வியாழன், 13 மார்ச், 2014


திருமந்திரத்தில் ஒரு மந்திரம் அணுவில் அணுவினை ஆதிப்பிரானை அணுவில் அணுவினை ஆயிரங் கூறிட்டு அணுவில் அணுைவ அணுகவல்லார் கட்கு அணுவில் அணுவை அணுகலும் ஆமே, அணுவிற்குள் அணுவாய் இறைவர் இருக்கின்றார் என்கிறார் திருமூலர் ஐந்தாம் நூற்றாண்டிலேயே. பத்தாவது தமிழ்வேதமாக விளங்கும் திருமந்திரத்தில் 1) அணுவைப் பிளக்க முடியும் என்றும், 2) அணுவிற்குள் இறைமை உள்ளது என்றும் கூறியுள்ளதை எண்ணி எண்ணி வியக்கின்றோம். இறைமை அணுவிற்கு அணுவாயும், அணுவிற்கு அப்பாலாயும் உள்ளது. பொருட்கள் எல்லாம் அணுக்களால் ஆனவை என்பது அறிவியல் உண்மை. அணுவினுள் அணுவாய் சிவபெருமானார் விளங்கின்றார் என்பது தற்காலத்தில் அறிவியல் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உலகில் உள்ள எல்லாமே இறைமயம்தான் என்பதை உணர்ந்து வாழ்ந்து நலம் பெறுவோமாக. நன்றி ; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக