சனி, 22 அக்டோபர், 2016

பெண் பிள்ளை பெற்றவரா?

பெண் பிள்ளை பெற்றவரா?
கன்னிகாதானத்தால் 21 தலைமுறை கரையேற்றும் வரம் பெற்றவர் நீங்களே !

" பெண் சிசு கொலை என்று அறியாத பாவச் செயல் செய்யும் மானீடரே பெண் பிள்ளையால் நீங்கள் பெறும் புண்ணிய பலன் பற்றி அறிந்திருவீரோ?
இப்புண்ணிய தேசத்தில் பிறந்து, பிறவி பயன் அடையும் சைவ மதத்தில் உள்ள நாம் பெண் பிள்ளை பெற்று அவளை கன்னிகாதானம் செய்து திருமணம் செய்து கொடுக்கும் தம்பதியர் அடையும் பலன் 21 தலைமுறை கரையேற்றும் புண்ணியம் பெற்றவரே ஆவர்.

தானத்தைப்பற்றி பல்வேறு வழிகளில் பல்வேறு தரப்பினர் பல தககல் களை கொடுத்ததிருக்கின்றனர். அந்த வகையில் வயிற்றுப்பசியை போக்குகிற அன்னதானம் சிறந்தது என்றும், தானித்தில் சிறந்தது நிதானம் என்றும் பலர் கூறினாலும், தானங்களில் மிகப்பெரிய பலன் அளிப்பதும் மகா தானமாக சாஸ்திரம் குறிப்பது கன்னியாதானத்தைத்தான். திருமணம் செய்து வைக்கும் போது தந்தையானவர் தான் பெற்ற பெண்ணை மற்றொரு குடும்பத்தில் பிறந்த ஆண் மகனுக்கு தானமாக அளித்து அவனிடம் ஒப்படைக்கும் இந்த நிகழ்வே "கன்னிகாதானம்" என்ற பெண் தாரை வார்த்து கொடுத்தல்.

தாரைவார்த்து கொடுப்பது என்பது சாதரண செயல் அன்று , கொடுப்பவர் யாதொரு பிரதிபலனின்றி வேறு ஒருவருக்கு தன்னுடைய பாவ, புண்ணியசெயல்கள், செல்வங்களை தானமாக கொடுக்கும் செயலாகும். மகாபாரத்தில் இந்த தாரை வார்த்து கொடுப்பது என்பதை நமக்கு தெளிவாக உணராலாம். அர்ச்சுணனால் வீசப்பட்ட அம்புகளால் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் கர்ணன் தன்னுடைய புண்ணியச் செயல்களால் தனது ஆன்மா பிரியாது இருப்பதை அறிந்த அர்ச்சுணன் பகவான் கிருஷ்ணனிடம் கேட்க, கர்ணன் செய்த கொடைகளால் அவன் ஆத்மா பிரியாது அவனை சுற்றிக் கொண்டுள்ளது, அவனுடைய புண்ணியங்களை அவனால் தாரை வார்த்து கொடுத்து விட்டால் அவன் ஆன்மா பிரியும் என்பதை விளக்க, உடனே கிருஷ்ணன் வயோதிக அந்தணர் உருவில் சென்று அவனிடம் உள்ள புண்ணிங்களை தாரை வார்க்கச் செய்தபின் கர்ணன் ஆத்மா பிரிவதை நாம் அறிந்த ஒன்றே, எனவே தாரை வார்த்து கொடுப்பது என்பது ஒருவர் தன்னிடம்உள்ள செல்வங்களையோ அவனது அக, புற செல்வங்களை பிறருக்கு யாதொரு பிரிதிபலன் இன்றி கொடுப்பது என்பதற்கிணங்க கன்னிகாதானத்தில் பெண்தந்தையார் மணமகனுக்கு தன்னுடைய பெண் என்ற செல்வத்தை  தாரை வார்த்து கொடுக்கிறார், இதனால் பெண் தந்தையார் கன்னிகாதானம் செய்து பாக்கியம் பெறுகிறார். இந்த நிகழ்வின்போது சொல்லப்படுகிற சங்கல்பமும், மந்திரமும் சாட்சியாக அமைகிறது.
" தானம் பூர்வேஷாம்
தசானாம்பரேஷாம்
மம ஆதமனஸ்ச ஏக
விம் சதிகுல உத்தாரண ......." என்ற அந்த மந்திரம் நீள்கிறது.


அதாவது இதன் முழு விளக்கம் கன்யாதானம் செய்பவனுக்கு முன்னால் உள்ள 10 தலைமுறையும். பின்னால் உள்ள 10 தலைமுறையும் கன்யாதானம் செய்பவனது தலைமுறையும்சேர்த்து ஆக மொத்தம் 21 தலைமுறைகரை சேர்க்கும் சக்தி வாய்ந்த மகத்தான இந்த மகாதானத்தை நான் செய்கிறேன் என்பது இதன் பொருள்.
உன் வம்சவிருத்திக்கா எம் குல விளக்கை உனக்கு தானமாக அளிக்கிறேன் என்று ஒரு தந்தை செய்யப்கூடியது கன்னியாதானம், உலகில் அளிக்கப்படுகிற தானங்களில் எல்லாம் மிகப் பெரியது என்று சாஸ்திரம் கூறுகிறது.


ஆண் பிள்ளையைப் பெற்று , அந்த பிள்ளை செய்கிற கர்மாவின் மூலம் அந்த தலைமுறை மட்டுமே கரையேறும். ஆண்பிள்ளைக்கு குடும்த்தை காக்கின்ற திறமையும், பெரியோர்களை காக்கின்ற சக்தியையும் ஊட்டி வளர்க்கப்பட வேண்டும். அவ்வாறு செயற்படாத ஆண் பிள்ளைகள் ஆண்மை என்றழைக்கப்டும் உரிய பண்பை இழந்தவர்களாகவே கருதப்படும்.
அதேசமயம் பெண் பிள்ளைக்கு நல்லொழுக்கம்,பெரியோர்களை அவமதிக்காமை, குடும்ப உறுப்பினர்களை கனிவாக கவனிக்கும் பண்பு, போன்றவற்றை போதித்து, அவளை கண்ணுக்கு கண்ணாக வளர்த்து மற்றொருவனின் வம்ச விருத்திக்காக அவளை தானம் செய்து கொடுத்தால் தான் மேற்கண்ட பலனை பெறமுடியும். இவ்வாறு பெண்பிள்ளை கன்னிகாதானம் செய்வதால் 21 தலைமுறைகளும் கரை யேறுகிறது என்றால் பெண் பிள்ளையை பெற்றவர் எப்பேர்பட்ட புண்ணிவான் என்று சிலாக்கிறார்கள் சான்றோர்கள்.
இதன் காரணமாகத்தான் முன் காலத்தில் ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவுவது பணக்காரர்கள் தங்கள் செலவில் திருமணம் செய்து வைப்பது போன்ற செயலில் ஈடுபட்டனர் , வசதி வாய்ப்பு பெற்றவர்கள் கடமைக்கா செய்யாமல் ஒரு ஏழை பெண் மண வாழ்க்கை அமைய உள்ளார்ந்த அன்போடு உதவி செய்தால், தனது வம்சா வழியில் அனுபவித்து வரும் மிக் கொடியபாவங்ளின் தீவிரத்தில் இருந்து விடுபடலாம் என்பது சாஸ்திர வாக்கு
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com

http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக