வியாழன், 2 அக்டோபர், 2014

விஜயதசமி நல்வாழ்த்துக்கள்


முகநூல் அன்பர்களுக்கு இன்றைய விஜயதசமி நல்வாழ்த்துக்கள் தங்களின் அன்றாட பணிகள் யாவும் வெற்றியடைய எங்களது வாழ்த்துக்கள் இன்றைய விஜயதசமி நன்னாளில் சில அர்த்தமுள்ள நம்பிக்கை சம்பிரதாயங்கள் இன்றைய நன்னாளில் மூன்று சக்திகளின் நாமங்களினால் சில சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லா இந்துக்களாலும் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக சரஸ்வதியின் நிமித்தமாக கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்னாளில் பள்ளி செல்லும் வயதுடைய குழந்ைதகளையும் சிறு குழந்தைகளுக்கும் தானியத்தில் ஓம்என்ற மந்திரம் எழுதி எழுதிக்கற்றுக் கொடுக் கிறார்கள், இளையர்கள் யாவரும் உபகல்வியான வற்றை தேர்வு செய்து தொழில் நட்பங்கள் பயில அரங்கேற்றலாம். மற்றும் பயிற்சி வகுப்பிலும் கலந்த கொள்ளலாம். லட்சமியின் நிமித்தமாக; வியாபார புதுக்கணக்குகள் ஆரம்பித்தல் , புதிய தொழிகள் ஆரம்பம் செய்ய உகந்த நாள். புதிய பணிகளில் சேர்வோர்களும் இந்நாளில் சேர்ந்து செல்வ வளத்தை பெருக்கலாம், மூன்றாவதாக சக்தியின் நிமித்தமாக வீரம் செறிந்த செயல்கள் தற்காப்பு பயிற்சிகள் பாதுகாப்பு பணிகள் அரங்கேற்றலாம், முன்பு அரச பரம்பரையில் உள்ள இளைஞர்களை சிலம்பாட்டம் வாள்பயிற்சி இன்னாளில் தான் பயிற்சி தொடங்கி நாட்டை காக்க போர்வீரர்களை தேர்வு செய்துள்ளனர், இவ்வாறு மூன்று சக்திகளின் பயனாக நன்னாளில் எல்லா வெற்றிகளையும் பெற்று சிறப்புடன்வாழ வாத்துகிறோம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக