புதன், 30 செப்டம்பர், 2015

திருத்தல யாத்திரை ( பகுதி 2)


திருத்தல யாத்திரை ( பகுதி 2) சென்ற பகுதியில் திருஞான சம்பந்தர் கூறிய திருத்தலங்களின் சிறப்பும், அவ்வூர் இறைவர்கள் விபரங்கள் கண்டோம், இனி திருவருட் செல்வர் அப்பர் பெருமானார் கூறும் திருத்தல யாத்ததிரை தலங்களின் இறைவர் மற்றும் நமக்கு கிடைக்கும் பரிகாரங்கள் விபரத்தைக் காண்போம். பாடல் எண் : 1 தில்லைச்சிற் றம்பலமுஞ் செம்பொன் பள்ளி தேவன் குடிசிராப் பள்ளி தெங்கூர் கொல்லிக் குளிரறைப் பள்ளி கோவல் வீரட்டங் கோகரணங் கோடி காவும் முல்லைப் புறவம் முருகன் பூண்டி முழையூர் பழையாறை சத்தி முற்றங் கல்லில் திகழ்சீரார் காளத்தியுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : தில்லைச்சிற்றம்பலம் , செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கொல்லி அறைப்பள்ளி , கோவல் வீரட்டம் , கோகரணம் , கோடிகா , முல்லைக் கொடிகளை உடைய காடுகளை உடைய முருகன் பூண்டி , முழையூர் , பழையாறை , சத்தி முற்றம் , குறிஞ்சி நிலத்தில் திகழ்கின்ற சிறப்பு நிறைந்த காளத்தி ஆகிய திருத்தலங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . சிற்றம்பலம் , தில்லைக் கோயிலில் கூத்தப் பெருமான் நடனம் புரியும் இடம் ; இது மிகச் சிறப்புடைத்தாதல் பற்றி இப்பெயர் அத் திருக்கோயில் முழுவதையும் குறித்தல் உண்டு , இறைவனது அருளாற்றல் . அம்பலம் - வெளி . எனவே , ` சிற்றம்பலம் ` என்பது , ` அருள்வெளி ` என்பதாம் . திருமுறைகளைத் தொடங்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` எனத் தொடங்கி , முடிக்கும் பொழுதும் , ` திருச்சிற்றம்பலம் ` என முடித்தற்கும் இதுவே காரணம் ; அஃதாவது , அவை அருள் வெளியினின்றும் தோன்றிய அருள் நாத ஒலிகளாய் இருத்தலே காரணம் என்க . தேவாரத் திருப்பதிகங்கள் தில்லையில் சேமிக்கப் பட்டதும் இதுபற்றியே என உணர்க ,. இறைவனது அருளாற்றல் அறிவே வடிவாய் இருத்தல்பற்றி , ` சிற்றம்பலம் ` என்பது, ` சீகாழி ` என்றல் மரபு . தில்லைச் சிற்றம்பலம் . செம்பொன்பள்ளி , தேவன்குடி , சிராப்பள்ளி , தெங்கூர் , கோடிகா , சத்திமுற்றம் இவை . சோழ நாட்டுத் தலங்கள் . தேவன்குடி - திருந்துதேவன்குடி . கோவல் - கோவலூர் ; கோவலூர்வீரட்டம் . நடுநாட்டுத் தலம் . கோகரணம் , துளுவநாட்டுத் தலம் . முல்லைப் புறவம் - முல்லைக் கொடியை உடைய காடு ; இது , முருகன் பூண்டிக்கு அடை . முருகன்பூண்டி , கொங்குநாட்டுத் தலம் . கல்லின் திகழ் - மலையினால் விளங்குகின்ற . காளத்தி , தொண்டைநாட்டுத் தலம் . கொல்லியறைப்பள்ளி , முழையூர் , பழையாறை இவை வைப்புத் தலங்கள் . ` முளையூர் பாடல் எண் : 2 ஆரூர்மூ லட்டானம் ஆனைக் காவும் ஆக்கூரில் தான்தோன்றி மாடம் ஆவூர் பேரூர் பிரமபுரம் பேரா வூரும் பெருந்துறை காம்பீலி பிடவூர் பேணுங் கூரார் குறுக்கைவீ ரட்டா னம்முங் கோட்டூர் குடமூக்குக் கோழம் பமுங் காரார் கழுக்குன்றுங் கானப் பேருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : ஆரூர் மூலட்டானம் , ஆனைக்கா , ஆக்கூரில் உள்ள தான் தோன்றி மாடம் , ஆவூர் , பேரூர் , பிரமபுரம் , பேராவூர் , பெருந்துறை , காம்பீலி , பிடவூர் , எல்லோரும் விரும்பும் சிறப்பு மிக்க குறுக்கை வீரட்டம் , கோட்டூர் , குடமூக்கு , கோழம்பம் , மேகங்கள் தங்கும் கழுக்குன்றம் , கானப்பேரூர் ..... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 3 இடைமரு தீங்கோ யிராமேச் சரம் இன்னம்பர் ஏரிடவை ஏமப் பேறூர் சடைமுடி சாலைக் குடிதக்களூர் தலையாலங் காடு தலைச்சங் காடு கொடுமுடி குற்றாலங் கொள்ளம் பூதூர் கோத்திட்டை கோட்டாறு கோட்டுக் காடு கடைமுடி கானூர் கடம்பந் துறை கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : இடைமருது , ஈங்கோய் , இராமேச்சரம் , இன்னம்பர் , ஏர்இடவை , ஏமப்பேறூர் , சடைமுடி , சாலைக்குடி , தக்களூர் , தலையாலங்காடு , தலைச்சங்காடு , கொடுமுடி , குற்றாலம் , கொள்ளம் பூதூர் , கோத்திட்டை , கோட்டாறு , கோட்டுக்காடு , கடைமுடி , கானூர் , கடம்பந்துறை ஆகிய இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 4 எச்சி லிளமர் ஏம நல்லூர் இலம்பையங் கோட்டூர் இறையான் சேரி அச்சிறு பாக்க மளப்பூர் அம்பர் ஆவடு தண்டுறை யழுந்தூர் ஆறை கைச்சினங் கற்குடி கச்சூர் ஆலக் கோயில் கரவீரங் காட்டுப் பள்ளி கச்சிப் பலதளியும் ஏகம் பத்துங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : எச்சில் இளமர் , ஏமநல்லூர் , இலம்பையங் கோட்டூர் , இறையான்சேரி , அச்சிறுபாக்கம் , அளப்பூர் , அம்பர் , ஆவடுதுறை , அழுந்தூர் , ஆறை , கைச்சினம் , கற்குடி , கச்சூர் , ஆலக் கோயில் , கரவீரம் , காட்டுப்பள்ளி , கச்சிப்பலதளி , ஏகம்பம் .... இவற்றில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 5 கொடுங்கோளூர் அஞ்சைக் களஞ்செங் குன்றூர் கொங்கணங் குன்றியூர் குரக்குக் காவும் நெடுங்களம் நன்னிலம் நெல்லிக் காவு நின்றியூர் நீடூர் நியம நல்லூர் இடும்பா வனமெழுமூர் ஏழூர் தோழூர் எறும்பியூர் ஏராரு மேம கூடங் கடம்பை யிளங்கோயில் தன்னி னுள்ளுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : கொடுங்கோளூர் , அஞ்சைக்களம் , செங்குன்றூர் , கொங்கணம் , குன்றியூர் , குரக்குக்கா , நெடுங்களம் , நன்னிலம் , நெல்லிக்கா , நின்றியூர் , நீடூர் , நியமநல்லூர் , இடும்பாவனம் , எழுமூர் , ஏழூர் , தோழூர் , எறும்பியூர் , அழகிய ஏமகூடம் , கடம்பை இளங் கோயில் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 6 மண்ணிப் படிக்கரை வாழ்கொளி புத்தூர் வக்கரை மந்தாரம் வார ணாசி வெண்ணி விளத்தொட்டி வேள்விக் குடி விளமர் விராடபுரம் வேட்க ளத்தும் பெண்ணை யருட்டுறைதண் பெண்ணா கடம் பிரம்பில் பெரும்புலியூர் பெருவே ளூருங் கண்ணை களர்காறை கழிப்பா லையுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : மண்ணிப்படிக்கரை , வாழ்கொளிபுத்தூர் , வக்கரை , மந்தாரம் , வாரணாசி , வெண்ணி , விளத்தொட்டி , வேள்விக்குடி , விளமர் , விராடபுரம் , வேட்களம் , பெண்ணையாற்றங்கரையிலுள்ள அருட்டுறை , பெண்ணாகடம் , பிரம்பில் , பெரும்புலியூர் , பெரு வேளூர் , கண்ணை , களர் , காறை , கழிப்பாலை , முதலிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 7 வீழி மிழலைவெண் காடு வேங்கூர் வேதிகுடி விசய மங்கை வியலூர் ஆழி யகத்தியான் பள்ளி யண்ணா மலையாலங் காடும் அரதைப் பெரும் பாழி பழனம்பனந் தாள்பா தாளம் பராய்த்துறை பைஞ்ஞீலி பனங்காட் டூர்தண் காழி கடல்நாகைக் காரோ ணத்துங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : வீழிமிழலை , வெண்காடு , வேங்கூர் , வேதிகுடி , விசயமங்கை , வியலூர் , ஆழி , அகத்தியான்பள்ளி , அண்ணாமலை , ஆலங்காடு , அரதைப் பெரும்பாழி , பழனம் , பனந்தாள் , பாதாளம் , பராய்த்துறை , பைஞ்ஞீலி , பனங்காட்டூர் , காழி , கடற்கரையை அடுத்த நாகைக்காரோணம் .... ஆகிய இடங்களில் கயிலாயநாதனைக் காணலாம் . பாடல் எண் : 8 உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர் உருத்திர கோடி மறைக்காட் டுள்ளும் மஞ்சார் பொதியின்மலை தஞ்சை வழுவூர் வீரட்டம் மாதானங் கேதா ரத்தும் வெஞ்சமாக் கூடல்மீ யச்சூர் வைகா வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றி யூரும் கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக் கையுங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : உஞ்சேனை மாகாளம் , ஊறல் , ஓத்தூர் , உருத்திர கோடி , மறைக்காடு , மேகங்கள் பொருந்திய பொதியமலை , தஞ்சை , வழுவூர்வீரட்டம் , மாதானம் , கேதாரம் , வெஞ்சமாக்கூடல் , மீயச்சூர் , வைகாவூர் , வேதீச்சரம் , விவீச்சுரம் , வெற்றியூர் , கஞ்சனூர் , கஞ்சாறு , பஞ்சாக்கை .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 9 திண்டீச்சரஞ் சேய்ஞலூர் செம்பொன் பள்ளி தேவூர் சிரபுரஞ்சிற் றேமம் சேறை கொண்டீச்சரங் கூந்தலூர் கூழையூர் கூடல் குருகாவூர் வெள்ளடை குமரி கொங்கு அண்டர் தொழும்அதிகை வீரட் டானம் ஐயா றசோகந்தி ஆமாத் தூருங் கண்டியூர் வீரட்டங் கருகா வூருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : திண்டீச்சரம் , சேய்ஞலூர் , செம்பொன்பள்ளி , தேவூர் , சிரபுரம் , சிற்றேமம் , சேறை , கொண்டீச்சரம் , கூந்தலூர் , கூழையூர் , கூடல் , குருகாவூர் வெள்ளடை , குமரி , கொங்கு , தேவர்கள் தொழும் அதிகை வீரட்டம் , ஐயாறு , அசோகந்தி , ஆமாத்தூர் , கண்டியூர் வீரட்டம் , கருகாவூர் , ... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் பாடல் எண் : 10 நறையூரிற் சித்தீச் சரம்நள் ளாறு நாரையூர் நாகேச்சரம் நல்லூர் நல்ல துறையூர் சோற்றுத்துறை சூல மங்கை தோணிபுரந் துருத்தி சோமேச் சரம் உறையூர் கடலொற்றி யூரூற் றத்தூர் ஓமாம் புலியூர்ஓர் ஏட கத்துங் கறையூர் கருப்பறியல் கன்றாப் பூருங் கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : நறையூரிலுள்ள சித்தீச்சரம் , நள்ளாறு , நாரையூர் , நாகேச்சரம் , நல்லூர் , மேம்பட்ட துறையூர் , சோற்றுத்துறை , சூல மங்கை , தோணிபுரம் , துருத்தி , சோமேச்சரம் , உறையூர் , கடலை அடுத்த ஒற்றியூர் , ஊற்றத்தூர் , ஓமாம்புலியூர் , ஒப்பற்ற ஏடகம் , கறையூர் , கருப்பறியல் , கன்றாப்பூர் .... ஆகிய இடங்களில் கயிலாய நாதனைக் காணலாம் . பாடல் எண் : 11 புலிவலம் புத்தூர் புகலூர் புன்கூர் புறம்பயம் பூவணம் பொய்கை நல்லூர் வலிவலம் மாற்பேறு வாய்மூர் வைகல் வலஞ்சுழி வாஞ்சியம் மருகல் வன்னி நிலமலிநெய்த் தானத்தோ டெத் தானத்தும் நிலவுபெருங் கோயில்பல கண்டால் தொண்டீர் கலிவலிமிக் கோனைக்கால் விரலாற் செற்ற கயிலாய நாதனையே காண லாமே. பொழிப்புரை : புலிவலம் , புத்தூர் , புகலூர் , புன்கூர் , புறம்பயம் , பூவணம் , பொய்கைநல்லூர் , வலிவலம் , மாற்பேறு , வாய்மூர் , வைகல் , வலஞ்சுழி , வாஞ்சியம் , மருகல் , வன்னி , வளமான நிலத்தை உடைய நெய்த்தானம் முதலிய எந்த ஊரிலும் விளங்குகின்ற பெருங் கோயில்கள் பலவற்றைக் கண்டால் , தொண்டர்களே ! செருக்கிய வலிமை மிக்க இராவணனைத் தன் கால் விரலால் நசுக்கிய கயிலாய நாதனை அவ்விடங்களிலெல்லாம் காணலாம் . திருச்சிற்றம்பலம் ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக