வெள்ளி, 25 மார்ச், 2016

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

பாட்டி வைத்தியம்.


பாட்டி வைத்தியம் என்பது நாம் கேள்விப்பட்ட நம் அன்றாட வாழ்வில் அனுதினமும் பயன்படும் சொல்லாகவும், வைத்தியமுறையாகவும் இருப்பது எல்லாரும் தெரிந்த ஒன்றே. நாம் அறிந்த ஒன்றாக இருந்தாலும் அதை நாம் கடைபிடிக்க மன தைரியம் இல்லாதும் இருக்கலாம். அல்லது அது சரியோ அல்லது தவறோ என்ற ஐய்யப்பாட்டினாலும் இம்முறைகளை சரிவர கடைபிடிக்காது இரு்ககலாம், எனவே அதன் விளிப்புணர்ச்சியை ஏற்படுத்தவே இந்த பாட்டி வைத்தியம் என்ற பகுதியை தினமும் ஓரு வைத்திய முறையினை எழுத உள்ளேன்.

பாட்டி வைத்தியம் என்பது, ஆயுர்வேத, சித்த,ஔவைதிக முறையே, ஹோயேவதியே, ஆலேபதி முறையோ அன்று. இது நாம் அன்றாடம் உணவக்காக வீட்டில் பயன்படுத்தும் உணவுப்பொருட்களைக் கொண்டே பயன் படுத்தும் வைத்திய முறையே ஆகும். இதில் உள்ள பொருட்கள் சில நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள் கூட்டியே அல்லது குறைத்தோ, அல்லது நீக்கியோ, அல்லது சில பக்குவ முறைகளைக் கையாண்டோ பயன்படுத்தும் முறையாகும். உதாரணமாக உப்பு , நல்லெண்ணெய் போன்றவை நாம் பயன்படுத்தினாலும், சில வைத்தியத்திற்காக இதனை குறைத்தோ, அல்லது நீக்கியோ பயன்படுத்த வேண்டியிரு்க்கும்.பாட்டி வைத்திய முறையில் நாம் காணும் வைத்தியப் பொருட்கள் யாவும் நாம் உண்ணும் உணவிறக்கு பயன்படுத்தும், மசாவகைப் பொருட்கள் ( சுக்கு, மிளகு, திப்பிலி, வெந்தயம், மல்லி, சில எண்ணெய் வகைகள், மற்றும் காய்கனிப் பொருட்கள் தான் இந்த வைத்தியத்திற்கு மூலப்பொருளாகும். இதனை கூட்டியோ, குறைத்தோ பக்குவப்படுத்தியோ செய்யும் முறைதான் இந்த வைத்தியம். இந்த வைத்தியத்தால் நோய் முற்றிய ஆபரேசன் செய்துதான் ஆகவேண்டும் என்ற நோக்கில் உள்ளவற்றிற்கு உடனடியாக பயன் அளிக்காது என்றாலும், நம் உடலின் நோய் வராதிருக்கவும், சில சிறிய அறிகுறிகள் தென்பட்ட உடனே இவ்வைத்தியம் நல்ல பலன் கொடுக்கும் என்பதை உணர்ந்து கையாண்டால் நல் பலன் கிடைக்கும். இதனையே பாஸ்கரர் என்பவர் நாம் உண்ணும் உணவே மருந்து என்று வைத்தியம் செய்து வருவதை பலர் அறிந்திருக்கலாம், அவர் வைத்திய முறைகளில் அறுசுவை உணவே மருந்து என்றும், தண்ணீரும் மருந்து என்றும் நாம் உண்ணும் பழக்க வழக்கங்கலே வைத்திய முறை என்பார். அருசுவை உணவில் இனிப்பு ( சக்கரையே அதில் பிரதான மருந்து என்றும்,சக்கரை இல்லையெனில் நம் உடம்பு உடம்பாகாது என்றும், மற்ற, புளிப்பு, காரம், துவர்ப்பு,கசப்பு என்ற ருசியைத்தரும் உணவுப்பொருட்களே அவர்கூறும் மருந்துப் பொருட்கள் எனவே பாட்டி வைத்தியமும் இந்த உணவு பொருட்களே மருந்தாகக் கொண்டு பயன்படுத்தப் படும் முறையே பாட்டி வைத்தியமாகும். இதில் எளியபல நல்ல வைத்தியங்கள் மறந்து மங்கி வருகின்றன. இதனை புதுப்பிக்கவே இம் எளிய முறைகளைக் கையாண்டு நாமும் இன்புற்று நோய்நோடியின்றி இன்புற வாழ்வோம். பாடடி வைத்திய முறைகளைக் காண்போம்.

வெந்தயத்தின் மருத்துவ குணங்கள்!

உணவில் அன்றாடம் நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்று வெந்தயம். உணவுக்கு ருசியைக் கொடுப்பதோடு, அதில் உள்ள பல்வேறு மருத்துவக் குணங்கள் நம்மை நாேய்களில் இருந்தும் பாதுகாக்கிறது.எண்ணற்ற மருத்துவ குணங்களைக கொண்டுள்ள ெவந்தயத்தின் சிறப்புகைளயும், வெந்தயத்தால் குணமாகும் நோய்கைளயும் பார்ப்போம்.இரவில் தூங்குவதற்கு முன் ஒரு சிட்டிகை அளவு சுத்தமான ெவந்தயத்தை எடுத்து, 200 மி.லி. அளவு தண்ணரில் போட்டு  மூடி வைத்து விடவும். காலையில் எழுந்ததும் வாய் ெகாப்பளித்த பின் தண்ணரில் ஊறிய ெவந்தயத்தை சாப்பிடுங்கள். பின் வெந்தயத்தண்ணீரை  குடியுங்கள். தேவைப்பட்டால் கூடுதலாக குளிர்ந்த நீரினையும் குடிக்கலாம். வாரம் ஒருமுைற இதுேபான்ற ெவந்தயத் தண்ணீர் குடித்து வர, உடல் சூடு, மலச்சிக்கல் என எந்த நோயும் உங்களை
அண்டவே  அண்டாது.தவிர, உடலை வனப்புடன் வைப்பதில் ெவந்தயத்தின் பங்கு அலாதியானது எனலாம். ஒருதேக்க்கரண்டியளவு
ெவந்தயத்தை எடுத்துக் கொண்டு, வாணலியில் பாேட்டு வறுத்து, ஆற வைத்த பின் மிக்ஸியில் பாெடி செய்து கொள்ளுங்கள். ெவந்தயப் பாெடியை ஆறிய பின் பாட்டிலில் ேபாட்டு தேவைப்படும் ேபாது தண்ணரிேலா மாேரிலோ கலந்து பயன்படுத்தலாம். வெந்தயத்துடன், சிறிதளவு பெருங்காயத்தையும் ேபாட்டு வறுத்து ெபாடி செய்த பின் ஒரு டம்ளர் வெந்நீரிேலா அல்லது மோரலோ ேபாட்டு பருகி வர வயிற்றுக் கோளாறுகள், அஜரணம்போன்றவை ஏற்படாது. மேலும் சர்க்கைரநோய் உள்ளவர்கள் தினமும் இந்த ெபாடிைய தண்ணீர்.மோரில்  கலந்து குடித்தால் சர்க்கைர ேநாய்
கட்டுபாட்டில் இருக்கும். வெறும் வயிற்றில் இதனைக் குடிக்கவேண்டும்.

ெவந்தயத்தை நன்றாக வறுத்து பொடி செய்து காபி பொடியுடன் கலந்து காபி போட்டு குடித்தால், சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்கைரயின் அளவு கட்டுக்குள் இருக்கும்.வயிற்றுப்ேபாக்கு ஏற்படும் பட்சத்தில், வெந்தயம் - பெருங்காயப் பொடியை ஒருமணி ேநரத்திற்கு ஒருமுறை  என 3 முறை  குடிக்க வயிற்றுபோக்கு கட்டுப்படுத்தப்படும். மூட்டுவலிக்கு ெவந்தயத் தண்ணீர் மிகவும் அருமருந்தாகும். சர்க்கைர ேநாய் இல்லாதவர்கள் மூட்டு வலி ஏற்பட்டால்,வெந்தயப் பொடியை சிறிது வெல்ல கட்டியுடன் கலந்து சிறு உருண்டையாக்கி தினமும் 3 முறை சாப்பிட மூட்டு வலி குறையும்.
எந்த வகை ஊறுகாயாக இருந்தாலும்,வெந்தயம் பொடியையும் ெபருங்காயப்  பாெடியையும்  சேர்க்க, சுவை கூடுவதுடன், உடல் உபாதைகளயும் போக்கும்.

தொகுப்பு . வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக