வியாழன், 27 மார்ச், 2014


சித்தர் தாயுமான சுவாமிகளின் இறைவேட்கை அகங்காரம் ஆணவத்தைக் காட்டிலும் கொடியது, இந்தஇயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவனிடம் முறையீடு செய்தவர் தாயுமானவ சித்தர், மெய்யறிவு பெறுவதற்கு எவ்விதப் பயிற்சியும் பெறாமை கருதி வருந்தியவர், இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்குகிறார், " எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே" என்னும் கொள்கையுடைய தாயுமானவ சித்தரின் அருள் வேட்கை அளப்பரியதாகும். திருச்சியில் கேடியப்ப பிள்ளையின் மைந்தராக இறையருளால் பிறந்த தாயுமானவர் தந்தை காலமானபோது திருச்சி மன்னராக இருந்த விஜயரங்க சொக்கநாத நாயக்க அரசில் கணக்கராகப் பணியமர்த்தப்பட்டார், சிவபிரான போதம் அறிந்த தாயுமானவரால் அரசாங்க கணக்குகளில் ஈடுபாடு கொள்ள முடியவில்லை, சிவநெறிச் சிந்தனையும் சித்தர் ஈடுபாடும் காலாவதியாகும் மனித வாழ்வின் அற்பக் கணக்குளின் கூட்டல் கழித்தலில் இருந்து பலநேரம் தாயுமானவரை ஒதுங்கியிருக்க செய்தன, அரசு அலுவலோடு இறைப்பணியையும் செய்து வந்தார், மெளனகுரு சுவாமிகளிடம் தன்னை மாணாக்கராக ஏற்றுக் கொள்ளும்படி வேண்டி தாயுமானவரை சீடராக ஏற்று அவருக்கு யோக ஞான முறைகளையும் உபதேசித்தருளினார். அரண்மனை உத்தியோகத்திலிருந்து நீங்கி விராலிமலைக்கு வந்து நிஸ்டையில் ஆழ்ந்தார் தாயுமானவர். விராலிமலை சித்தர்களின் வாசஸ்தலமாக அந்நாளில் விளங்கி வந்தது. சித்தர் பலரும் தங்கள் சித்திகளுக்கான பயிற்சிக்களமாக அங்கே வாழ்ந்து கொண்டிருந்தபோது சித்தர்களின் தொடர்புகளால் தாயுமானவரும் சித்தரானார். இறவாமை பற்றி சாகாக்கலை கண்டறிந்த சித்தர்களின் ரகசியம் பலவற்றை அவர்களின் அனுபவ வெளிப்பாடாக தாயுமானவர் கண்டறிந்தார். ஆன்மா முக்தியடைய உடம்பு அதற்கு ஒரு கருவியாக வந்தது முக்தியடைவது ஆன்மா மட்டுமே என்பதை உணர்ந்தார் தாயுமானவர். மனமடக்க தியான நிலையே மாற்று என உணர்ந்து தாயுமானவரின் மனம் மோகனத்தில் பற்றிக் கொண்டது, வெயிலின் ஒளியிலே காய்ந்த பலகாலம் சிதையாமலிருப்பது போல சூரியப் பிரகாசமான சிவஜோதியில் திளைப்பவரும் உடலும் ஆன்மாவும் ஒருநாளும் அழிவதில்லை, முக்திக்கு வழி அறியாமல் ஐம்புலங்களைக் காத்து வாழ்வதுதான், ஐம்புலங்களின் உணர்வுகளை வழியோடு தெரிந்து தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க கற்றுக் கொண்டு விட்டால் இந்த உடலுக்கு இறப்பே இல்லை என்பதை உணர்ந்தார் தாயுமான சித்தர். உணர்வும் நினைவும் நடுங்கிய பின்னர் மனமானது சுத்த சூனியமான பரவெளியில் திளைத்திருக்கும் இந்நிலையில் மனம் செயலாற்று வெறுமையாக இருக்கும், மெய்யுணர்வாக விளங்கும் பரம்பொருளை தரிசிப்பதற்கு இந்த மன வெறுமை நிலையே தேவைப்படுகிறது என்பதை அறிந்து தெரிந்தார். தாயுமானவர் என்றைக்கும் அழியாத சிவராஜயோகம் வேண்டினார். சிவராஜயோகம் என்பது யோகத்தை கருவியாக கொண்டு சிவத்தியானம் சமாதி என்பனவற்றை முயன்று அடைதலாகும். அகங்காரம் ஆணவத்தை காட்டிலும் கொடியது இந்த இயல்பினை கட்டுபடுத்த இயலாது என வருந்தி இறைவினிடம் முறையீடு செய்தார். மெய்யறிவு பெறுவதற்கு எவ்வித பயிற்சியும் பெறாமை கருதி வருந்தினார். இறையருள் பெறும் பக்குவம் எப்போது வாய்க்குமோ என்று ஏங்கினார். மனம் இறைவனின் திருவடியில் இடும் பலியாகவும் அன்பு அபிசேக நீராகவும் உயிர் நைவேத்தியமாகவும் பிராணனையும் அறிவையும் தூபதீபமாகவும் கொண்டு துதிப்பாதாக கூறுகிறார் தாயுமானவர். உடலும் உயிரும் உடைமைகளும் மனிதனுக்கு சொந்தமானவையல்ல அவை இறைவனுக்கு சொந்தமானவை அவனிடம் ஒப்படைக்கப் படவேண்டியவை என்று கூறித் தன்னை சேர்த்து கொள்ளும்படி இறைவனிடம் முறையிடுககிறார் தாயுமானவர். தாயில்லாச் சேய் போல் அலைந்து துன்புற்ற தன்னை தாயைக் காட்டிலும் கருனை காட்டி மீட்கும்படி சிந்தை நைந்துருக இறைவனிடம் முறையிட்டவர் தாயுமானவர். இறப்பதும், பிறப்பதும் ஆன்மாவின் முடிவல்ல. உடல் மாயை அழிக்கூடியது இந்தச் சித்த தத்துவத்தை உணர்ந்து உலகுக்குரைத்தவர் ஞானாசிரியர் தாயுமானவர் அவருடைய அருட்புலம்பல்களில் சில: என்னை மாயையினின்றும் நீக்கி ஆணவலக் கட்டை அறுத்து நேரே அறிவு வொளியில் எம்மை சேர்த்து வைக்கும் தூக்கி திருவடியை வணங்கும் நாள் எந்நாளே? கருப்கைக்கு இனிஇடம் காட்டாமல் எப்போதும் கருப்பூர மணம் வீசும் கடத்தப் பெருமானின் திருமுகத்தையேகண்டு என் குற்றத்தை ஒழிப்பது எந்நாளோ? மண் முதலிய ஐந்து பாதங்களான உடலுடன் கூடி உலகில் அலைந்து வருந்திய துன்பம் ஒழிய பிரகணத்தலைவரான சிவபெருமானின் திருவருளை நாடும் நாள் எந்நாளே? தீமை விளைவிக்கும் காரணமான பேராசையாம் புலைத்தொழிலியல் பின் அறிவு சென்று விடாது திருவருளால் நன்னெறியில் சேரும் நாள் எந்நாளே? குருடனுக்கு உலகம் முழுவதும் இருள் மயமாக இருக்கும் அதுபோல என் அறிவில் ஆணவ தொடர்பால் விளைந்த அஞ்ஞான மயமாக இருட்கடல் வற்றிப் போவது எந்நாளோ? உலகத் தொடர்புடன் ஆசையின்றி முற்றத் துறந்த சிவனாரும் செல்வம் பெற்ற நல்லதவததவரான பட்டினித்தாரும் அவருடைய மாணவரான பத்திரகிரயார் ஆகியோரின் பண்பை உணர்வது எந்நாளோ? கண்ணால் கண்டவை நிலையில்லாமை என்றும், எங்கும் நிறைந்துள்ள சிவமே நிலையானது என்றும் கூறிய சிவவாக்கியரின் திருவடியை அடையும் நாள் எந்நாளோ? காக்கை, நரி, செந்நாய், கழுகு என்ற இவை சுடுகாட்டில் கூட்டாக கூடி ஒரு நாள் தின்று ஏப்பம் இடுவதற்கு விருந்தாய் இருக்கும் இந்த உடலை "சீ" என்று வெறுப்பது எந்நாளோ.? என் அறிவை ஐம்பொறிகளின் வழியே செல்லவிடாது அடக்கி என்னை போலவே மனித வடிவம் கொண்டுவந்த மவுன குருவின் திருவருள் நிறைவிலே அடியேன் கலந்திடும் நாள் எந்நாளோ? கொடிய பிறப்பிணியை ஒழித்து உலகத்து அடியார்களை ஆட்கொள்ளும் ஞான அரசன் திருஞானசம்பந்தரின் திருவருளை பெறும் நாள் எந்நாளோ? மயக்கும் மாதரால் மயங்கிய நிலைப்பற்றி அருட் புலம்பல்: இளமைப் பருவத்தில் பசுமையான கொங்கைகளால் ஆடவரை மயக்கும் மாதரின் பாழான மயக்கம் நஞ்சு என்று உணர்ந்து வெறுத்து ஒதுக்கி இறைவன் திருவருளை அடையும் நாள் எந்நாளோ? கச்சினால் கட்டப்பட்டுள்ள முலையையும் கரும்புசாறு போன்ற இனிய சொல்லையும் உடைய மங்கையர் மயக்கத்தை நீங்குவது எந்நாளோ? மன்மதனை போன்ற மிக்க காமம் உடையவனை வா என்று சாடை காட்டி இருண்ட கண்களான வலையில் சிக்கிக் கொள்ளுமாறு வீசும் மின்னல் போன்ற மங்கையர் பெயரை மறந்து இறைவன் திருவருளை அடைவது எந்நாளோ? கற்கண்டின்னைப் போன்று இன்சொல்லைப் பேசி ஆடவரின் மனக்கருத்தை உணர்ந்து அடிமையாக்கும் மான் விழியுடைய மங்கையரின் நடிப்பை நீங்குவது எந்நாளோ? விழிகளில் உண்டாகும் வெண்மையான பூழை மறைந்திட அறியாமையைத் தீட்டிய பெண்களின் மயக்கத்தினின்று தப்பி பிழைக்கும் நாள் எந்நாளோ? கரைவைத்த புடவையின் கொச்சத்தில் ஆடவரின் உள்ளத்தையெல்லாம் பிணித்து வைத்துக்கொள்ளும் வஞ்சத்தில் வல்ல மாதர் கட்டினின்று நீங்குவது எந்நாளோ? ஆடவரின் வறுமையைக் காட்டி வஞ்சம் செய்யும் அணிகளைஅணிந்து மங்கையரிடத்து விருப்பம் என்ற பாழ் நிலத்தை நீக்கி பரமன் திருவருளான நிலத்ததில்வளர்ச்சி யடைவது எந்நாளோ? ஆணவம், கன்மம், மாயை, என்னும் மும்மலச சேற்றில் உண்டான முழுக் கம்பீர பாகம் என்னும் நரகத்தை போன்ற மலவுடலில் வெறுப்பு அடைவது எந்நாளோ? உடலில் உண்டாக்கின்ற தீய நாற்றம் அனைத்தையும் மஞ்சளை பூசி நாற்றத்தை மறைத்து பொய்யைப் பேசும் வாயுடைய மங்கையரின் பொல்லாங்கை நான் நீங்குவது எந்நாளோ? ஆடவரின் உறுதியான மனம் என்ற பறவை அகப்பட்டு கொள்ளும்படி கூந்தலான காட்டில் மலர் மாலையான வலையை வைக்கும் மங்கையரின் தந்திரத்தை கடக்கும் நாள் எந்நாளோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக