மாணிக்க வாசகர் பாடிய
திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
பாடல் 1
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
பொருள் ; நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16
பொருள் ;
நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
பொருள்;
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்
வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20
பொருள் ;தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21
பொருள் ;
கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22
பொருள் ;
கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
பொருள் ;நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே
ெபாருள் ;
நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
சனி, 31 அக்டோபர், 2015
மாணிக்க வாசகர் பாடிய
திருவாசகம்-திருச்சதகம் /அறிவுறுத்தல்
பாடல் 1
நாடகத்தால் உன் அடியார் போல் நடித்து நான் நடுவே
வீடு அகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்
ஆடகம் சீர் மணிக்குன்றே இடை அறா அன்பு உனக்கு என்
ஊடு அகத் தேநின்று உருகத் தந்தருள் எம் உடையானே. 15
பொருள் ; நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விழைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.
யான் ஏதும் பிறப்பு அஞ்சேன் இறப்பு அதனுக்கு என கடவேன் வான் ஏயும் பெறல் வேண்டேன் மண் ஆள்வான் மதித்தும் இரேன் தேன்ஏயும் மலர்க்கொன்றைச் சிவனே எம்பெருமான்எம் மானே உன் அருள் பெறும் நாள் என்று என்றே வருந்துவனே. 16
பொருள் ;
நான் பிறவித் துன்பத்துக்கு அஞ்ச மாட்டேன். இறப்புத் துன்பத்துக்கு அஞ்சுகின்றிலேன். மண்ணுலகத்தையும், விண்ணுலகத்தையும் ஆளவிரும்பேன். உன் திருவருளுக்கு உரியே னாகுங் காலம், எக்காலமோ என்று வருந்துவேன். ஆதலால் என் பிறவியை ஒழித்தருள வேண்டும்.
வருந்துவன்நின் மலர்ப்பாதம் அவைகாண்பான் நாய்அடியேன் இருந்து நலம் மலர் புனையேன் ஏத்தேன் நாத்தழும்பு ஏறப் பொருந்திய பொன் சிலை குனித்தாய் அருள் அமுதம் புரியாயேல் வருந்துவன் அத்தமியேன் மற்று என்னேநான் ஆமாறே. 17
ஆம்ஆறுஉன் திருவடிக்கே அகம்குழையேன் அன்பு உருகேன் பூமாலை புனைந்து ஏத்தேன் புகழ்ந்து உரையேன் புத்தேளிர்க் கோமான் நின் திருக்கோயில் தூகேன் மெழுகேன் கூத்து ஆடேன் சாம் ஆறே விரைக்கின்றேன் சதுராலே சார்வோனே. 18
வானாகி மண்ணாகி வளிஆகி ஒளிஆகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யான் எனது என்று அவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என் சொல்லி வாழ்த்துவனே. 19
பொருள்;
ஆகாயம், மண், காற்று, ஒளி, ஊன், உயிர் முதலாகிய எல்லாப் பொருள்களாகியும், அவற்றின் உண்மை இன்மை களாகியும் அவற்றை இயங்குவிப்போன் ஆகியும் யான், எனது என்று அவரவர்களையும் கூத்தாட்டுவானாகியும் இருக்கின்ற உன்னை என்ன சொல்லிப் புகழ்வேன்?
வாழ்த்துவதும் வானவர்கள் தாம்
வாழ்வான் மனம் நின்பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து
தம்மை எல்லாம் தொழ வேண்டிக்
சூழ்த்த மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே. 20
பொருள் ;தேவர் உன்னைத் துதிப்பது, தாம் உயர்வடைந்து தம்மை எல்லாரும் தொழ விரும்பியேயாம். வண்டுகள் மொய்த்து ஒலிக்கின்ற கொன்றை மாலையை அணிந்தவனே! நான் அப்படி யின்றி என் பிறவித் தளையை அறுத்துக் கொள்ள விரும்பியே உன்னைத் துதிக்கின்றேன்.
பரவுவார் இமையோர்கள் பாடுவன நால்வேதம்
குரவுவார் குழல் மடவாள் கூறு உடையாள் ஒரு பாகம்
விரவுவார் மெய் அன்பின் அடியார்கள் மேன்மேல் உன்
அரவுவார் கழல் இணைகள் காண்பாரோ அரியானே. 21
பொருள் ;
கடவுளே! உன் அருமை நோக்கித் தேவர் உன்னைப் பரவுகின்றனர். வேதங்கள் ஓதி மகிழ்கின்றன. உமாதேவி ஒரு பாகத்தை நீங்காது இருக்கின்றனள். மெய்யடியார்கள் கூடிக் காண்கின்றனர். நான் ஒன்றும் செய்திலேன். ஆயினும் என்னை உன் பெருங் கருணையால் ஆட்கொள்ள வேண்டும்.
அரியானே யாவரக்கும் அம்பரவா அம்பலத்து எம்
பெரியானே சிறியேனை ஆட்கொண்ட பெய்கழல் கீழ்
விரைஆர்ந்த மலர்தூவேன் வியந்து அலறேன் நயந்து உருகேன் தரியேன் நான் ஆம்ஆறுஎன் சாவேன் நான் சாவேனே. 22
பொருள் ;
கடவுளே! சிறியேனை ஆட்கொண்டருளின உன் திருவடியைப் பாடுதல், மலர் தூவி மகிழ்தல், வியந்து அலறல், நயந்து உருகுதல் முதலியவற்றைச் செய்து உய்யும் வகை அறியாமல் உயிர் வாழ்கின்றேன். எனவே நான் இறப்பதே தகுதியாகும்.
வேனில் வேள் மலர்க்கணைக்கும் வெள் நகை செவ்வாய்க்கரிய பானல் ஆர் கண்ணியர்க்கும் பதைத்து உருகும் பாழ் நெஞ்சே ஊன் எலாம் நின்று உருகப் புகுந்து ஆண்டான் இன்றுபோய் வான் உளான் காணாய் நீ மாளா வாழ்கின்றாயே. 23
பொருள் ;நெஞ்சமே! மலர்க்கணைக்கும் மாதர்க்கும் பதைத்து உருகி நின்ற நீ, இறைவனது பிரிவுக்கு ஆற்றாது உருகியிறந்து படுவாய் அல்லை; ஆதலால் நீ பயன் அடையாது ஒழிகின்றனை.
வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு
ஆழ்கின்றாய் ஆழாமல் காப்பானை ஏத்தாதே
சூழ்கின்றாய் கேடு உனக்குச் சொல்கின்றேன் பல்காலும்
வீழ்கின்றாய் நீ அவலக் கடல் ஆய வெள்ளத்தே
ெபாருள் ;
நெஞ்சமே! வாழ்வது போல் நினைத்து வாழாது இருக்கின்றாயே! நான் வற்புறுத்திச் சொல்லியும் இறைவனை வழி படுதல் இல்லாமல், உனக்கு நீயே கேடு சூழ்ந்து துன்பக் கடலில் விழுந்து அழுந்துகின்றாய். உன் அறியாமைக்கு நான் என் செய்வேன்?
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
வெள்ளி, 30 அக்டோபர், 2015
தினமும் ஒரு தேவாரம் / அப்பர் பாடியது
திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்
நீற்றையில் இடப்பட்ட போது, பாடிய பதிகம் " மாசில் வீணையும் மாலை மதியமும்"
நமச்சிவாயவே ஞானமும் கல்வியும்
நமச்சிவாயவே நானறி விச்சையும்
நமச்சிவாயவே நா நவின்று ஏத்துமே
நமச்சிவாயவே நன்னெறி காட்டுமே
விளக்கம்
திருநாவுக்கரசர் தமிழ் மொழியில் நல்ல புலமை பெற்றிருந்தது மட்டுமல்லாமல், வடமொழி, பிராகிருதம், பாலி ஆகிய மொழிகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றிருந்தார். அத்தகைய புலமை பெற்றிருந்த காரணத்தால் தான் சமண கொள்கைகளை, ஐயம் திரிபறக் கற்று, புத்தர்களுடன் வாது செய்து அவர்களை வெல்லும் திறம் கொண்டிருந்தார். அப்படி இருந்தும், நமச்சிவாய மந்திரம் தான் கற்ற கல்வி என்று கூறுவதிலிருந்து நமச்சிவாய மந்திரத்தினை எவ்வளவு உயர்வாக அவர் மதித்தார் என்பது நமக்கு இங்கே புலனாகின்றது.
பொழிப்புரை
நமச்சிவாய மந்திரமே நான் அறிந்த கல்வியாகும். நமச்சிவாய மந்திரமே அந்த கல்வியால் நான் பெற்ற ஞானமுமாகும். நமச்சிவாய மந்திரம் தான் நான் அறிந்த வித்தையாகும். நமச்சிவாய மந்திரத்தை எனது நா இடைவிடாது சொல்லும். இந்த நமச்சிவாய மந்திரம் தான் வீடுபேற்றை அடையும் வழியாகும்.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை. பூமாலை
புதன், 28 அக்டோபர், 2015
திரு நாவுக்கரசர் சுவாமிகள் அருளி தேவாரம்
மாசில் வீணையும் – பாடல் 1
(பொதுப் பதிகம் – குறுந்தொகை)
பின்னணி
அப்பர் பிரானின் வாழ்க்கையின் திருப்பு முனையாக இருந்த சூலை நோயினை அவருக்கு அளித்து சிவபெருமான் அவரை ஆட்கொண்டதையும், கூற்றாயினவாறு என்று தொடங்கும் பதிகத்தினைப் பாடிய பின்னர் அவரது சூலை நோய் தீர்க்கப்பட்டதையும், இறைவனின் அருளால் தீராததாக கருதப்பட்ட தனது நோய் தீர்ந்த பின்னர், புது மனிதனாக மாறிய அப்பர் பிரான், நாமார்க்கும் குடி அல்லோம் என்று வீரமுழக்கம் இட்டதையும் நாம் சென்ற சில நாட்களாக சிந்தித்து வந்தோம். அதன் பின்னர் அவரது வாழ்வில் நடந்த நிகழ்ச்சியுடன் தொடர்பு கொண்ட மாசில் வீணையும் என்று தொடங்கும் பதிகத்தினை இன்று முதல் நாம் சிந்திக்க இருக்கின்றோம்.
