பொழிப்புரை : அண்ணாமலை ஈங்கோய்மலை முதலான தலங்களை விரும்பி இரவும் பகலும் எண்ணின் துன்பக்கடலை நீந்தற்குக் காரணமாய் அமையும். பாடல் எண் : 3 அட்டானமென் றோதிய நாலிரண்டு மழகன்னுறை காவனைத் துந்துறைகள் எட்டாந்திரு மூர்த்தியின் காடொன்பதுங் குளமூன்றுங் களமஞ்சும் பாடிநான்கும் மட்டார்குழ லாண்மலை மங்கைபங்கன் மதிக்கும்மிட மாகிய பாழிமூன்றும் சிட்டானவன் பாசூரென் றேவிரும்பா யரும்பாவங்க ளாயின தேய்ந்தறவே. பொழிப்புரை : இறைவனின் எட்டு வீரட்டங்களையும் அழகனாகிய அப்பெருமானுறையும் காடு, துறை, நாடு, குளம், களம், பாடி, பாழி என முடியும் தலங்களையும் அரிய பாவங்கள் தேய்ந்தொழிதற் பொருட்டு விரும்புவாயாக. காடொன்பது - திருமறைக்காடு, தலைச்சங்காடு, தலையாலங்காடு, சாய்க்காடு, கொள்ளிக்காடு, ஆலங்காடு, பனங்காடு, வெண்காடு, வேற்காடு, கோட்டுக்காடு, நிறைக்காடு, மிறைக்காடு, இறைக்காடு அறப்பள்ளி யகத்தியான் பள்ளிவெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவானமர் காட்டுப்பள்ளி சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப் பிறப்பில்லவன் பள்ளிவெள் ளச்சடையான் விரும்பும்மிடைப் பள்ளிவண் சக்கரமால் உறைப்பாலடி போற்றக் கொடுத்தபள்ளி யுணராய்மட நெஞ்சமே யுன்னிநின்றே. பொழிப்புரை : நெஞ்சமே! கோயில் எனப்பொருள் தரும் பள்ளி என முடிவன வாய கொல்லி அறைப்பள்ளி அகத்தியான் பள்ளி முதலான தலங்களை உன்னி உணர்வாயாக, உனக்குப் பயன்பலவிளையும். ஆறைவட மாகற லம்பரையா றணியார்பெரு வேளுர் விளமர்தெங்கூர் சேறைதுலை புகலூ ரகலா திவைகாதலித் தானவன் சேர்பதியே பொழிப்புரை : சிவபிரான் காதலித்து உறையும் பதிகள் பழை யாறை மாகறல் முதலான தலங்களாகும் . அவற்றைச் சென்று தொழு வீர்களாக . மனவஞ்சர்மற் றோடமுன் மாதராரு மதிகூர் திருக்கூடலி லாலவாயும் இனவஞ்சொ லிலாவிடை மாமருது மிரும்பைப்பதி மாகாளம் வெற்றியூரும் கனமஞ்சின மால்விடை யான்விரும்புங் கருகாவூர் நல்லூர் பெரும்புலியூர் தனமென்சொலிற் றஞ்சமென் றேநினைமின் றவமாமல மாயின தானறுமே. பொழிப்புரை : வஞ்சமனத்தவர் போயகல மதிகூர் மாதர்கள் வாழும் ஆலவாய் இடைமருது முதலான தலங்கள் நமக்குப் புகலிடமாவன எனநினைமின். அதுவே தவமாகும். மும்மலங்களும் அற்று ஒழியும். மாட்டூர்மடப் பாச்சி லாச்சிராம மயிண்டீச்சரம் வாதவூர் வாரணாசி காட்டூர்கடம் பூர்படம் பக்கங்கொட்டுங் கடலொற்றியூர் மற்றுறை யூரவையும் கோட்டூர்திரு வாமாத்தூர் கோழம்பமுங் கொடுங்கோ வலூர்திருக் குணவாயில் ******** பொழிப்புரை : மாட்டூர் பாச்சில் ஆச்சிராமம் முதலியன இறைவன் உறையும் சிறந்த தலங்கள். குலாவுதிங்கட்சடையான் குளிரும் பரிதிநியமம் போற்றூரடி யார்வழி பாடொழியாத்தென் புறம்பயம் பூவணம் பூழியூரும் காற்றூர்வரை யன்றெடுத் தான்முடிதோ ணெரித்தானுறை கோயிலென்றென் றுநீகருதே. பொழிப்புரை : திருப்பரிதிநியமம், திருப்புறம்பயம் முதலான தலங்கள் கயிலை மலையைப் பெயர்த்தெடுத்த இராவணனின் முடி, தோள் ஆகியவற்றை நெரித்த சிவபிரான் உறையும் கோயில்கள் என நீ கருதுக. நெற்குன்றமோத் தூர்நிறை நீர்மருக னெடுவாயில் குறும்பலா நீடுதிரு நற்குன்றம் வலம்புரந் நாகேச்சுர நளிர்சோலையுஞ் சேனைமா காளம்வாய்மூர் கற்குன்றமொன் றேந்தி மழைதடுத்த கடல்வண்ணனு மாமல ரோனுங்காணாச் சொற்கென்றுந் தொலைவிலா தானுறையுங் குடமூக்கென்று சொல்லிக் குலாவுமினே. பொழிப்புரை : நெற்குன்றம், ஓத்தூர் முதலியதலங்களை எண்ணி மகிழ்வாயாக. குத்தங்குடி வேதி குடிபுனல்சூழ் குருந்தங்குடி தேவன் குடிமருவும் அத்தங்குடி தண்டிரு வண்குடியு மலம்புஞ்சலந் தன்சடை வைத்துகந்த நித்தன்னிம லனுமை யோடுங்கூட நெடுங்கால முறைவிட மென்று சொல்லாப் புத்தர்புறங் கூறிய புன்சமணர் நெடும்பொய் களைவிட்டு நினைந்துய்மினே. பொழிப்புரை : குத்தங்குடி, வேதிகுடி முதலான குடிஎன முடியும் தலங்கள் சிவபிரான் உமையம்மையாருடன் கூடி நெடுங்காலம் வீற்றிருப்பன என்று எண்ணி வழிபடாப் பௌத்தர் சமணர்கூறும் பொய்மொழிகளை விட்டு அத்தலங்களை நினைந்துய்மின். அம்மானை யருந்தவ மாகிநின்ற வமரர்பெரு மான்பதியான வுன்னிக் கொய்ம்மாமலர்ச் சோலை குலாவுகொச்சைக் கிறைவன் சிவஞானசம் பந்தன் சொன்ன இம்மாலையீ ரைந்து மிருநிலத்தி லிரவும்பக லுந்நினைந் தேத்திநின்று விம்மாவெரு வாவிரும்பும் மடியார் விதியார் பிரியார் சிவன்சேவடிக்கே. பொழிப்புரை : தலைவனும் அரிய தவவடிவாக விளங்கும் தேவர் முதல்வனும் ஆகிய சிவபெருமான் உறையும் திருத்தலங்களை நினைந்து கொய்யத் தக்கனவான நறுமண மலர்களைக் கொண்டுள்ள சோலைகள் செறிந்த கொச்சையம் பதிக்குத் தலைவனாகிய சிவஞான சம்பந்தன் பாடிய இப்பதிகப்பாமாலையை நிலவுலகில் இரவும் பகலும் நினைந்து விம்மியும் அஞ்சியும் விரும்பிப் போற்றும் அடியவர், நிறைந்த நல்லூழ் உடையவராவர். மறுமையில் சிவன் சேவடிகளைப் பிரியாதவராவர். திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி பனனிரு திருமுறை பாடல்கள் தொகுப்பு (தொடரும்) மேலும் பலஆன்மிகத் தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக