சனி, 29 மார்ச், 2014

உயிர்


சாலையில் செல்லும்போது ஒருவன் விபத்துக்குள்ளாகிறான் உடனே அந்நிகழ்ச்சியை கண்டவர்கள் அவன் சுவாசத்தோடு இருந்தால் உடனே அவனுக்கு உயிர்இருக்கிறது, உடனே ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் செல்லுங்கள் என்கிறன்றனர். அந்த உயிர் என்பது என்ன? அது எங்கு இருக்கிறது. கை கால் இழந்தவனும் உயிருடன் தான் இருக்கிறான். இதயத்ைத மாறறு சிகிச்ைச பெற்றவனும் உயிருடன்தான் இருக்கிறான் ஆக உயிர் கை கால்களிலும், இதயத்திலும் இல்லை. கைகால்களை இழப்பதால் உயிர் குறுகிப்ேபாவதும் இல்லை. உயிர் யானை போன்ற பெரிய ஜீவன்களிடத்திலும் எறும்பு போன்ற மிகச்சிறியஜீவன்களிடத்திலும் உள்ளது. ஆகையால் உயிரில் சிறியது பெரியது என இல்லை. அப்படியானால் அந்த உயிர் என்பது யாது? எங்குள்ளது ? என்பது நமக்கு புலப்படுவதில்ைல. ஆனாலும் உடலளவில் அதனை உணர முடிகிறது. ஆனால் காண முடிவுவதில்லை. அது இயக்கிக் கொண்டு இருக்கிறது. என இறுதி வரை உணராது வாழ்ந்து மடிபவர் நம்மிடையே பலர். நாம் செய்த சாதனைகளால் நம் உயிர் மகிழ்கிறது. பிறர் கூறும் தகாத வார்த்தைகளை கேட்டுக்போது உயிர் துவள்கிறது. உதவி,தானம், தருமம், செய்யும் ேபாது உயிர் நிறைகிறது. நோய் நொடியில் உயிர் கலங்குகிறது. பண வரவால் உயிர்இனபுறுகிறது. பண விரயத்தால் உயிர் வாடுகிறது. இவ்வாறு இன்ப துன்பங்களை உடல்வழி அனுவிப்பது உயிர். அதன் வழி நல்லது , கெட்டது என அறிவது உயிர் , உடலுள் எது அனுபவித்து அறிகிறதோ அதுவே உயிர். இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல் உணரும் உயிர் பக்குவப்பட்டது என உணராலாம். நாம் சூட்டும் பெயர்கள் உடலுக்கே, உயிருக்கில்லை. உயிர் என்றும் நிலைத்த பொருள் ஆகையால் இறப்பு என்பது உடலுக்கே, உயிருக்கன்று. ஒர் உடலை விட்ட உயிர் வேறிடத்தில் இளமையுடைய உடலை எடுத்துப் பிறக்கும்.அப்போது அது வேறுபெயரால் அழைக்கபடும். ஆகையால் மரணபயம் என்பது அறியாமையே. நம்உயிர் என்றும் வாழக்கூடியது ஆனால் உடலுக்கல்ல. உடல்பெற்ற உயிர் அனைத்தும் ஒத்துப்போகும்விசயங்கள் நான்கு,அவை மூச்சு, உணவு, உணர்வு, இனவிருத்தி.ஓர் உயிர் மூலமே மற்றோர் உயிர் இம்மண்ணில் பிறக்கிறது. தாவரங்களும் உயிருடன் இருந்த விதை மூலமே செடியாகி உயிர்பெற்று மண்ணில் மரமாகவோ, செடியாகவோ வளரத் தொடங்கிறது. அது வரை விதைகள் உறங்கும் நிலையில்தான் இருக்கின்றன. இவ்வாறு ஒரு உயிர் ஒரு ஜீவன் அல்லது பொருளிருந்து பிரிந்து மற்றொரு ஜீவனில் பிற்க்கிறது. புது உயிரை நாம் தோற்றுவிக்க இயலாது. இறைவன் என்று உள்ளானோ அன்றே உள்ளது உயிர். நாம் இந்த உடல் வழி இன்ப, துன்பம் அனுபவிக்கும் போதே நன்மை செய்து புண்ணியம் பெற வேண்டும் அது மறுபிறவிக்கு நன்மை தரும். பாவங்கள் செய்தால் தீமை கிடைக்கும். இறை வழிபாட்டை " நான்" என்ற அகங்காரம் இன்றி செய்தால் முக்திக்கு வழி பிறக்கும். இறையுணர்வு மட்டுமே உயிர் உணரும் இன்பங்களில் நிலையானதாகும். ஏனைய இன்பங்கள் நிலையானைவயல்ல. எனவே நம் உயிர் நம்மிடம் இருக்கும் போதே பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாது இறைவழிபாட்டில் நாட்டம் கொண்டால் அடுத்த பிறப்பு அற்ற நிலையே அல்லது மறுபிறப்பில் முக்தி சித்தி கிடைக்க வழிபிறக்கும். திருச்சிற்றம்பலம் , ஓம் நமச்சிவாயம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக