இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள்
மதச்சின்னங்கள்
மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது.
இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம்
விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி,
கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை
முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும்
அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு,
பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன.
தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம்
நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது.
1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம்
2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும்
3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும்.
இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர்,
ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா்.
இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார்.
அவை ;
1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு
2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம்
3.அனுசூயை / பொறாமையற்ற குணம்
4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம்
5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு
6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம்
7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம்
8.அப்பிரஹா / ஆசையற்ற குணம்
இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
சனி, 28 நவம்பர், 2015
இந்துமத தத்துவங்கள் பற்றி வேதங்களில் கூறிய விதிகள், சாஸ்திரங்கள் கூறும் யுத்திகள் பற்றி காஞ்சி பெருயவர் கூறிய யுத்திகள்
மதச்சின்னங்கள்
மானிட வாழ்விற்கான அவசியங்கள் மற்றும் முக்கியத்துவம் பற்றியும், காலப்போக்கில் அதன் வளர்ச்சி்க்கு ஏற்ற மாற்றம் ஏற்பட்டாலும், அச்சின்னங்களால் ஏற்படும் முக்கியத்துவம் அவசியமாகிறது.
இந்து சைவ மதத்தின் அடையாளங்களாவன; நெற்றில் விபூதி, கழுத்தில் ருத்திராட்சம், சடாமுடி, திருஐந்தெழுத்து நாமம்
விஷ்ணு மதத்திற்கு நெற்றியில் திருமஞ்சன நாமம், துளசி மாலை, வேதங்கள் பயின்றதன் பொருள் உணர்த்தும் தலைகுடுமி,
கிருஸ்துவ மதத்தினர், சிலுவை மாலை
முஸ்லீம் மதத்தினர் முகத்தில் காணும் குறும்தாடியும் தலைப்பாகையும்
அவரகள் அணியும் சமய அடையாளங்களினால் அவரவர்கள் தன் மதத்தின் மேல் கொண்ட மதிப்பும் மரியாதையும் கிடைக்கும் என்பதில் அதன் சின்னங்களே விளக்கும், வைதிகம் மனம் சார்ந்ததா? உடை சார்ந்ததா? என்பதல்ல, அதன் பயன்கள் தரும் நன்மைகளே நமக்கு பாதுகாப்பு,
பெண்கள் அணியும் குங்கும் அவரகளுக்கான மங்கள தத்துவத்தையும், சுமங்கலி என்ற அடையாளத்தையும் நமக்கு காட்டுகின்றன. அவை ஆன்மீக தத்துவத்தை விளக்கினாலும், கெட்ட செயல்கள், துர்ஆவிகள் சம்பந்தமான தீய செயல்களிலிருந்து அவரகளை காப்பாற்றும் சக்தியையும் அளிக்க வல்லன.
தற்கால கட்டத்தில் பள்ளிகளுக்கு சீருடையும், காவல்துறை மற்றும் அந்தந்த துறைகளுக்கான அடையாள சீருடைகளும் மற்ற அடையாளங்களும் அதன் முக்கியத்துவத்தை விள்க்குவதை நாம் அனுதினமும் காணலாம்
நம் ஆத்மா மூன்ற லோகங்களை அடையும் வல்லமை பெற்றது.
1. பூலோகம் / தற்போது நாம் வாழும் லோகம்
2, தேவலோகம்/ இது சொர்க்கலோகம், வைகுண்டலோகம், சிவலோகம், எமலோகம், என்ற புண்ணியலோகமாகும்
3. நரகலோகம்/ இது நாம் பூலோகத்தில் நாம் பண்ணிய பாவ கர்மங்களால் நமக்கு கிடைக்கும் தண்டனை லோகமாகும்.
இந்த மூன்று லோகங்களிலும் சிறந்தது நாம் வாழு்ம் இந்த பூலோகமே என்கிறார் பெரியவர்,
ஏனெனின், இங்கு தான் நாம் நல்லதோ அல்லது கெட்டதோ அவரவர் இஸ்டத்திற்கு செயல்பட வாய்ப்பு உள்ளது இங்கு நாம் செய்யும் பாவ புண்ணிய ெசயல்களுக்கு தக்க நமக்கு மற்ற இரு லோகங்களும் கிடைக்கும், மேலும் நம் ஆன்மிக அருளாளர்கள் இவ் லோகத்தில் மீண்டும்மீண்டும் பிறவா நிலையும் வேண்டும் என்கிறார்கள், அவ்வாறு பிறந்தால் இறைவரை மறவா நிலை வேண்டும் என்றனா்.
இவ் பூலோக வாழ்வில் மானிட பிறவி, மாயையிலிருந்து விடுபட, இனியும் பிறவா நிலை பெற, பூலோக வாழ்வில் ஈ்டேற ஆத்மாவிற்கு எட்டு குணங்கள் வேண்டும் என்கிறார்.
அவை ;
1. தயை / ஈகை. என்ற பிறஉயிர்களிடத்தில் காட்டும்அன்பு
2.சாந்தி / அமைதி என்ற ஆரவாரம் அற்ற குணம்
3.அனுசூயை / பொறாமையற்ற குணம்
4.செளதம் / சுத்தம் புறஉடல் சுத்தம் அக சுத்தம்
5.மங்களம் / அமங்கலமற்ற, நல்ல செயல், பேச்சு
6.அனாயகம் / எதிலும் பதட்டமற்ற குணம்
7.அகார்ப்பம் / தாராள குணம், கஞ்சத்தனமற்ற குணம்
8.அப்பிரஹா / ஆசையற்ற குணம்
இவ் பூலோக வாழ்வில் நம் ஆத்மாவிற்கு மேற்கண்ட எட்டு குணங்கள் கொண்டு வாழ்ந்து வந்தால் இனி இந்த லோகத்தில் பிறவா நிலையும் தேவலோகம் அடையலாம் என்கிறார்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
புதன், 25 நவம்பர், 2015
வெள்ளி, 20 நவம்பர், 2015
Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை
Aanmigam: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை: சித்தர்கள் வழிபட்ட வாலாம்பிகை தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து திசையன்விளை செல்லும் சாலையில் உள்ளது கொம்மடிக்கோட்டை என்ற ஊர்....
Aanmigam: அகத்தியரை “நாடியில்” …
Aanmigam: அகத்தியரை “நாடியில்” …: அகத்தியரை “நாடியில்” … வணக்கம் அகத்தியர் அடியவர்களே! எத்தனையோ எதிர்பார்ப்புடன் அகத்தியரை “நாடியில்” நாடி அருள்வாக்கு கேட்கிற மனிதர்கள் ...
குழந்தை பாக்கியம், கணவன் மனைவி இடையே அன்யோன்யம் பெருக ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம்,
தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது
தித்திக்கும் தேவாரம் அப்பர்பெருமானார் பாடியது
திருக்கன்றாப்பூர் பதிகம் 61, பாடல் 2
சிவனாடியார் வேடம் தரித்தவர்கள் யாவரும் சிவனாகவே பாவித்து அவர்களை உபசரித்து வழிபாடும் அடியார்கள் நினைவை விட்டு நீங்கான் இறைவன் என்கிறார், அடியார்களையும், தம்மையும் வெவ்வேறாக காணக்கூடாது. இருவரும் ஒருவரே என்பதைக் கொளல் வேண்டும் என்கிறார்.
விடிவதுமே வெண்ணீற்றை மெய்யிற் பூசி
வெளுத்தமைந்த கீளொடுகோ வணமுந் தற்றுச்
செடியுடைய வல்வினைநோய் தீர்ப்பாய் என்றுஞ்
செல்கதிக்கு வழிகாட்டுஞ் சிவனே யென்றுந்
துடியனைய இடைமடவாள் பங்கா வென்றுஞ்
சுடலைதனில் நடமாடுஞ் சோதீ யென்றுங்
கடிமலர்தூய்த் தொழுமடியார்நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.
பொழிப்புரை:
பொழுது விடிந்த அளவில் திருநீற்றை மெய்யில் பூசி, வெளுத்த கீளொடு கூடிய கோவணத்தை அணிந்து, கீழ்மையை உடைய வல்வினையால் ஏற்பட்ட நோயினைத் தீர்ப்பவனே! சென்று சேர வேண்டிய நல்லகதிக்கு வழிகாட்டும் சிவனே! உடுக்கை போன்ற இடையை உடைய பார்வதி பாகனே! சுடுகாட்டில் கூத்து நிகழ்த்தும் ஒளி உருவனே! என்று நறுமண மலர்களைத் தூவி வழிபடும் அடியவர்கள் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
எவரேனுந் தாமாக விலாடத் திட்ட
திருநீறுஞ் சாதனமுங் கண்டா லுள்கி
உவராதே யவரவரைக் கண்ட போதே
உகந்தடிமைத் திறம்நினைந்தங் குவந்து நோக்கி
இவர்தேவர் அவர்தேவ ரென்று சொல்லி
இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக்
கவராதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே
.யாவரேயாயினும் நெற்றியில் திருநீறு அணிந்து, உருத்திராக்கம் பூண்டு இருப்பவரைக் கண்டால், தலைவனது அடையாளப் பொறியை (முத்திரையை)க் கண்டவுடன், அதனைப் பணிந்தேற்றல் அல்லது, அதனைக் கொணர்ந்தாரது குணங்குற்றம் நோக்கலாமையை உணர்ந்து. திருவேடத்தின் பெருமையை நினைத்து, வெறுப்பில்லாமல், அவர்களைக் கண்ட போதே விரும்பி அடிமைத் திறத்தை நினைத்து, விரும்பிநோக்கி `இவர்கள் நம்மால் வழிபடத்தக்க தேவரா என உள்ளத்தை இருவகையாகச் செலுத்தாமல் இறைவனிடத்துச் செய்யும் செயல்களையே அடியவரிடத்தும் விரும்பிச் செய்து, அங்ஙனம் செய்யும்பொழுது மனத்தில் இருதிறக் கருத்து நிகழாத வகையில் இறைவனையும் அடியவரையும் ஒரே நிலையில் மனத்துக்கொண்டு தொழும், அடியவர் உள்ளத்தில் கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
`திருவேடமுடையாரைத் தொழும் அடியார் நெஞ்சினுள் சிவ பிரானைக் காணலாம்` என்றதனால் அப்பெருமான் அத்திருவேடமே தானாய் நின்று அருளுவன் என்பது இனிது விளங்கும்.
இலங்காலஞ் செல்லாநா ளென்று நெஞ்சத்
திடையாதே யாவர்க்கும் பிச்சை யிட்டு
விலங்காதே நெறிநின்றங் கறிவே மிக்கு
மெய்யன்பு புகப்பெய்து பொய்யை நீக்கித்
துலங்காமெய் வானவரைக் காத்து நஞ்சம்
உண்டபிரா னடியிணைக்கே சித்தம் வைத்துக்
கலங்காதே தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
யாம் பொருள் இல்லாதேம் இக்காலம் நம்மால் ஒன்றும் இயலாத காலம்` என்று மனத்தில் தளர்ச்சியுறாமல், பிச்சை ஏற்கவருவோர் எல்லோருக்கும் பிச்சையிட்டு, நல்லவழியில் பிறழாமல் நின்று, இறைவன் பெருங்கருணையாளன் ஆதலை அறியும் அறிவு மிக்கு, பயன் கருதாமல் செய்யும் அன்பை மேற்கொண்டு, பொய்யை விடுத்து, மெய்யுணர்வு விளங்கப் பெறாத தேவர்களைக் காக்க விடம் உண்ட பெருமான் திருவடிக்கண் மனத்தை வைத்துக் கலக்கம் இன்றித் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
விருத்தனே வேலைவிட முண்ட கண்டா
விரிசடைமேல் வெண்டிங்கள் விளங்கச் சூடும்
ஒருத்தனே உமைகணவா உலக மூர்த்தீ
நுந்தாத வொண்சுடரே அடியார் தங்கள்
பொருத்தனே யென்றென்று புலம்பி நாளும்
புலனைந்தும் அகத்தடக்கிப் புலம்பி நோக்கிக்
கருத்தினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
மூத்தோனே! விடம் உண்ட நீலகண்டா! சந்திர சடாதரனே! உமைபாகனே! உலகத்தை வடிவாக உடையவனே! தூண்டவேண்டாத ஒளிவிளக்கே! அடியவர்கள் உறவினனே! என்று பலகாலம் கூப்பிட்டு, ஐம்புலன்களையும் உள்ளே அடக்கி, வேற்றுப் பற்றின்றித் தியானித்து, உள்ளத்தோடு தொழும் அடியவர் உள்ளத்துள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
பொசியினால் மிடைந்துபுழுப் பொதிந்த போர்வைப்
பொல்லாத புலாலுடம்பை நிலாசு மென்று
பசியினால் மீதூரப் பட்டே யீட்டிப்
பலர்க்குதவ லதுவொழிந்து பவள வாயார்
வசியினா லகப்பட்டு வீழா முன்னம்
வானவர்கோன் திருநாமம் அஞ்சுஞ் சொல்லிக்
கசிவினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
செந்நீர் வெண்ணீர் நிணம் முதலியவற்றின் கசிவோடு இணைக்கப்பட்டுப் புழுக்களை உள்ளே வைத்துத் தோலால் மூடப்பட்ட இழிந்த இந்தப் புலால் மயமான உடம்பு நிலையாக இருக்கும் என்று உறுதியாக எண்ணிப் பசிப் பிணியையும் பொறுத்துக் கொண்டு பொருளைச் சம்பாதித்து, அப்பொருளால் ஏழைகள் பலருக்கும் உதவுதலைவிடுத்து, பவளம்போன்ற வாயினை உடைய பெண்களிடம் வசப்பட்டு அழிவதன் முன்னம் தேவாதி தேவனுடைய திருநாமமாகிய திருவைந்தெழுத்தைச் சொல்லி உருக்கத்தோடு தொழும் அடியவருடைய நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
ஐயினால் மிடறடைப்புண் டாக்கை விட்டு
ஆவியார் போவதுமே அகத்தார் கூடி
மையினாற் கண்ணெழுதி மாலை சூட்டி
மயானத்தி லிடுவதன்முன் மதியஞ் சூடும்
ஐயனார்க் காளாகி அன்பு மிக்கு
அகங்குழைந்து மெய்யரும்பி அடிகள் பாதங்
கையினால் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
கோழையினால் குரல்வளை அடைக்கப்பட்டு, உடம்பைவிட்டு உயிர்போன அளவிலேயே, வீட்டிலுள்ளவர்கள் ஒன்று சேர்ந்து, கண்களை மையினால் எழுதி, மாலை சூட்டிப் பிணத்தைச் சுடுகாட்டில் இடுவதன் முன்பு, பிறைசூடும் பெருமானுக்கு அடியவராகி, அன்புமிக்கு மனம் குழைந்து மெய் மயிர் சிலிர்த்து, எம்பெருமான் திருவடிகளைக் கைகளால் தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே.
திருதிமையால் ஐவரையுங் காவ லேவித்
திகையாதே சிவாயநம வென்னுஞ் சிந்தைச்
சுருதிதனைத் துயக்கறுத்துத் துன்ப வெள்ளக்
கடல்நீந்திக் கரையேறுங் கருத்தே மிக்குப்
பரிதிதனைப் பற்பறித்த பாவ நாசா
பரஞ்சுடரே யென்றென்று பரவி நாளுங்
கருதிமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
மன உறுதியால் ஐம்பொறிகளையும் காவலில் வைத்து மனம் கலங்காமல், சூக்கும ஐந்தெழுத்தாகிய மானதமாகக் கணிக்கப்படும் மந்திரத்தைத் தியானித்தலால் மயக்கத்தைப் போக்கித் துன்பமாகிய வெள்ளம் நிறைந்த வாழ்க்கையாகிய கடலைக் கடந்து, முத்திநிலையாகிய கரைக்கு ஏறும் எண்ணமே மிக்கு, `சூரியன் ஒருவனுடைய பற்களை நீக்கிய பாவநாசனே! மேம்பட்ட ஒளியே! என்று துதித்து, நாள்தோறும் விரும்பி மிகத்தொழும் அடியவர் உள்ளத்தினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
குனிந்தசிலை யாற்புரமூன் றெரித்தாய் என்றுங்
கூற்றுதைத்த குரைகழற்சே வடியாய் என்றுந்
தனஞ்சயற்குப் பாசுபத மீந்தாய் என்றுந்
தசக்கிரிவன் மலையெடுக்க விரலால் ஊன்றி
முனிந்தவன்தன் சிரம்பத்துந் தாளுந் தோளும்
முரணழித்திட்டருள்கொடுத்த மூர்த்தீயென்றுங்
கனிந்துமிகத் தொழுமடியார் நெஞ்சி னுள்ளே
கன்றாப்பூர் நடுதறியைக் காண லாமே.
பொழிப்புரை :
வளைந்த வில்லால் முப்புரங்களை எரித்தவனே! யமனை உதைத்த, ஒலிக்கும் கழல் அணிந்த சிவந்த அடியனே! அருச்சுனனுக்குப் பாசுபதப்படை ஈந்தவனே! இராவணன் மலையைப் பெயர்க்க. வெகுண்டு, விரலை ஊன்றி, அவன் பத்துத் தலைகளும் தாள்களும் தோள்களும் வலிமை அழியச் செய்து, பின், அவனுக்கு அருள் செய்த பெருமானே! என்று உருகி மிகத் தொழும் அடியவர் நெஞ்சினுள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாம்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை
வியாழன், 19 நவம்பர், 2015
திருமுறைகள் கூறும் அதிஅற்புத தெய்வீக ஆற்றல்
Spirituality & Divinity: ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் சிவன்
Spirituality & Divinity: ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சயன கோலத்தில் சிவன்: சயனத்தில் பெருமாளைத் தரிசித்திருப்பீர்கள். அதிசயமாக, ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் இருக்கிறார். ...
தினமும் ஒரு திருவாசகம் / மாணிக்கவாசகர் அருளியது
திருப்பள்ளி எழுச்சி
பள்ளி என்ற சொல்லின் பொருள், படுக்கை என்பது. துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை.
இந்தப் பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன.
இவை திருப்பெருந்துறையில் அருளப்பட்டவை.
129
பாடலின்பம்
போற்றி என் வாழ்முதல்ஆகிய பொருளே,
புலர்ந்தது, பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் மலரும்
எழில்நகை கண்டுநின் திருவடி தொழுகோம்,
சேற்றுஇதழ்க் கமலங்கள் மலரும் தண்வயல்சூழ்
திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,
ஏற்றுஉயர் கொடிஉடையாய், எமைஉடையாய்,
எம்பெருமான், பள்ளி எழுந்தருளாயே.
*
அருணன் இந்திரன் திசை அணுகினன், இருள்போய்
அகன்றது, உதயம் நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழஎழ, நயனக்
கடிமலர் மலர, மற்று அண்ணல் அம்கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன, இவைஓர்
திருப்பெருந்துறைஉறை சிவபெருமானே,
அருள்நிதி தரவரும் ஆனந்த மலையே,
அலைகடலே, பள்ளி எழுந்தருளாயே.
பொருளின்பம்
என் வாழ்வில் அனைத்துக்கும் தொடக்கமாகத் திகழும் சிவபெருமானே, உன்னைப் போற்றுகிறேன்,
பொழுது புலர்ந்துவிட்டது, உன்னுடைய பூப்போன்ற திருவடிகளில் மலர்களைத் தூவி வணங்குகிறோம், உன்னுடைய திருமுகத்தில் எங்களுக்காக மலரும் அழகிய புன்னகையைக் கண்டு உன்னுடைய திருவடியைத் தொழுகிறோம்,
சேற்றில் தாமரைகள் மலர்கின்ற குளிர்ச்சியான வயல்கள் சூழ்ந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, இடபக்கொடியை உடையவனே, எங்களை அடிமையாகக் கொண்டவனே, எம்பெருமானே, பள்ளிஎழுந்தருள்வாய்!
*
இந்திரனுக்கு உரிய கிழக்குத் திசையில் சூரியன் தோன்றினான், இருள் விலகியது,
எம்பெருமானே, சூரியன் மேலே எழ எழ, உலகில் வெளிச்சம் பரவுகிறது, உனது மலர்த் திருமுகத்தில் தோன்றும் கருணையைப்போல, அது எங்களை வாழவைக்கிறது,
ஒருபக்கம் உன்னுடைய கண்களைப் போன்ற மலர்கள் நறுமணத்துடன் மலர்கின்றன, இன்னொருபக்கம் உன்னுடைய கண்களைப்போன்ற வண்டுகள் கூட்டமாகத் திரண்டு வந்து ஓசையிடுகின்றன
இத்தகைய திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமானே, அருள்நிதியைத் தருவதற்காக வரும் ஆனந்த மலையே, அலைகடலே, பள்ளிஎழுந்தருள்வாய்!
தினம் ஒரு தேவாரம் / அப்பர் பிரான் பாடியது
ஈன்றாளுமாய் எனக்கு - பாடல் 1
பின்னணி
சமணர்களின் சூழ்ச்சியால் கல்லுடன் கட்டப்பட்டு, கடலில் தள்ளிவிடப்பட்ட அப்பர் பிரான், சொற்றுணை வேதியன் என்ற திருப்பதிகத்தைப் பாடிய நிலையில் இருந்ததும், நமச்சிவாயப் பதிகம் என்று அழைக்கப்படும் இந்த பதிகத்தின் பாடல்களையும், சிந்தித்த வண்ணம், தினம் ஒரு தேவாரம் என்ற பகுதியை தொடங்கினோம். சிவபிரானின் அருளால், அவருடன் பிணைத்துக் கட்டப்பட்ட கருங்கல் கடலில் மூழ்காது தெப்பமாக மாற, கடலில் மிதந்து சென்ற அப்பர் பிரான், கடலூருக்கு அருகில் கரையேறவிட்ட குப்பம் என்ற இடத்திற்கு வந்து சேர்கின்றார். இப்போது இந்த இடத்தில் கடல் நெடுந்தூரம் பின்வாங்கி உள்ளது. கடலூர் நகரம் அந்நாளில் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை கூறும் சேக்கிழார் பெருமானார், கருங்கல் சிவிகையாக (பல்லக்கு) மாறியது என்று குறிப்பிடுகின்றார். பாங்கர் என்றால் அருகில் என்று பொருள்.
வாய்ந்த சீர் வருணனே வாக்கின் மன்னரைச்
சேர்ந்தடை கருங்கல்லே சிவிகை ஆயிட
ஏந்தியே கொண்டு எழுந்தருளிவித்தனன்
பூந்திருப்பாதிரிப் புலியூர் பாங்கரில்.
கடலில் மிதந்து வந்த அப்பர் பிரானைக் கண்ட தொண்டர் கூட்டம், மிகுந்த ஆரவாரத்துடன் அர அர என்ற கோஷத்துடன் வரவேற்றது. தொண்டர்கள் மகிழ்ச்சியால் எழுப்பிய பேரொலி நடந்த அதிசயத்தை மற்றவர்களுக்கும் உணர்த்தியது. இந்த அதிசயம் அப்பர் பிரானின் வாழ்வில், அவரது உயிரினைப் காப்பாற்றுவதற்காக இறைவன் நிகழ்த்திய நான்காவது அதிசயமாகும். நீற்றறை குளிர்ச்சி அளித்தது, ஊட்டப்பட்ட நஞ்சு அமுதமாக மாறியது, தலையை இடற வந்த யானை, வலம் வந்து வணங்கியது ஆகிய மூன்று அதிசயங்களின் விவரங்களை, நாம் இந்த தொகுப்பினில் ஏற்கனவே அனுபவித்தோம். கடலில் மிதந்து வந்து கரையேறிய இந்த சம்பவம் இன்றும் ஒவ்வொரு வருடமும் விழாவாக கொண்டாடப்படுகின்றது. கரையேறிய அப்பர் பெருமான், சிவபெருமானின் கருணையை நினைந்து, தன்னை வரவேற்றத் தொண்டர்களுடன் அருகிலிருந்த திருக்கோயில் சென்று சிவபிரானை வணங்கி எழுந்தபோது அருளிய பதிகம் தான் இந்தப் பதிகம். இந்த நிகழ்ச்சியை குறிப்பிடும் பெரிய புராண பாடல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தொழுந்தகை = யாவராலும் தொழத்தக்க; கொழுந்து = இளைமையான
தொழுந்தகை நாவினுக்கரசும் தொண்டர் முன்
செழும் திருப்பாதிரிப் புலியூர் திங்கள் வெண்
கொழுந்தணி சடையரைக் கும்பிட்டு அன்புற
விழுந்து அருள் நெறி விளங்கப் பாடுவார்
பாடல் 1
ஈன்றாளுமாய் எனக்கு எந்தையுமாய் உடன் தோன்றினராய்
மூன்றாய் உலகம் படைத்து உகந்தான் மனத்துள் இருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன் திருப்பாதிரிப்புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன் அடியோங்களுக்கே
விளக்கம்
ஏன்றுதல் = தாங்கிக்கொள்ளுதல்.
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் என்ற மொழியினுக்கு ஏற்ப ஈன்றாள் என்று தாயினை முன்னே சொல்லி பின்னர் தந்தையை குறிப்பிடுகின்றார். கூற்றுவனே நேரில் வந்து வருத்துவதைப்போல் தன்னை வருத்திய சூலை நோயினைத் தான் போக்கிக்கொள்ளத் தெரியாமல் தவித்தபோது, தனக்கு நல்ல வழி காட்டிய தமக்கையார் திலகவதியார், தனக்கு மறுபிறவி அளித்தது போல் உதவி செய்தார் என்பதை உணர்ந்ததால், அப்பர் பிரான் தனது தமக்கையாரையும் இங்கே உடன் தோன்றினராய் என்று குறிப்பிடுகின்றார். தாய், தந்தை, தமக்கை இவர்கள் மூவரும் அவருக்கு கண் முன்னே தோன்றி பலவகையிலும் அவரை நன்னெறிப் படுத்தியவர்கள். ஆனால் சிவபிரான் தானே உண்மையாக அனைவருக்கும் துனையாக இருந்து உதவுகின்றான். மேலும் நாயானாரின் வாழ்க்கையில், சமணர்களின் சூழ்ச்சிகளிலிருந்து தப்பியதற்கு சிவபிரானின் கருணை தானே காரணம். எனவே, தனக்கு முன்னே தோன்றாவிட்டாலும், தனக்கு பல வகையிலும் உதவி செய்த துணைவனை தோன்றாத் துணைவன் என்று இங்கே குறிப்பிடுகின்றார். தோன்றாத் துணை நாதன் என்பது இங்குள்ள இறைவனின் பெயர்.
திருவாரூர் தலத்தின் மீது அருளிய ஒரு பதிகத்தில் (5.07), தனக்குத் தமக்கையாரைத் தந்து அருளியவன் என்று சிவபிரானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார். தாய் தந்தையரை இழந்து தவித்த சமயத்தில், தன்னக்கு இனிமேல் அம்மை யார் என்று கலங்கி நின்ற நிலையில் அம்மையாராகிய திலகவதியைத் தந்து அருளினார் என்று நயமாக கூறுகின்றார். இந்த பாடல் கொக்கரை குழல் வீணை என்று தொடங்கும் பதிகத்தில் காணப்படுகின்றது. ஒரு தாய் தனது குழந்தையைக் காப்பாற்றுவது போல், திலகவதியார் அப்பர் பெருமானை காப்பாற்றினார் என்று இதன் மூலம் உணர்த்தப்படுகின்றது.
எம்மையார் இல்லை யானும் உளேன் அலன்
எம்மை யாரும் இது செய வல்லரே
அம்மை யார் எனக்கு என்று அரற்றினேனுக்கு
அம்மையாரைத் தந்தார் ஆரூர் ஐயரே
இறைவனை தனது தந்தை தாய் என்று பல அருளாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். தனது தமக்கையார் தனக்கு செய்த உதவியினை நினைத்து சிவபிரானைத் தனது சகோதரியாகவும் அப்பர் பிரான் காண்கின்றார். துறவுநிலை பூண்டதால் சுற்றம் ஏதும் இல்லாத அப்பர் பிரான், சிவபிரானையே தனக்கு அனைத்துச் சுற்றங்களாக காண்பதை கீழ்க்கண்ட பாடலில் (6.95.1) நாம் காணலாம். தான் அனுபவிக்கும் போகமாகவும், தன்னை உய்விக்கும் பொருளாகவும், தனக்குத் துணையாகவும், தனது செல்வங்களாகவும் சிவபிரானையே அப்பர் பிரான் காண்கின்றார். துறப்பித்தல் என்றால் உலகச் சுற்றங்களைத் துறக்கச் செய்தல் என்று பொருள்.
அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ ஒரு குலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ துணையாய் என் நெஞ்சத்து துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தும் நீ இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே
மணிவாசகப் பெருமானும் ஒரு திருவாசகப் பாடலில் (பிடித்த பத்து பதிகம் மூன்றாம் பாடல்) சிவபெருமானைத் தனக்கு அம்மை, அப்பன் என்று கூறுவதை கீழ்க்கண்ட பாடலில் நாம் காணலாம்.
அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே
மூன்றாய் உலகம் படைத்து என்ற குறிப்பினுக்கு, கீழ்க்கண்டவாறும் விளக்கம் அளிப்பதுண்டு. பொதுவாக இந்த உலகத்தில் உள்ளவற்றை மூன்று வகைப் பொருட்களாக சைவ சித்தாந்தம் பிரிப்பதை உணர்த்தியதாக கூறுவார்கள். அவன் (இறைவன்), அவள் (அனைத்து உயிர்கள்) அது (உலகும் உலகத்தில் உள்ள பொருட்களும்). இவையே பதி, பசு, பாசம் என்றும் அழைக்கப்படும். உகந்தான் என்று சொல்லப் படுவதற்கு காரணம், உயிர்களை அவை செய்த வினைகளுக்கு ஏற்ப உடலுடன் பொருத்தும் இறைவன், உயிர்கள் தங்களது மலத்தினை நீக்கிக்கொள்ளும் பொருட்டு பல கருவிகளை அளித்திருப்பதால், உயிர்கள் அந்த கருவிகளை பயன்படுத்தி மலநீக்கம் பெற்று தன்னை வந்து அடையும் என்ற ஆசை உள்ளவனாக இறைவன் இருக்கும் நிலைதான்.
இறைவன் உயிர்களை உடலுடன் பொருத்தியதுடன் நிறுத்திக் கொள்வதில்லை. அனைத்து உயிர்களுக்கும் துணையாக உடனும் இருக்கின்றான் என்ற கருத்தினை உட்கொண்டு அடியோங்கள் என்று பன்மையில் குறிப்பிடுகின்றார்,. மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில், ஓராதார் உள்ளத்துள் ஒளிக்கும் ஒளியான் என்று குறிப்பிடுவது போல், (ஓர்தல் = உணர்ந்து ஆழ்ந்து பார்த்தல்) தனது மனத்தில் இறைவன் இருப்பதை அப்பர் பிரான் உணர்ந்தமையால், மனத்துள் இருக்க என்று இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
எனது தாய், தந்தை மற்றும் சகோதரி ஆகிய மூவரையும் எனக்குத் தோன்றும் துணையாக இந்த உலகத்தில் படைத்து உகந்தவரும், எனது மனத்துள் இருப்பவருமாகிய சிவபிரான் என்னைத் தனது அடிமையாக ஏற்றுத் தாங்குகின்றான். தேவர்களுக்கு மிகவும் இனிமையானவனாக இருக்கும் சிவபிரான் தனது அடியார்களுக்குத் தோன்றாத் துணையாக விளங்குகின்றான்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
புதன், 18 நவம்பர், 2015
Sadhananda Swamigal: சும்மா 1 -- எஸ்.ஜெயபாரதி
Sadhananda Swamigal: சும்மா 1 -- எஸ்.ஜெயபாரதி: thank: http://www.visvacomplex.com/summa_1.html சும்மா #1 வித்யாலங்கார சாக்தஸ்ரீ கடாரத் தமிழ்ப் பேரரறிஞர் டாக்டர் எஸ்.ஜெயபாரதி ...
வியாழன், 12 நவம்பர், 2015
ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து
ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து
வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவன் என்று இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பின்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவென்று ஆகமங்கள் பறைசாற்றுகின்றன.
சைவசித்தாந்த ஆகமங்களில், குறிப்பாக சந்திரஞானம், யோகஜம், வீராகமம், வித்தியாபுராணம், வாயுசங்கிதை முதலியனவும், சிவதருமம், சிவதருமோத்தரம் ஆகியனவும் திருவைந்தெழுத்து மந்திரத்தின் பெருமைகளை விரித்துக் கூறுகின்றன. ஏனைய ஆகமங்கள், குறிப்பாக மதங்க்பாரமேசுவரம், மிருகேந்திரம், காமிகம் முதலியன பிராஸாதமந்திரத்தைச் சிறப்பிக்கின்றன. அதிலும் மதங்கபாரமேசுவரம் வியோமவியாபி மந்திரத்தையே தீ¨க்ஷ முதலிய கிரியைகளில் சிறப்பித்துக் கூறுகின்றது.
வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவினன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் இல்லை என்றும் ஆகமங்கள் கூறுகின்றன. ஐந்தெழுத்து மந்திரந்தான் யாது ? அது நகாரம், மகாரம், சிகாரம் வகாரம் யகாரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. இது பெரும்பாலும் மேற்குறித்த ஆகமநூல்களில் காணப்படுவது; ஆயினும் அகாரம், உகாரம் மகாரம் பிந்து நாதம் ஆகியன அடங்கிய ஐந்தெழுத்து மந்திரத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். இதற்கு ஸூக்ஷம பஞ்சாக்ஷரமந்திரமென்று பெயர். சிவஞானபோதம் 9 ம் சூத்திரத்தில் “எண்ணும் அஞ்செழுத்தே” என்னும் சொற்றொடரால் குறிக்கப்படும் ஐந்தெழுத்து நம சிவாய என்னும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும் ஓம் எனப்படும் பிரணவ பஞ்சாக்ஷரத்தையும் ஹௌம் எனப்படும் பிராஸாத பஞ்சாக்ஷரத்தையும் குறிக்கும் என்று சிவாக்கிரயோகிகள் தம்முடைய வடமொழிச் சிவஞானபோதத்தின் லகுடீகை என்னும் சுருக்கமான உரையில் கூறுகின்றார். எனவே பஞ்சாக்ஷர மந்திரம் மூவகையென்று தெளிகிறோம்.
பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள்
ஓ முனிவரே ! மஹாதேவராகிய சிவபெருமானுக்கொப்பான கடவுள் மூவுலகிலும் இல்லை; பஞ்சாக்ஷரத்திற்கொப்பான மந்திரம் இல்லை, இல்லை.
பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது.
இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட அனைத்துப் பாவங்களும் விலகும்:
வித்தியாபுராணம் என்னும் ஆகமம் கூறும் செய்திகள்: பஞ்சாக்ஷரமென்பது நகாரம் மகாரம் சிகாரம் வகாரம் யகாரம் என்னுன் ஐந்தெழுத்துக்களைக் கொண்ட மந்திரம்; இதனுடன் தொடக்கத்தில் ஓம் என்னும் பிரணவத்தைச் சேர்த்தால் ஓம் நம சிவாய என்னும் ஷடக்ஷரமந்திரம். இந்த ஐந்து எழுத்துக்களும் முறையே ஸத்யோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசானம் என்னும் பஞ்ச பிரஹ்மங்களைக் குறிக்கும்; ஐவகைப் பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியனவும் குறிக்கப்பெறும்; மேலும், இவ்வைந்தெழுத்துக்களுக்கும் முறையே பிரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன், ஸதாசிவன் ஆகியோர் அதிதேவர்கள். நகாரம் தங்கநிறமுடையது,; மகாரம் கருநிறமுடையது; சிகாரம் தீயையொத்த நிறமுடையது; வகாரம் கருநீலநிறத்தையும் யகாரம் ஸ்படிகநிறத்தையுமொத்தவை. நகாரம் ருக்வேதத்தையும் மகாரம் யஜுர்வேதத்தையும் சிகாரம் ஸாமவேதத்தையும் வகாரம் அதர்வணவேதத்தையும் யகாரம் இதிஹாஸங்களையும் குறிக்கின்றன.
முடிவில்
எவ்வளவு தடவை ஜபித்தால் மந்திரம் ஸித்தியாகுமோ அத்வரையிலும் எப்பொழுது ஸித்தியாகுமோ அதுவரையிலும் ஒருவன் இம்மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும் என்று இவ்வாகமம் கூறுகிறது.
சிதம்பரரஹஸ்யமென்னும் நூல்
ஆடல்வல்லானான நடராசப் பெருமானின் உடுக்கை (டமரு) உலகத்தின் சிருஷ்டியையும் பெருமானின் அபயஹஸ்தம் பிரபஞ்சம் நிலை பெற்றிருத்தலையும் பெருமான் தாங்கியிருக்கும் அக்னி அழிவையும் ஊன்றிய திருவடி திரோபாவத்தையும் தூக்கிய திருவடி அனுக்கிரஹத்தையும் குறிப்பன என்று மேற்கண்ட சுலோகம் கூறுகிறது. இக்கருத்தை அப்படியே நமக்கு வழங்குகிறார் மனவாசகம்கடந்தார் தம்முடைய உண்மைவிளக்கம் என்னும் நூலின் 36 ம் பாடலில். பாட்டு சைவப்பெருமக்கள் யாவருமறிந்ததே:
தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்றுமலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
சிவதாண்டவமானது மக்களுக்கு எவ்வாறு முத்திப் பேறு அளிக்கிறதென்பதையும் இச்சிதம்பரரஹஸயம் கூறுகிறது:
"மாயை, பாவம் புண்ணியம் முதலிய கருமவினைகள் ஞானத்தை மறைக்கும் ஆணவமலம் ஆகிய மும்மலங்களையும் அறவே நீக்கி தன்னுடைய அபயமென்னும் ஆனந்தக் கரத்தினால் எல்லையில்லா ஆனந்தக்கடலில் அமிழ்த்துவதே நடராசப் பெருமானின் ஆனந்ததாண்டவரஹஸ்யம்". என்பதூ இதன் பொருள்.
இதே கருத்தை நாம் உண்மை விளக்கத்தில் 37-ம் செய்யுளில் மீண்டும் காண்கிறோம்:
மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால்
ஆனந்தவாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான் .
28 மூலாகமங்களுள் ஒன்றான வீராகமம் பஞ்சாக்ஷரபடலமென்னும் இரண்டாம் படலத்தில் பெரும்பான்மை வித்தியாபுராணக் கருத்துக்களையே கூறுகின்றது; மேலும், சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரமென்னும் மூவகைப்பட்ட நியாஸங்களையும் அங்கநியாஸத்தையும் இம்மந்திரத்தைக் கொண்டே செய்யும் முறையைக் கூறுகிறது.
சைவாகமவசனஸங்கிரஹமென்னும் நூல் பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையைக் கூறுவதாவது:
"கோடிக்கணக்கான பிறவிகளில் மனம் மெய் மொழி ஆகியவற்றால் செய்த பாவங்களனைத்தும் ஒருமுறை பஞ்சாக்ஷரமந்திரத்தை உச்சரிப்பதால் விலகும்; அவன் தூயவனாகிறான்" என்பது. மேலும் இம்மந்திரம்
சண்டாளனுடைய அன்னத்தைப் புசிப்பதாலும் கள் முதலியவற்றை அருந்தியதாலும் திருட்டுவழியில் சம்பாதித்துப் புசிப்பதாலும் சிராத்தம் முதலியவற்றில் உணவு உட்கொள்ளுவதாலும் பிராஹ்மணனைக் கொன்றதால் விளையும் பிரஹ்மஹத்தி என்னும் மிகக் கொடியபாவத்தையும் முற்றும் அழிக்கவல்லது" .
அடுத்து, "சிவ" என்னும் ஈரெழுத்துக்களின் பெருமையை மற்றொரு சுலோகம் கூறக்கேட்கலாம்:
கற்கவேண்டியவற்றுள் வேதம் தலைசிறந்தது; அவற்றுள் [யஜுர்வேதத்திலமைந்துள்ள] ருத்ரைகாதசினீ என்னும் ஸ்ரீருத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது; அதனுள் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களும் அதனுள் சிவ என்னுமிரண்டெழுத்துக்களும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தனவென்று இச்சுலோகம் முழங்குகிறது.
நம சிவாய என்னும் ஐந்தெழுத்துக்களை மாற்றியமைத்து யநவாசிம என்னும் மந்திரத்தால் உச்சாடனம் மாரணம் என்னும் கிரியைகளையும், மவாயநசி என்னும் மந்திரத்தால் வித்துவேஷணம் என்னும் கிரியையும், வாசிமயந என்பதால் மோஹனத்தையும், செய்யலாம் என்று சிவஞானவித்தியா என்னும் நூல் கூறுகிறது.
எவனொருவன் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை இடையறாது பக்தியுடன் செய்கிறானோ அவனால் கற்கப் படவேண்டிய நூல்களனைத்தும் கற்றனவாகின்றன; எல்லா நற்செயல்களும் இயற்றப்பட்டதாகின்றன. எவனுடைய நாவில் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் விளங்குகின்றதோ அவனுடைய வாழ்வு நிறைவுற்றதாகிறது; மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவனோ பொருளற்றவனோ கல்வியறிவற்ற மூர்க்கனோ எல்லாக் கல்வியையும் கற்றவனோ எவனாகிலும் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை மன உறுதியுடன் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான் என்பதே அதன் பொருள்.
சிவபெருமானுடைய திருவாக்கில் தோன்றிய எல்லா மந்திரங்களும் பஞ்சாக்ஷரமந்திரத்தினுடைய 16 ல் ஒரு பங்கு மஹிமைக்குக் கூடச் சமமற்றவை என்றும் சிவஞானவித்தியா என்னும் நூல் கூறக்காண்கிறோம்.
பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையை விளக்க வந்த இந்நூலானது கூறும் மற்றொரு செய்தி: சிவபெருமான் தேவியாருக்குக் கூறுகிறார்:
பிரளயம் ஏற்பட்ட போது எல்லாத் தாவரங்களும் உயிர்களும் தேவர்களும் அரக்கர்களும் அழிந்து பிரகிருதியில் ஒடுங்கின; அப்பிரகிருதி என்னிடத்தில் ஒடுங்கியது. என்னைத் தவிர வேறெவரும் இல்லை. நானோ பஞ்சாக்ஷர வடிவில் அவை யாவற்றையும் தாங்கியிருந்தேன். அதிலிருந்து மீண்டும் பிரபஞ்சத் தோற்றத்திற்காக என்னுடைய சக்தியே நாராயணன் என்னும் வடிவமாகவும் அதிலிருந்து பிரஹ்மாவும் தோன்றினர். உலகத்தைப் படைப்பதற்காக பிரஹ்மாவானவர் பஞ்சாக்ஷரமந்திரத்திலிருந்தே மீண்டும் யாவற்றையும் தோற்றுவித்தார். எனவே அம்மந்திரத்தின் மஹிமை பெருமைகள் கணக்கிலடங்கா. அவற்றைப் பேசவும் அரிது எனப் பெருமான் கூறுகிறார்.
சைவசாஸ்திரமென்னும் நூல் கூறுவதாவது:
சிவபெருமானுக்கிணையான வேறொரு தெய்வம் மூவுலகிலுமில்லை; பஞ்சாக்ஷரமந்திரத்திற்கிணையாக மந்திரம் கடந்தகாலத்திலும் இனி வரும் காலத்திலுமில்லை.
நடந்துகொண்டோ நின்றுகொண்டோ தனக்குத் தோன்றிய முறையில் செயல்களைச் செய்துகோண்டோ சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்துகொண்டோ ஜபம் செய்தாலும் இம்மந்திரம் பலனளிக்காமல் போகாது .
எல்லாத்தெய்வங்களையும் நீக்கி ஐந்துமுகங்கொண்ட சிவபெருமானையே வழிபடு; எல்லா மந்திரங்களையும் நீக்கி பஞ்சாக்ஷரமந்திரத்தையே ஜபம் செய் என்பதாகும் அதன் பொருள். வில்வமரத்து நிழலில்பக்தியுடன் இம்மந்திரத்தை ஜபித்து, பின்னர் பூசைக் கேற்ற இலைகளையோ அல்லது புஷ்பங்களையோ ஹோமம் செய்தால் எல்லா நற்குணங்களும் பொருந்திய மகனைப் பெறுவான் என்பது திண்ணம். இது சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவது.
சாரதாதிலகமென்னும் பழமையான மந்திரசாத்திரநூல் கூறுவதாவது:
உத்தராயணம், தக்ஷ¢ணாயனம், சந்திர சூரியகிரஹணஙள் ஆகிய புண்ணிய காலங்களில் தொப்புள் அளவு நீரில் நின்றுகொண்டோ, அல்லது சிவபெருமான் சந்நிதியிலோ பத்து லக்ஷம் தடவை இம்மந்திரத்தை ஜபிக்க எல்லாப் பாவங்களினின்றும் விடுபட்டு அவன் நிர்மலனாகிறான். முடிவில் சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவதாவது:
ஸப்தகோடிமந்திரங்களினின்றும் மற்றுமுள மந்திரங்களினின்றும் பஞ்சாக்ஷரமந்திரமானது முற்றிலும் வேறுபட்டது; எவ்வாறெனில் சூத்திரமும் அதன் வியாக்கியானமும் போல. எனவே பஞ்சாக்ஷ¡ரமந்திரம் சூத்திரத்தைப் போன்று பலபொருள்களைத் தன்னுள்ளடக்கியது. அதன் விரிவே மற்றெல்லா மந்திரங்களும்.
ஸித்தவீரணசிவயோகியார் இயற்றிய அநாதிவீரசைவஸங்கிரஹ மென்னும் வீரசைவ நிபந்தநூலிலும் இப்பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள் விரித்துக் கூறப்படுகின்றன: பிரஹ்மோத்தரகண்டமென்னும் நூற்பகுதியில்
என்று கூறப்படுகிறது. எவனுடைய இதயத்தில் எப்போதும் ஓம் நமசிவாய என்னும் மஹாமந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ அவனுக்கு மற்ற மந்திரங்களாலோ அல்லது மற்ற சாத்திரங்களலோ என்ன பயன் ? ஒன்றுமில்லை எனச் சிவபெருமானே அம்மந்திரத்தின் மஹிமையை விளக்குவதாகக் காண்கிறோம் . மேலும் அந்நூல் கூறுவதாவது:
ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரம் கைவல்லியமென்னும் மோக்ஷத்தை அடைவதற்கான வழியாகும்; அவித்தியை என்னும் அஞ்ஞானக் கடலை அணைக்கும் படவா என்னும் பிரளயகால நெருப்பு; கொடிய பாவங்களாகிய காட்டை எரிக்கும் காட்டுத் தீ. இம்மந்திரம் ஒன்றே முத்திய அளிக்கவல்லது. ஆதலின் முத்தியை அடையும் பொருட்டு எல்லா முனிவர்களாலும் இம்மந்திரம் ஒன்றே எப்போதும் ஜபிக்கப்படுகின்றது.
பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை விளக்கிக் கூறும் நிபந்தநூலொன்றில் கீழ்க்கண்டவாறு அதன்மஹிமைகள் விரித்துக் கூறப்படுவதைக் காண்கிறோம்:
எப்படிப்பட்ட கொடிய பாவங்களையும் அழிக்கவல்லன மந்திரங்கள்; ஆனால் சிவபெருமானுடைய திருநாமங்கள் அழிக்கக் கூடிய அளவுக்குப் பாவங்களே இல்லாமையால் மனு முதலிய ஸ்மிருதிகளில் சிவநாமத்தைப் பிராயச்சித்தமாக ஜபிக்கும்படி கூறவில்லை. அப்பாவங்களைப் போக்க மற்ற மந்திரங்களுள்ளன என்பது இதன் உட்பொருள்.
ஸ்காந்தபுராணத்தின் ஒருபகுதியான சங்கரஸம்ஹிதையில்
ஐந்து கொடிய பாவங்களையும் அழிக்கவல்ல பஞ்சாக்ஷரமந்திரத்தை ஜபிப்போர்க்கு அப்பாவங்களினின்றும் விடுதலை, பிறவியிலிருந்தும் விடுதலை. மேலும், அகஸ்தியர், இராமர் முதலிய புண்ணிய புருஷர்களால் இம்மந்திரம் ஓதப்படுவதாலும், வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுவதாலும் வேதத்தில் காணப்படுவதாலும் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும் மந்திரமாதலாலும் நமசிவாய என்னுமிம்மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பீராக என்று முனிவர்கள் வேண்டுகின்றனர்.
சிவபுராணத்தின் கடைசி பாகமான வாயுஸம்ஹிதையும் இம்மந்திரத்தின் மஹிமையை விளக்குகின்றது:
எல்லா உபநிஷதங்களுடைய பொருள்களை ஒருங்கே கொண்ட பஞ்சாக்ஷரமந்திரத்தின் மூலம் முனிவர்கள் பரம் பொருளான சிவபெருமானை அடைந்தனர்.
எப்போதும் திருநீறும் ருத்திராக்ஷம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு பஞ்சாக்ஷரமந்திரத்தையும் எப்போதும் ஜபித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன் ஜீவன்முக்தன் எனப்படுவான்; அவனே முற்றும் உணர்ந்த ஞானி, வைராக்கியமுடையவன், அறிவிற் சிறந்தவன், மூவுலகிலும் போற்றப்படுபவன்.
சிவதருமோத்தரமென்னும் ஒப்பற்ற சைவநூல் உபாகமங்களுள் ஒன்றாக வைத்துப் போற்றப்படுகின்றது; இது சைவர்களுக்குச் சரியை, கிரியை ஆகியவற்றைத் தெள்ளெனவிளக்கிக் கூறும் நூல். மிகப் பழமையானது. 12 அத்தியாயங்களைக் கொண்ட இந்நூல் 16 ம் நூற்றாண்டில் தில்லையில் வாழ்ந்த மிகச் சிறந்த சைவ ஆசாரியரும் வடமொழியிலும் தமிழிலும் பல சைவ நூல்களை இயற்றி அக்காலத்தில் சைவத்திற்குப் புத்துணர்ச்சியூற்றி மக்களிடையே பரப்பியவருமான மறைஞானசம்பந்தரால் சொற்சுவையும் பொருட்சுவையும் ஒருங்கே அமைந்த பாக்களாகத் தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளதை சைவர்கள் அறிவர். பஞ்சாக்ஷரமந்திரமஹிமையை அந்நூல் கூறுவதாவது:
அகத்தியமுனிவர் கந்தப்பெருமானை வேண்டி உலகில் மக்கள் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கும் உபாயமொன்றைக் கூறும்படி கேட்க, அதற்குக் கந்தப்பெருமான் இந்த ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் கூறினார்: இது எல்லா ஞானத்திற்கும் விதை போன்றது; ஆலங்கனியில் மிகச் சிறிய விதையானது பின்னர் பெரிய மரமாக வளர்வதுபோல் எல்லாக் கலைகளுக்கும் ஞானத்திற்கும் மந்திரங்களுக்கும் இம்மந்திரம் விதை போன்றது; மிக சூக்குமமானது; அதே சமயம் பரந்த பொருள் விரிவையுடையது.
இந்த சூக்குமமான மந்திரத்தினுள் ஸத்யோஜாத்ம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்னும் ஐந்து பிரஹ்மங்கலான ஸதாசிவப் பெருமான் அடங்கியுள்ளார்; இம்மந்திரம் ஸதாசிவப் பெருமானைக் குறிப்பது, பெருமான் அதன் மூலம் குறிக்கப்படும் பொருள். இந்தத் தொடர்பு அநாதிகாலம் தொட்டே நிலவிவருகிறது. இந்த கோரமான ஸம்ஸாரக்கடல் அநாதிகாலம் தொட்டே இருப்பதுபோல் சிவபெருமானும் அநாதிகாலமாக அக்கடலைக் கடக்கச் செய்பவர்.
நோய்களுக்கு எதிர்மறையாக மருந்து விளங்குவதுபோல் ஸம்ஸாரமென்னும் நோய்க்கு எதிர்மறையாக அதனை முற்றிலும் அழிக்கவல்லவர் சிவபெருமானே.
இவ்வாறு பலதிறத்தானும் பல விளக்கங்களாலும் ஆகமங்களும் புராணங்களும் சிவபெருமானைக் குறிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மஹிமை பெருமைகளை ஒப்புயர்வற்றநிலையில் வைத்துப் போற்றுகின்றன. அந்நூல் கடலிலிருந்து சில துளிகளை ஸமுத்திரகலசநியாயமாக என் சிற்றறிவுக்கேற்ற வகையில் இச்சைவ சபையில் சைவ ஆன்றோர்கள் முன்னர் பகிர்ந்துகொண்டேன்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை
புதன், 11 நவம்பர், 2015
தினம் ஒரு திருப்புகழ்
அருணகிரியார் பாடிது (பொது)
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத் ...... துடனாசை
மாசூ டாடா தூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்தானின்
றாரா யாதே யாராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்காணென்
றாள்வாய் நீதா னாதா பார்மீ
தார்வே றாள்கைக் ...... குரியார்தாம்
தோரா வானோர் சேனா தாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோளீ ராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீரா வாலே வாளா லேவே
லாலே சேதித் ...... திடும்வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
வாராய் பேதாய் கேளாய் ... ஏ பேதை மனமே, வருவாயாக, நான்
சொல்லுவதைக் கேட்பாயாக.
நீ தாய் மான் ஆர் மோகத்துடன் ஆசை மாசு ஊடாடாது
ஊடே பாராய் ... நீ தாவித் தாவி மாதர்கள் மீது கொண்டுள்ள
மோகத்துடன், காம ஆசை என்னும் குற்றத்தினுள் வீழ்ந்து அலையாமல்,
உனக்குள்ளேயே ஆராய்ந்து பார்ப்பாயாக.
மாறா ஞானச் சுடர் தான் நின்று ஆராயாதே ஆராய் ... மாறாத
ஞான ஒளியில் மனம் நிலைத்து நின்று, மற்றப் பொருட்களை
ஆராய்வதுபோல் ஆராயாமல், அறிவால் ஆராய்ந்து பார்ப்பாயாக.
பேறாம் ஆனா வேதப் பொருள் காண் என்று ஆள்வாய் ...
பெறத்தக்க அரும் பொருளாகியும், அழிவில்லாததுமான வேதப்
பொருளைக் கண்டு கொள் என்று எனக்கு உணர்த்தி என்னை
ஆள்வாயாக.
நீ தான் நாதா பார் மீது ஆர் வேறு ஆள்கைக்கு உரியார்
தாம் ... நீ தான் என் தலைவனே, இந்தப் பூமியில் உன்னை அன்றி
வேறு யார் தான் என்னை ஆளுதற்கு உளர்?
தோரா வானோர் சேனை ஆதாரா ... தோல்வியே அறியாதவனும்,
தேவர் சேனைக்குப் பற்றுக் கோடானவனுமான சேனாதிபதியே,
சூரா சாரல் புனம் மாது தோள் தோய் தோள் ஈராறா ...
சூரனே, (வள்ளி) மலையில் தினைப் புனத்தில் இருந்த வள்ளியின்
தோளை அணைந்த, பன்னிரு தோள்களை உடையவனே,
மா சூர் தூளாய் வீழச் சிறு தாரைச் சீராவாலே வாளாலே
வேலாலே சேதித்திடும் வீரா ... பெரிய சூரன் பொடிபட்டு விழ,
சிறியதும், கூர்மையானதுமான உடை வாளாலும், பெரிய
வாளாயுதத்தாலும், வேலாயுதத்தாலும் அழித்த வீரனே,
சேயே வேளே பூவே கோவே ... சிவபெருமானின் குழந்தையே,
செவ்வேள் முருகனே, அழகனே, அரசனே,
தேவே தேவப் பெருமாளே. ... தேவனே, தேவர்களுக்கெல்லாம்
பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ;வை.பூமாலை
பாபநாசம் திருத்தலம்
Aanmigam: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு
Aanmigam: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு: விஸ்வாமித்திரர் வழக்கை வரலாறு க்ஷத்திரிய குல அரசனான காதியின் மகள் சத்யவதிக்கும், கௌசிக குலத்தைச் சார்ந்த பிராமணர் ரிஷிகா என்பவருக்கும் பிறந...
சனி, 7 நவம்பர், 2015
சைவ சமயத்தில் முதல் குருவாகவும் சிவனின் வாகனமாகவும் கருதப்படுபவர் திருநந்தி தேவர் ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார்
பதினென் சித்தர்களில் ஒருவரான - நந்தியம் பெருமான்
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி ஆகிய பரம் பொருளிடம் முதலில் தீட்சை பெற்றவர்கள் எண்மர். அவர்களிளல் நந்திகள் நால்வர் என்று திருமூலர் தன் திருமந்திரத்திர பாடல் 109ல் குறிப்பிடுகிறார். அந்த நாலவர் முறையே சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்பர். இவர்கள் நால்வரும் சிவனாரிடம் முதன்முதலில் மிக உயர்ந்ததான மோகன தீட்சை பெற்றவர்கள். இவர்கள் நால்வரில் நந்திதேவர் ஒருவரல்ல. திருக்கயிலையாய பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் என்பது அவர் கைலையில் சிவனாருக்கு நிரந்தரமான வாயில் காப்பவனாகவும் , சிவனாரின் வாகனமாகவும் இருந்து வருவதிலிருந்து தெரியவருகிறது.
நந்தியின் தோற்றம் :
மிக பழங்காலத்தில் இப்போதுள்ள தஞ்சை மாநகரின் அருகிலுள்ள திருவையாறு என்ற திருத்தலத்தில் மகாதவ யோகியாகிய சிலாத முனிவரும் அவர் மனைவி சாட்சனை என்ற சித்திரவதியும் நல்லறமாம் இல்லறம் நடத்தி வந்தனர். நீண்ட காலமாக அவர்களுக்கு மகப்பேறு இல்லை, இந்நிலையில் ஒருநாள் சப்தரிஷிகள் அவருடைய ஆஸரமத்திற்கு வந்தனர். சிலாத முனிவர் அவர்களை வரவேற்று தன் ஆஸ்ரமத்தில் உணவு உண்ணுமாறு வேண்டினார், ஆனால் அவர்கள் குழந்தைப் பேறு இல்லாத இடத்தில் நாங்கள் உணவு அருந்துவதில்லை என மறுத்து சென்று விட்டனர். இதனால் மனம்வருந்திய சிலாத முனிவர் திருவையாற்றில் உள்ள சூரியபுஸ்கரணியில் நீராடி பஞ்சாட்சர தவமிருந்தார். அவரின் தவத்திற்கு மனம் இறங்கிய சிவனார், " சிலாதரே விரைவில் உமக்கு கருவில் இருந்து பிறக்காத திருமகன் கிடைப்பான் அவன் மரணமில்லா அத்திருமகன் எனக்கு சமமானவன் என்னை தரிசிப்பவர்கள் யாவரும்அவனையும் வழிபடுவார்கள் " என்று கூறி மறைந்தார்.
அவ்வாறு அந்த கூற்றிற்கிணங்க, ஒரு சமயம் சிலாதர் யாகம்செய்ய பூமியை தோண்டியபோது பூமிக்கு அடியில் பதிந்த தங்கப் பெட்டி இருப்பதைக் கண்டார், அப்பெட்டியில் மான்மழுவேந்தி மதி சூடியிருந்த முக்கண்ணன் திருவுருவையே கொண்ட ஒரு ஆன் குழுந்தை இருப்பதைக் கண்டு எடுத்து , அந்த ஆண்மகவுக்கு நந்தி என்ற நாமம் இட்டு வளர்த்து வந்தார்.
நந்திக்குஏழு வயதான போது, சிலாதர ஆஸ்ரமத்திற்கு வருகை தந்த மித்ரர், வருணர் ஆகிய இரு வேதர்களும் சிலாதர முனிவரிடம் தங்கள் மகனுக்கு ஆயுட்காலம் எடடு ஆண்டுகள்தான் அது நிறைவடையும் தருணத்தில் உள்ளது. என்றனர், இதனால் மனம் வருந்திய சிலாத முனிவரிடம் நந்தி தேவர் தந்தையே கவலை கொள்ள வேண்டாம் நான் சர்வேஸ்வரன் திருவருளால் நீண்ட நாள் வாழ்வேன் அதற்கு அவன் அருள் பெற தவமிருக்க இருக்கிறேன் எனக்கு ஆசி வழங்கி அருள்மபுரியுங்கள் என்று வேண்டிக்கொண்டு, அதன்படி பூஸ்கரனியில் மரணமில்லா பெருவாழ்வு பெற வேண்டி கடும்தவம் புரிந்தார். இதன் மூலம் சர்வேஸ்வரனின் அருளால் அவருக்கு மரணமில்லா வாழ்வும், கயிலையில் சிவத்தொண்டு செய்யும் காவலனாகவும், சிவனாருக்கு வாகனமாகவும் இருக்கும் அருள் கிடைத்தது.
எப்போதும் சிவ சிந்தனையிலேயே இருக்கும் நந்தி தேவருக்கு சிவனாரே பூமிக்கு வந்து , திருமழலைப்பாடியில் தவவாழ்வு வாழ்ந்து வந்த வசிஸ்டரின் பேத்தியாகிய " சுயகையை " மணமுடித்து வைத்தார், அது முதல் இன்று வரை சிவ பக்தர்கள் அனைவரும் தன்னை வழிபட்டு தன் அனுமதி பெற்றே சிவதரிசனம் செய்ய வேண்டும்என்பதை விளக்கும் வண்ணமே நந்தியின் சன்னதி எல்லா சிவலாயங்களிலும் அமையப் பெற்றுள்ளது.
இன்றளவும் சிவபத்தர்கள் சிவபெருமானின் அருள்பெற நந்திதேவர் திதி செய்யுமுறை திருவிளையாடல் புராண வாயிலாகவும்அறியலாம்.
" வந்திறை அடியில் தாழும் வானவர் மகுட கோடி
பத்தியின் மணிகள் சிந்த வேத்திரப் படையார்தாக்கி
அந்தியும் பகலும் தொண்டர் அலகிடும் குப்பையாக்கும்
நந்தியெம் பெருமான் பாத நகை மலர் முடிமேல் வைப்போம்" திருவிளையாடல் புராணம்
இதனை மனதில் சொல்ல வேண்டும்.
சதா சிவ தியானத்தில் ஆழ்ந்திருக்கும் நந்தி கேசுவரே ! அம்மையப்பரை கண்டு வணங்க விடை தந்தருள்க ! என்று மனதில் வேண்டி சிவனை வணங்க செல்லவேணடும்.
திருச்சிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
தொகுப்பு: வை. பூமாலை
வெள்ளி, 6 நவம்பர், 2015
தினமு்ம் ஒரு திருவாசகம்
மாணிக்கவாசக சுவாமிகள் பாடியது
இறைவனையே தன் காதலன் என்று ஒரு பெண் கருதுகிறாள். அதை எண்ணி அவளுடைய அன்னை உரைப்பவை ‘அன்னைப் பத்து’ என்ற பாடல்களாக அமைந்துள்ளன. இதற்கு வேறொரு விளக்கமும் உண்டு. அந்தப் பெண் தன் அன்னையிடம் இறைவனைப் பற்றிச் சொல்கிறாள். அதைக் கேட்ட தோழி, அதனைப் பிறரிடம் சொல்கிறாள்.
இப்பகுதியில் பத்து பாடல்கள் உள்ளன. இவை தில்லையில் அருளப்பட்டவை.
பாடலின்பம்
வேதமொழியர், வெண்ணீற்றர், செம்மேனியர்,
நாதப்பறையினர் அன்னே என்னும்,
நாதப்பறையினர் நான்முகன் மாலுக்கும்
நாதர் இந்நாதனார் அன்னே என்னும்.
*
கண் அஞ்சனத்தர், கருணைக் கடலினர்,
உள்நின்று உருக்குவர் அன்னே என்னும்,
உள்நின்று உருக்கி உலப்புஇலா ஆனந்தக்
கண்ணீர் தருவரால் அன்னே என்னும்.
பொருளின்பம்
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவன் வேதத்தின் பொருளானவன், வெண்ணீறு பூசியவன், செம்மேனி கொண்டவன், நாத தத்துவப் பறையைக் கொண்டவன், பிரம்மன், திருமாலுக்கும் நாதன் அவன், எனக்கும் அவனே நாதன்’ என்கிறாள்.
*
என் மகள் சிவபெருமானை எண்ணி உருகுகிறாள், ‘அன்னையே, அவர் கண்ணில் கருஞ்சாந்து பூசியவர், கருணைக் கடலானவர், உள்ளே நின்று உருக்குகிறவர், அதன்மூலம் அழிவில்லாத ஆனந்தக் கண்ணீரைத் தருகிறவர்’ என்கிறாள்.
சொல்லின்பம்
அன்னே: அன்னையே , நாதர்: தலைவர் ,அஞ்சனம்: சாந்து
உலப்பு: அழிவு ,
தருவரால்: தருவார்
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
தினமும் ஒரு திருப்புகழ்
அருணகிரி நாதர் பாடியது
வேல்விருத்தம், மூன்றாம் பாடலுடைய சொற்பொருளை எப்போதும்போல் முதலில் பார்த்துவிட்டு அடுத்ததாக அடியடியாகப் பொருள் கண்டு, திரண்ட கருத்தைக் காண்போம்.
வேலொத்து வென்றி யங்கை வேளுக்கு வெஞ்ச ரங்க
ளாமிக்க கண்க ளென்று ...... மிருதோளை
வேயொக்கு மென்று கொங்கை மேல்வெற்ப தென்று கொண்டை
மேகத்தை வென்ற தென்று ...... மெழில்மாதர்
கோலத்தை விஞ்ச வெஞ்சொல் கோடித்து வஞ்ச நெஞ்சர்
கூடத்தில் நின்று நின்று ...... குறியாதே
கோதற்ற நின்ப தங்கள் நேர்பற்றி யின்ப மன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை ...... குறுகாதோ
ஞாலத்தை யன்ற ளந்து வேலைக்கு ளுந்து யின்று
நாடத்தி முன்பு வந்த ...... திருமாலும்
நாடத்த டஞ்சி லம்பை மாவைப்பி ளந்த டர்ந்து
நாகத்த லங்கு லுங்க ...... விடும்வேலா
ஆலித்தெ ழுந்த டர்ந்த ஆலத்தை யுண்ட கண்ட
ராகத்தில் மங்கை பங்கர் ...... நடமாடும்
ஆதிக்கு மைந்த னென்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தி லஞ்ச லென்ற ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
வேல் ஒத்து வென்றி அங்கை வேளுக்கு வெம் சரங்களாம்
மிக்க கண்கள் என்றும் ... வெற்றி கொண்ட அழகிய கையில் உள்ள
வேலாயுதத்தை நிகர்த்து, மன்மதனுடைய கொடிய மலர்ப் பாணங்களாக
மேம்பட்டு விளங்கும் கண்கள் என்று உவமை கூறியும்,
இரு தோளை வேய் ஒக்கும் என்று கொங்கை மேல்
வெற்புஅது என்று ... இரண்டு தோள்களை மூங்கிலை நிகர்க்கும்
என்றும், மார்பகங்கள் மேலான மலைக்கு ஒப்பானவை என்றும்,
கொண்டை மேகத்தை வென்றது என்றும் ... கூந்தல் (கரு
நிறத்தில்) மேகத்தையும் வென்றது என்று கூறியும்,
எழில் மாதர் கோலத்தை விஞ்ச வெம் சொல் கோடித்து வஞ்ச
நெஞ்சர் கூடத்தில் நின்று நின்று குறியாதே ... அழகிய (விலை)
மாதர்களின் எழிலினை மேலான வகையில், விரும்பத் தக்க சொற்கள்
கொண்டு அலங்கரித்துப் பேசி, வஞ்சக மனம் உடைய அப் பொது
மகளிர்களின் வீட்டு முற்றத்தில் அடிக்கடி நின்று அவர்களைக் குறித்தே
காலம் கழிக்காமல்,
கோது அற்ற நின் பதங்கள் நேர் பற்றி இன்பம் அன்பு
கூர்கைக்கு வந்து சிந்தை குறுகாதோ ... குற்றம் இல்லாத உன்
திருவடிகளை நேராகப் பற்றி, இன்பமும் அன்பும் மிகுந்து பெருகுதற்கு
வேண்டிய மனத்தை அடைய மாட்டேனோ?
ஞாலத்தை அன்று அளந்து வேலைக்கு(ள்)ளும் துயின்று
நாடு அத்தி முன்பு வந்த திருமாலும் ... பூமியை முன்பு ஓரடியால்
(வாமனனாக வந்து) அளந்து, பாற்கடலினிடையே துயிலும் தன்னை
நாடி ஓலமிட்ட (கஜேந்திரன்) என்னும் யானையின் முன்பு வந்து
உதவிய திருமாலும்,
நாடத் தடம் சிலம்பை மாவைப் பிளந்து அடர்ந்து நாகத் தலம்
குலுங்க விடும் வேலா ... உனது உதவியை நாட, விசாலமான
கிரவுஞ்ச மலையையும், மாமரமாக வடிவெடுத்த சூரனையும் பிளந்து
நெருங்கி, மலைப் பிரதேசங்கள் எல்லாம் குலுங்கி அசையும்படி வேலைச்
செலுத்திய வேலனே,
ஆலித்து எழுந்து அடர்ந்த ஆலத்தை உண்ட கண்டர் ஆகத்தில்
மங்கை பங்கர் ... ஒலித்து எழுந்து நெருங்கி வந்த ஆலகால விஷத்தைப்
பருகி அடக்கிய கழுத்தை உடையவர், தமது உடலில் மங்கையாகிய
பார்வதிக்கு இடது பாகம் தந்தவர்,
நடமாடும் ஆதிக்கு மைந்தன் என்று நீதிக்குள் நின்ற அன்பர்
ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே. ... நடனம் ஆடுபவர் ஆகிய
முதல்வராகிய சிவ பெருமானுக்குப் பிள்ளை என்று விளங்கி, நீதி நெறியில்
நிற்கும் அன்பர்களுக்கு, அவர்களுக்கு ஆபத்து நேரிடும் போதில் அஞ்ச
வேண்டாம் என்று அருளும் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
வேதங்களின்மெய்ப்பொருள்
வேதங்களின்மெய்ப்பொருள்
ஆதி சங்கரர் கூறும் பரம ரகசியம்
அனைத்து மக்களும் அவரவர் வாழ்க்கையை வாழ்வது எப்படி என்ற முறையான வழி முறைகளை தருவது வேதம்.
வேதம் இரண்டு பாகங்களைக் கொண்டது. முதற் பாகம் - கர்ம காண்டம், இரண்டாவது பாகம் - ஞான காண்டம் அல்லது வேதாந்தம் என்பது
வேதாந்தம் பரமனைப் பற்றிய முழு அறிவைத் தருவது. ஆனால் அனைவரும் அந்த அறிவை அறிந்து கொள்ள தகுதிானவர்கள் அல்லர். எனவே அவர்களின் மனதை பண்படுத்ததி பக்குவமடைய செய்யும் பொருட்டு கர்ம காண்டம் பல்வேறு வழிபாட்டு சடங்குகளை முன்மொழிகிறது.
வாழ்க்கை எனும் செயல்முறை கல்விச்சாலையில் நாம் நம் ஒவ்வொரு செயலிலிருந்தும் அறிவையும், மனப்பக்குவத்தையும் அடைகிறோமோ அப்போதுதான் பரமனை பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் நமக்கு ஏற்பட்டு தேவங்களை படிக்க முற்படுவோம்.
கர்ம காண்டம் நம் செயல்களை செய்ய வேண்டிய முறைகளையும்,
வேதாந்தம் நாம் அறிந்து கொள்ள வேண்டிய பரமனை பற்றிய ஞானத்தையும் நமக்கு தருகின்றன.
பரமனைப் பற்றி தெரிந்து கொள்ள நமக்கு கர்மக காண்டத்தை பற்றிய அறிவு தேவையில்ல. முறையாக வேதத்தை பயலுவதைத் தவிர நாம் வேறு ஒரு செயலிலும் நாம் ஈடுபட வேண்டாம்.ஆனால் பரமனை தெரிந்து கொள்ள தேவையான மனோபக்குவத்தை பெற வேண்டியிருக்க்லாம்.
அனைத்து மனிதர்களின் குறிக்கோள் பரமனை அறிந்து குறைவில்லா இன்பமான வாழ்க்கையை அனுபவிப்பது தான் என்றாலும் எல்லாரும் அந்த ஞானத்தை அடைய தகுதி வாய்ந்தவர்கள் அல்லர். பள்ளியிலுள்ள அனைத்து மாணவர்களின் நோக்கமும் பள்ளியின் இறுதி தேர்வில் வெற்றி பெறுவதுதான் என்றாலும் தகுதியற்றவர்களை ஆசிரியர்கள் தேர்வுக்கு அனுப்புவதில்லை. அது போல தகுதியை ஆய்ந்து நமக்கேற்ற உபதேசத்தை செய்வது நமது குருவின் கடமை. பெரும்பாலான மக்களுக்கு ஆன்மீக அறிவில் தங்களுடைய நிலையை தாங்களாக உணரும் சக்தி இருப்பதில்லை. எனவே நாம் கூடிய விரைவில் ஒரு ஆன்மீக குருவை நாடுவது அவசியம்.
வேதங்களின் ஒரே குறிக்கோள் நமக்கு பரமனை அறிவிப்பது தான் . இந்த குறிக்கோளை நிறைவேற்ற பல்வேறு படிகளில் வேதம் நம்மை அழைத்துச் செல்கிறது.
முதல் படி கர்ம யோகம்
பலனில் பற்றில்லாமல் நமக்கு கொடுக்கப்பட்ட வேைகைளை முறையாகவும், நமது முழு மனதின் ஈடுபாட்டுடன் செம்மையாக செய்து முடிப்பது கர்ம யோகம். பணம், பதவி, மற்றும் புகழ் அடைவதற்காக செய்யும் செயல்கள் கர்ம யோகம் ஆகாது. நமது மனம் பக்குவப்பட வேண்டும். என்ற நோக்கத்துடன் செய்யும் செயல்களே தர்ம யோகமாகும். " கர்ம யோகத்தின் பலன் மனப்பக்குவம் " என்பதாகும்
இரண்டாம் படி கற்றல்
வேதாந்தத்தினை முறையாக ஆசிரியரிடமிருந்து தொடர்ந்து நீண்ட நாட்க்ள் கற்க வேண்டும். வேதத்தில் சொல்வத இதுதான் என்ற திடமான எண்ணம் வரும்வரை கற்றல் தொடர வேண்டும். புரியவில்லையெனில் வேறு ஆசிரியரைக் கொண்டாவது புரியும் வரை கற்க வேண்டும்.
மூன்றாம் படி - கசடற கற்றல்
வேதம் சொல்வது என்ன வென்று சரியாக தெரிந்தவுடன் நாம் அடுத்த படியாக வேதம் சொல்வது சரியா? என்ற கேள்வியை கேட்க வேண்டும். யுத்தி மூலமாகவும், அனுபவம் மூலமாகவும் வேதம் கூறிய முடிவை ஆராய்ந்து தெளிய வேண்டும். வேதத்தின் கருத்துக்கள் எந்தவித சந்தேகங்களும் இல்லாமல் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு அடுத்த படிக்கு செல்லவேண்டும்.
நான்காம் படி - நிற்க அதற்கு தக
வேதத்திலிருந்து நமக்கு கிடைத்த ஞானத்தில் நாம் நிலைத்து நிற்க ஒரு சில காலம் ஆகும் . இதனை நம் சுய முயற்சியால் மட்டுமே நாம் தியானம் எஎன்ற பயிற்சி மூலம் ஞானத்தில் நிலைத்து நிற்கும் நிலை பெற வேண்டும். உணவு உண்டபின் பசி குறைவது போல் நம் பயிற்சி மூலம் கிடைத்த ஞானத்தால் குறைவற்ற இன்பத்தை படிப்படியாக உணர முடியும்.
முடிவுரை
பரமனை அறிந்து கொள்ள நாம் கடக்க வேண்டிய படிகள் அனைத்தையும் ஒரே ஜென்மத்தில் கடந்து விட முடியாது. நாம் செய்யும் எந்த ஒரு முயற்சியும் வீண்போகாது. நாம் ஒவ்வொரு பிறவியிலும் தொடர்ந்து செய்யும் முய்ற்சியால் தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள அனைத்து படிகளையும் கடந்து பரமனை தெரிந்து கொள்ள முடியும். ஆகையால் நாம் குருவின் துணையுடன் நம் தற்போதைய நிலையை தெரிந்து கொண்டு மேற்கொண்டு நமது ஆன்மீகப் பயணத்தை தொடரவேண்டும்.
வேதாந்தத்தை தகுந்த குருவின் துணை கொண்டு பயின்று, இப்பிறவியிலேயே பரமனை அறிந்து குறைவிலா இன்பத்தை அடையலாம் என்பது ஆதி சங்கரர் நமக்கு கூறும் பரம ரகசியம்
திருசிற்றம்பலம்
மேலும் பல ஆன்மிகத் தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
வியாழன், 5 நவம்பர், 2015
திருவைந்தெழுத்து
சைவ சமயத்தின் மூல மந்திரம் "நமசிவாய" எனும் திருவைந்தெழுத்து ஆகும். இது பஞ்சாட்சரம் எனவும் பஞ்சாட்சர மந்திரம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த பஞ்சாட்சரமானது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சூட்சும பஞ்சாட்சரம் எனவும் இருவகைபடுகிறது.[1] நமசிவாய என்பது ஸ்தூல பஞ்சாட்சரம் எனவும், சிவாயநம என்பது சூட்சும பஞ்சாட்சரம் எனவும் அறியப்படுகிறது.
சிவாயநம எனவும் இதனைக் கொள்வர். சிவாயநம என்பது சிவபெருமானைப் போற்றிப் பாடும் மந்திரச் சொல்லாக உள்ளது. இதற்குப் பல பொருள் உண்டு என்று இந்து சமயத்தில் சைவ சமயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.
யசுர் வேதத்திலே நான்காவது காண்டத்திலே சிவ பிரானைப் போற்றும் உருத்திர மந்திரம் உள்ளது. அதில் சூத்திரம் 8-1 நமசிவாய எனும் ஐந்தெழுத்து பற்றிக் கூறுகிறது. வேத மந்திரத்தை முறைப்படி தீட்சை பெற்றுத்தான் ஓத வேண்டும் என்பது விதி. ஆனால் சதா காலமும் அனைவரும் ஓதக்கூடிய மந்திரமாகத் 'திருவைந்தெழுத்து' கூறப்படுகிறது.
பொருளடக்கம் [காட்டு]
விளக்கம்[தொகு]
திருமூலர் முதலான தமிழ்ப் புலவர்கள் உட்பட இம் மந்திரத்துக்கு அவரவர் கண்ட விளக்கங்களைக் கூறியுள்ளனர். அவை எந்த மொழியியலையும் பின்பற்றவில்லை. உண்மையில் அவை மந்திரமொழி.
மந்திரம் பொதுமொழி. அதனைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்பது ஒரு சாரார் கருத்து
நமசிவாய மந்திரம் தமிழ் என்போர் தமிழியல் வழியில் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
நமசிவாய மந்திரம் வடமொழி என்போர் சில விளக்கங்களைத் தருகின்றனர்.
மந்திரமா, தமிழா, வடமொழியா என்பது அவரவர் மனப்பாங்கைப் பொருத்தது. இது சரி, இது தவறு, என யாராலும் நிறுவ இயலாது.
தமிழியல் விளக்கம்[தொகு]
நமசிவாய
சிவாயநம
நம - 'நாம்' என்னும் பால்பகா அஃறிணைப் பெயரின் ஆறாம் வேற்றுமை நிலை 'நம'. இது 'அது' என்னும் உருபினை ஏற்கும்போது 'நமது' என வரும். உருபு மறைந்திருக்கும் வேற்றுமைத்தொகையில் 'நம' என நிற்கும். இது 'என் கை' 'என கைகள்' என்று அமைவதைப் போன்றது.
சிவ் - சிவன் 'சிவ்' என்னும் சத்தியை அவளிடம் பெற்றுக்கொண்டு அவளோடு ஒன்றாய் இருப்பவன்.
ஆய - ஆயம். ஆய என முடிந்த பின்னர் மீண்டும் நம வந்து சேரும்போது மகர-ஒற்று இடையில் தானே வந்துவிடும். சிவாய[ம்]நம எனவே ஆய என்பது ஆயம் ஆகிவிடும். ஆயம் என்பது ஆயத்தாராகிய திருக்கூட்டம்
இவற்றால் நாம் அறிவது நம்முடையவை சிவத்திருக்கூட்டம் என்பதே 'நமசிவாய' என்பதன் பொருள்.
நமச்சிவாய
நம் அச்சு இவ் ஆய[ம்]
நமக்கு அச்சாக இருப்பதெல்லாம் நம்முடன் இருக்கும் திருக்கூடமே. பிறர் இல்லாமல் நம்மால் தனித்து வாழமுடியாது அல்லவா?
வடமொழி விளக்கம்[தொகு]
திருவைந்தெழுத்து விளக்கம்[தொகு]
திருவைந்தெழுத்து விளக்கம்
புதன், 4 நவம்பர், 2015
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)