தங்களுக்கு குருவாக இருந்த தருமசேனர், மீளவும் சைவ சமயம் சார்ந்ததையும், தங்களால் தீர்க்க முடியாத கடுமையான சூலை நோய் சிவபிரான் அருளால் தீர்க்கப் பட்டதையும், அவருக்கு திருநாவுக்கரசர் என்ற நாமம் சிவபிரான் அளித்ததையும், அவருக்கு மக்கள் அளித்த வரவேற்பினையும் அறிந்த சமண குருமார்கள், நடந்ததை உள்ளவாறு பல்லவ மன்னன் அறிந்தால் தங்களது செல்வாக்கு குறையும் என்பதை உணர்ந்தனர். எனவே மன்னனிடம் நடந்ததை திரித்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்தனர். தனது தமக்கையார் பின்பற்றும் சைவ சமயத்தைச் சார வேண்டும் என்பதற்காக தருமசேனர், சூலை நோய் வந்தது போல் நடித்து அனைவரையும் ஏமாற்றியதாகவும், சைவ சமயம் சார்ந்ததன் பின்னர் சமண மதத்தை இழிவாக பேசுவதாகவும் மன்னனிடம் முறையிட்ட குருமார்கள், அவரை அழைத்து மன்னன் விசாரணை செய்யவேண்டும் என்று கோரினார்கள். மன்னனும் தனது மந்திரியையும் காவலர்களையும் திருநாவுக்கரசரை விசாரணை செய்ய அழைத்து வர அனுப்பினான்.
திருவதிகை சென்ற அமைச்சர் திருநாவுக்கரசரை சந்தித்தபோது, அவர் நாமார்க்கும் குடியல்லோம் என்று முழங்கினார். தான் துறவி என்பதால் எந்த அரசரின் ஆணையும் தன்னைக் கட்டுப்படுத்தாது என்றும், தான் எவருக்கும் குடிமகன் அல்ல என்பதையும் தெரிவித்த திருநாவுக்கரசர் முதலில் மன்னனைக் காண மறுத்தார். அவரை அழைத்துச் செல்லாவிடின் தங்களுக்கு ஆபத்து நேரிடும் என்று அவரிடம் தெரிவித்த அமைச்சர், தனது உயிரினைக் காப்பாற்றும் பொருட்டு நாவுக்கரசு பெருமானை தங்களுடன் வருமாறு வேண்டவே, தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படக்கூடாது என்ற நல்லெண்ணத்துடன், தனக்கு ஏற்படும் இடர்களுக்கு சிவபெருமான் துணையாக இருப்பார் என்ற நம்பிக்கையுடன் நாவுக்கரசர் அவர்களுடன் மன்னனை சந்திக்கச் சென்றார். இதனிடையில் சமண குருமார்கள் நாவுக்கரசரை நீற்றறையில் (சுண்ணாம்புக் காளவாய்) இடுவதே அவர் செய்த குற்றத்திற்கு உரிய தண்டனை என்று மன்னனிடம் கூறவே, மன்னனும் அந்த தண்டனையை நிறைவேற்றுமாறு உத்தரவிட்டான். நீற்றறையின் உள்ளே அடிகளாரை இருத்தி, வெளியே தாளிட்டு காவலுக்கு ஆட்களையும் மன்னன் நியமித்தான். நாயனார் ஈசன் அடியவருக்கு துன்பங்களும் வருமோ என்ற நம்பிக்கையில், நீற்றறையின் உள்ளே அமர்ந்தபடியே இந்தப் பதிகத்தை பாடினார்,
பாடல் 1
மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே
விளக்கம்
வீங்கு = பெருகிய
இளவேனில் = சித்திரை, வைகாசி மாதங்கள்
மூசு வண்டு = மொய்க்கும் வண்டு
அறை = ஒலிக்கின்ற.
வெப்பத்தைத் தரும் நீற்றறையின் உள்ளே அமர்ந்திருக்கும் எவருக்கும் வெப்பத்தை அளிக்கும் பொருட்களே நினைவுக்கு வரும். ஆனால் சிவபிரானது அருளால் வெப்பத்தைக் கொடுக்கும் நீற்றறையும் குளிர்ந்த காரணத்தால் நாவுக்கரசருக்கு நீற்றறை உடலுக்கும் உள்ளத்திற்கும் மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தனது ஐந்து புலன்களும் இன்பமான சூழ்நிலையினை உணர்ந்த தன்மையை, ஐம்புலன்களுக்கும் இன்பம் கொடுக்கும் பொருட்களை இங்கே குறிப்பிட்டு நமக்கு நாவுக்கரசர் இங்கே உணர்த்துகின்றார். அத்தகைய சூழ்நிலைக்கு இறைவனது திருவடிகளே காரணம் என்பதையும் அந்த சூழ்நிலை எவ்வாறு இருந்தது என்பதையும் இங்கே நமக்கு தெரிவிக்கின்றார்.
திருநாவுக்கரசர் நீற்றறையில் அனுபவித்த சூழ்நிலையை குறிப்பிடும் சேக்கிழார் இறைவன் அருளால் குளிர்ந்த அந்த சூழ்நிலை ஐம்புலன்களுக்கும் இன்பம் அளிப்பதாக இருந்தது என்று கூறுகின்றார். இந்தப் பாடலில் சேக்கிழார், நாவுக்கரசுப் பெருமான் தனது பதிகத்தில் பயன்படுத்திய சொற்களைக் கையாண்டுள்ளது நாம் உணர்ந்து ரசிக்கத்தக்கது.
வெய்ய நீற்றறை அது தான் வீங்கிள வேனில் பருவந்
தைவரு தண் தென்றல் அணை தண்கழுநீர் தடம் போன்று
மெய்யொளி வெண்ணிலவு அலர்ந்து முரன்ற யாழ் ஒலியினதாய்
ஐயர் திருவடி நீழல் அருளாகிக் குளிர்ந்ததே
பொழிப்புரை
எனது தந்தையாகிய இறைவனின் திருவடி நீழல் செவிக்கு மிகவும் இனிமையான வீணையின் குற்றமற்ற நாதம் போலவும், மாலை நேரத்தில் ஒளி வீசி உடலுக்கும் கண்ணுக்கும் குளிர்ச்சி தரும் நிலவொளி போலவும், நாசிக்கு புத்துணர்ச்சி தரும் தென்றல் காற்றினைப் போலவும், உடலுக்கு மிதமான வெப்பம் தரும் இளவேனில் காலம் போன்றும், வண்டுகள் மொய்க்கும் மலர்கள் கொண்ட குளத்தின் குளிர்ந்த நீரினைப் போல் வாய்க்கு இனிமையாகவும் இருக்கின்றது.
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு. வை.பூமாலை. சுந்தரபாண்டியம்
செவ்வாய், 27 அக்டோபர், 2015
Aanmigam: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...
Aanmigam: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்...: இனிய இல்லற வாழ்விற்கு அகத்தியர் கூறும் வழி முறைகள்:- * காலையில் எழுந்ததும் சிவ சக்ரத்தை மனதில் நினையுங்கள். *பல் தேய்க்கும் போது ஆள் காட்ட...
இன்று (28.10.2015) திரு நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம்.
பாண்டிநாட்டிலே, மதுராபுரியிலே, கூன்பாண்டியரென்பவர் ஒருவர் இருந்தார். அவர் சமணர்களுடைய துர்ப்போதனையினாலே பொய்மார்க்கமாகிய ஆருகதமதத்திலே பிரவேசித்தும், சோழராஜாவுடைய புத்திரியாருஞ் சைவசிகாமணியுமாகிய மங்கையர்க்கரசியாரை மனைவியாராகவும் குலச்சிறைநாயனாரை மந்திரியாராகவும் பெற்றிருந்தமையால், சமயகுரவராகிய திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி சாத்தப்பட்டு, அவர் அருளிய மெய்யுபதேசத்தைப்பெற்று, கூன் நிமிர்ந்து நெடுமாறநாயனாரெனப் பெயர்பெற்றார். தம்மோடு பொர வந்த வடபுலத் தரசர்களோடு திருநெல்வேலிப் போர்க்களத்திலே யுத்தஞ்செய்து வென்று, சைவ சமயம் அபிவிருத்தியாகும்படி நெடுங்காலம் அரசியற்றிக் கொண்டிருந்து, சிவபதம் அடைந்தார்.
இவ்வளவுக்குச் சிவனன்பிற் சிறந்திருந்த நெடுமாற நாயனார் சிவதொண்டுக்குரிய சகல துறைகளும் மேலோங்கத்தக்க வாறாக அரசியற்றி உய்வுற்றார். அது, "வளவர்பிரான் திருமகளார் மங்கையர்க்கரசியார் களபமணி முலைதிளைக்குந் தடமார்பிற் கவுரியனார் இளவர வெண்பிறை யணிந்தார்க் கேற்ற திருத்தொண்டெல்லாம் அளவில்புகழ் பெறவிளக்கி அருள்பெருக அரசளித்தார்" என அவர் புராணத்தில் வரும். ஆகவே, அவர் வரலாறு சார்ந்த இத்தகு மகிமைகளினால் அவர் சீர் சைவவுலகில் என்றைக்கும் நின்ற சீர் ஆதல் பெறப்படும் என்க.
திருச்சிற்றம்பலம்.
திருமூலதேவ நாயனார்
இன்று (27.10.2015) திரு மூலநாயனாரின் குருபூசை தினமானதால் இன்று அவரின் வரலாற்றை சற்று நினைவு கூறுவோம்.
திருக்கைலாசத்திலே, சிவபெருமானது ஆலயத்துக்கு முதற்பெருநாயகராகிய திருநந்திதேவருடைய திருவருளைப் பெற்ற மாணாக்கர்களாகிய சிவயோகிகளுள் ஒருவர், அகத்திய மகாமுனிவரிடத்தே பொருந்திய நண்பினாலே அவருடன் சிலநாள் இருத்தற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் பொதியமலையை அடைதற்பொருட்டு, திருக்கைலாசத்தை அகன்று வழிக்கொண்டு, திருக்கேதாரம், பசுபதிநேபாளம், காசி, ஸ்ரீசைலம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சீபுரம், திருவதிகை, சிதம்பரம் என்னுந் தலங்களை வணங்கிக் கொண்டு திருவாவடுதுறையை அடைந்து, அங்கே சுவாமி தரிசனஞ்செய்து கொண்டிருந்தார்.
ஒருநாள் அந்தத்தலத்தை அகன்று செல்லும்பொழுது, காவிரியாற்றங்கரையிலுள்ள வனத்திலே பசுக்கூட்டங்கள அழுதலை எதிரே கண்டார். சாத்தனூரில் இருக்கின்ற இடையனாகிய மூலனென்பவன் ஒருவன் அவைகளை மேய்க்கின்றவன். அவன் அத்தினத்திலே அவ்விடத்தில் இறந்து கிடந்தான். அப்பசுக் கூட்டங்கள் அவனுடைய சரீரத்தை வந்தணைந்து, சுற்றி மிகக் கதறிச் சுழன்று மோப்பனவாக; சிவயோகியார் கண்டு, “பரமசிவனது திருவருளினாலே இப்பசுக்களுடைய துயரத்தை நீக்கல் வேண்டும்” என்று ஆலோசித்து, “இவ்விடையன் உயிர் பெற்றெழுந்தாலன்றிப் பசுக்கள் துயரநீங்கா” என்று திருவுளங் கொண்டு தம்முடைய திருமேனிக்குக் காவல்செய்து, தாம் அவ்விடையனுடைய சரீரத்தினுள்ளே பிரவேசித்து, திருமூலராய் எழுதார். எழுதலும், பசுக்களெல்லாம் நாத்தழும்ப நக்கி மோந்து, கனைத்து, மிகுந்த களிப்பினாலே வாலெடுத்துத் துள்ளி, பின்புபோய் மேய்ந்தன. திருமூலநாயனார் அது கண்டு திருவுளமகிழ்ந்து, அவைகள் மேயுமிடத்திற்சென்று, அவைகளை நன்றாக மேய்த்தார். சூரியன் அஸ்தமயனமாக, பசுக்கள் தத்தங் கன்றுகளை நினைந்து, தாமே முன் பைய நடந்து, சாத்தனூரை அடைந்தன சிவயோகியார் அப்பசுக்களுக்குப் பின்சென்று, அவைகளெல்லாம் வீடுகடோறும் போகத் தாம் வெளியிலே நின்றார்.
மூலனுடைய மனைவி “நாயகர் இன்றைக்கு மிகத் தாழ்த்தார்” என்று பயங்கொண்டு சென்று, சிவயோகியார் நின்ற இடத்தை அடைந்து, “இவருக்கு ஈனம் அடுத்தது போலும்” என்று. அவருடைய திருமேனியைத் தீண்ட; அவர் அதற்கு இசையாராயினார். அவள் அச்சுற்று மயங்கி, “என்செய்தீர்” என்று, தளர, திருமூலநாயனார் “உனக்கு என்னோடு யாதொரு சம்பந்தமும் இல்லை” என்று மறுத்து, ஒரு பொதும்டத்தினுள்ளே புகுந்து, சிவயோகத்தில் இருந்தார். மனைவி அவ்விரவு முழுதிலும் நித்திரை செய்யாது கவலை கொண்டிருந்து, மற்ற நாள் அதனை விவேகிகள் பலருக்குத் தெரிவிக்க; அவர்கள் வந்து பார்த்து, அவளை நோக்கி, “இது பைத்தியமன்று, வேறு சார்புள்ளதுமன்று. இவர் கருத்துச் சிவயோகத்தினிடத்தேயாம். இனி இவர் உங்கள் சுற்றவியல்போடு கூடார்” என்றார்கள். அவள் அது கேட்டுத் துயரம் எய்தி மயங்க; அவர்கள் அவளைக் கொண்டு போய்விட்டார்கள்.
சிவயோகத்தில் இருந்து திருமூலநாயனார் எழுந்து, முதனாளிலே பசுக்கள் வந்த வழியே சென்று தாஞ்சேமித்த சரீரத்தைக்காணாது, மெய்ஞ்ஞானத்தையுடைய சிந்தையினால் ஆராய்ந்து, “சிவபெருமான் ஆதிகாலத்திலே தம்முடைய பஞ்சவத்திரத்தினின்றும் தோற்றுவித்த காமிக முதலிய சைவாகமங்களிலே பேசப்பட்ட மெய்ப்பொருளைத் தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு உபயோகமாகும் பொருட்டுத் தமியேனைக்கொண்டு தமிழினாலே ஒரு நூல் செய்வித்தற் பொருட்டு இச்சரீரத்தை மறைத்தருளினார்” என்று தெளிந்து, திருவருளைத் துதித்து, திருவாவடுதுறையை அடைந்து, அங்குள்ள சிவாலயத்திலே பிரவேசித்து; சிவபெருமானை வணங்கி, அதற்கு மேற்குப்பக்கத்தில் இருக்கின்ற அரசின் கீழே போய், சிவயோகத்தில் இருந்தார். அவர் மூவாயிரம் வருஷமளவு அங்ஙனம் இருந்து, ஒவ்வொரு வருஷத்திற்கு ஒவ்வொரு திருப்பாட்டாக மூவாயிரம் திருப்பாட்டினால் சைவாகமங்களின் உணர்த்தப்பட்ட ஞானம் யோகம் கிரியை சரியை என்னும் நான்கு பாதங்களையும் பேசுகின்ற திருமந்திரமென்னுந் தமிழ்நூலைப் பாடியருளி, பின் திருக்கைலாசத்தை அடைந்தார். திருப்பெருமங்கலத்திலே, வேளாளர் குலத்திலே, சோழராஜாக்களிடத்திலே பரம்பரையாகச் சேனாதிபதித் தொழில்பூண்ட ஏயர்குடியிலே, கலிக்காமநாயனார் என்பவர் ஒருவர் இருந்தார். அவர் குருலிங்க சங்கமபத்தியிலே சிறந்தவர். திருப்புன்கூரிலுள்ள சிவாலயத்திலே அளவில்லாத திருப்பணிகள் செய்தவர்.
திருச்சிற்றம்பலம்.
திங்கள், 26 அக்டோபர், 2015
திரு அருணகிரி நாதர் * திருக்கழுக்குன்றத்தில் பாடிய
திருப்புகழ்
அகத்தி னைக்கொண் டிப்புவி மேல்சில
தினத்து மற்றொன் றுற்றறி யாதுபின்
அவத்துள் வைக்குஞ் சித்தச னாரடு ...... கணையாலே
அசுத்த மைக்கண் கொட்புறு பாவையர்
நகைத்து ரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ
அலக்க ணிற்சென் றுத்தடு மாறியெ ...... சிலநாள்போய்
இகத்தை மெய்க்கொண் டிப்புவி பாலர்பொன்
மயக்கி லுற்றம் பற்றைவி டாதுட
லிளைப்பி ரைப்பும் பித்தமு மாய்நரை ...... முதிர்வாயே
எமக்க யிற்றின் சிக்கினி லாமுனுன்
மலர்ப்ப தத்தின் பத்திவி டாமன
திருக்கு நற்றொண் டர்க்கிணை யாகவு ...... னருள்தாராய்
புகழ்ச்சி லைக்கந் தர்ப்பனு மேபொடி
படச்சி ரித்தண் முப்புர நீறுசெய்
புகைக்க னற்கண் பெற்றவர் காதலி ...... யருள்பாலா
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேயர
சனைத்து முற்றுஞ் செற்றிட வேபகை
புகட்டி வைக்குஞ் சக்கிர பாணிதன் ...... மருகோனே
திகழ்க்க டப்பம் புட்பம தார்புய
மறைத்து ருக்கொண் டற்புத மாகிய
தினைப்பு னத்தின் புற்றுறை பாவையை ...... யணைசீலா
செகத்தி லுச்சம் பெற்றம ராவதி
யதற்கு மொப்பென் றுற்றழ கேசெறி
திருக்க ழுக்குன் றத்தினில் மேவிய ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
அகத்தினைக் கொண்டு இப்புவி மேல் சில தினத்து மற்று
ஒன்று உற்று அறியாது ... இல்லறத்தைத் தழுவி இந்தப் பூமியில்
சில நாட்கள் வேறு ஒரு நல்ல மார்க்கத்தையும் தெரிந்து கொள்ளாமல்,
பின் அவத்துள் வைக்கும் சித்தசனார் அடு கணையாலே
அசுத்த மைக் கண் கொட்பு உறு பாவையர் நகைத்து
உரைக்கும் பொய்க்கடல் மூழ்கியெ ... பின்பு பயனில்லாத (கேடு
தரத்தக்க) மன்மதன் செலுத்தி வருத்தும் அம்பால், அசுத்தமானதும்
மை பூசியதுமான கண்களைச் சுழற்றும் பெண்கள் சிரித்துப் பேசும்
பொய் என்னும் கடலில் முழுகி,
அலக்க(ண்)ணில் சென்றுத் தடுமாறியெ சில நாள் போய்
இகத்தை மெய்க் கொண்டு இப்புவி பாலர் பொன் மயக்கில்
உற்று ... துக்கத்தில் பட்டு நிலை தடுமாறி இங்ஙனம் சில நாட்கள்
போக, இம்மை வாழ்வை மெய் என்று எண்ணி, இந்தப் பூமி,
குழந்தைகள், பொருள் ஆகிய மாயையில் அகப்பட்டு,
அம் பற்றை விடாது உடலில் இளைப்பு இரைப்பும்
பித்தமுமாய் நரை முதிர்வா(கி)யே எமக் கயிற்றின் சிக்கி
நி(ல்)லா முன் ... அந்த ஆசையை விடாமல் உடலில் சோர்வு, மூச்சு
வாங்குதல், பித்தம் முதலிய நோய்கள் மேலிட, தலை மயிர் நரைத்து
கிழவனாகி, நமனுடைய பாசக் கயிற்றில் சிக்குண்டு நான் நிற்பதற்கு
முன்னதாக,
உன் மலர்ப் பதத்தின் பத்தி விடா மனது இருக்கு(ம்) நல்
தொண்டர்க்கு இணையாக உன் அருள் தாராய் ... உன்னுடைய
மலர் போன்ற திருவடிகளில் பக்தியை விடாதுள்ள மனதைப் பெற்ற
நல்ல அடியார்களுக்கு நானும் சமமாகும்படி உன்னுடைய
திருவருளைத் தந்தருளுக.
புகழ்ச் சிலைக் கந்தர்ப்பனுமே பொடி படச் சிரித்து அண்
முப்புர(ம்) நீறு செய் புகைக் கனல் கண் பெற்றவர் காதலி
அருள் பாலா ... யாவரும் புகழும் (கரும்பு) வில்லை ஏந்திய மன்மதனும்
எரிந்து போகவும் சிரித்து, தம்மை அணுகி வந்த திரிபுரத்தையும்
சாம்பலாக்கிய புகை நெருப்பைக் கொண்ட நெற்றிக்கண்ணை
உடையவரான சிவபெருமானுடய காதலியாகிய பார்வதி பெற்றருளின
மகனே.
புவிக்குள் யுத்தம் புத்திரர் சேய் அரசு அனைத்து(ம்) முற்றும்
செற்றிடவே பகை புகட்டி வைக்கும் சக்கிர பாணி தன்
மருகோனே ... பூமியில் போர் வரவும் (திருதராஷ்டிரனின்) பிள்ளைகள்,
அவர்களின் குழந்தைகள், இதர அரசர்கள் யாவரும் முழுப் பகையாகவும்,
(மகாபாரதப்) போரைத் துவக்கி வைத்த, சக்ராயுதத்தைக் கையில் ஏந்திய,
திருமாலின் மருகனே,
திகழ்க் கடப்பம் புட்பமது ஆர் புய(ம்) மறைத்து உருக்
கொண்ட அற்புதமாகிய தினைப் புனத்து இன்புற்று உறை
பாவையை அணை சீலா ... விளங்கும் கடப்ப மலர் மாலை நிறைந்த
தோள்களை மறைத்து வேறு கோலத்தைப் பூண்டு, அற்புதம் நிறைந்த
வள்ளி மலையில் உள்ள தினைப் புனத்தில் இன்பமாக வாழ்ந்த
வள்ளியைத் தழுவும் குணவானே,
செகத்தில் உச்சம் பெற்ற அமராவதி அதற்கும் ஒப்ப என்று
அழகே செறி திருக் கழுக் குன்றத்தினில் மேவிய
பெருமாளே. ... பூமியில் மேலான சிறப்பைப் பெற்று, தேவேந்திரன்
தலைநகராகிய அமராவதிக்கு ஒப்பாகும் என்று விளங்கும்படி அழகு
நிறைந்த திருக்கழுக் குன்றத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே.
* திருக்கழுக்குன்றத்தின் தலவிருட்சம் வாழையாதலால் இதற்கு 'கதலிவனம்' என்றும் பெயர்.
வெள்ளி, 23 அக்டோபர், 2015
சுந்தரரர் தேவாரம் இடக்கண் பார்வை பெற்ற பதிகம்
வியாழன், 22 அக்டோபர், 2015
சுந்தரர் தேவாரம்
செவ்வாய், 20 அக்டோபர், 2015
சதுரகிரி ஆனந்தவல்லியம்மன்
தென்மாவட்டங்களில் ஆடி அம்மாவாசை முடிந்து நவராத்திரி துவங்கி விட்டாலே ஞாபகம் வருவது சதுரகிரி கொலு பூசை தான். ஏனெனில் தென்மேற்கு பருவக்காற்று குற்றால சீசன் முடிந்து வடகிழக்கு பருவக்காற்று ஆரம்பித்து விட்டால் மலை பிரதேச ரம்மியமான பொழுபோக்குடன் கூடிய ஆன்மீக சுற்றுலா தலமாக கொண்டாடி அந்த சில் என்ற ரம்மியமான சூழலை அனுபவித்து மகிழ்வது சதுரகிரியை சுற்றியுள்ள கிராம மக்களும் அதனைச் சார்ந்த மக்களும் தான் ஐப்பசி பிறந்து விட்டாலே ஐப்பசி புண்ணிய ஸ்தானமாக ஸ்தானம் (குளிக்க ) செல்லும் இடம். மற்றும் இது ஒரு இளம் சீரார்களின் பிக்னிக் பிளேஸ் இந்த சதுரகிரி வாசஸ்தலம் தான்.
இந்த சதுரகிரியானது மேற்கு மலைத் தொடரில் , மேருமலையின் முதலான எட்டு மலைகளுக்கும் தலைமையான மலையாக கருதப்படுகிறது. சதுரகிரி என்றால் ஞாபகத்திற்கு வருவது ஆடி அமாவாசை தான் , ஆடி அமாவாசை மகாலிங்த்தை நினைவு கூறும் திருவிழா. புரட்டாசி மகாள அமாவாசை என்றால் நம் நினைவுக்கு வருவது சதுகிரி ஆனந்த வல்லி யம்மன் தான். சதுரகிரியில் சிவனுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோ அதுபோலவே சக்தி ரூபமான ஆனந்தவல்லிக்கும் , ஏன் அகத்திய மகரிசிக்கு இறைவன் காட்சி கொடுக்கும் போதும் சிவசக்தியாகவே தான் காட்சி தந்தருளினார். இங்குதான் அந்த பராசக்தி சூரனை வதம் செய்ய ஒன்பது தினங்கள் தவம் செய்து சூரனை வதம் செய்தாள். எனவே இங்கிருக்கும் ஆனந்தவல்லிக்கும் பெருமை சேர்ப்பது இந்த சதுரகிரிதான்.
சதுரம் என்றாலே நான்கு பக்கங்களைக் கொண்டது என்பதற்கிணங்க இங்குள்ள ஆலயம் கிழக்கே இந்திர கிரியும், தெற்கில் ஏமகிரியும், மேற்கில் வருணகிரியும், வடக்கில் குபேரகிரியுமாக எல்லைகளாய் கொண்டு நடுவில் சஞ்சீவிகிரியைக் கொண்டு அமைந்துள்ள மலைதான் சதுரகிரி. இச் சதுரகிரியில் சிவ மூர்த்தி, சுந்தரலிங்கம், மகாலிங்கம், சந்தனலிங்கம்,இரட்டை லிங்கம் என்று நான்கு திருமேனிகளைக் கொண்டு எழுந்தருளியுள்ளார். மூலிகை வளங்களைக் காண சதுரகிரி வந்த அகஸ்தியரால் பிரதிஷ்டை செய்யப் பெற்று அவருக்கு திருக்கையாலயத்தில் நடந்த தன் திருமணக் காட்சியைக் கண்டுகளிக்கத் தந்தருளியவரே சுந்தரலிங்கர். பச்சைமால் என்னும் ஆயர்குல முதல்வனுக்காக லிங்க வடிவில் காட்சி கொடுத்தருளியவர் மகாலிங்கர் பின்னர் இறைவன் உமையொரு பாகமாகி அர்த்த நாரீஸ்வரர் என்னும் பெயர் கொண்டெழுந்தருளும் பொருட்டு சர்வலோக மாதாவாகிய உமையம்மை தவவேடந்தாங்கி சந்தன மரத்தடியில் காட்சி தந்த மூர்த்தியே சந்தனமகாலிங்கமாவார். ஆனந்த சுந்தரன் என்ற வர்த்தகனுக்கு அவன் மனைவி ஆண்டாளம்மாளுக்கும் சங்கரநாராயண மூர்த்தி யாக காட்சி கொடுத்தருளும் பொருட்டு எழுந்தருளியதே இரட்டை லிங்கம்.
இச்சதுரகிரியில் ஸ்ரீ சுந்தரமகாலிங் மூர்த்தி யின் சன்னிதானத்திலிருக்கிற கானாற்றில் சந்திர தீர்த்தமென்ற ஒரு புஷ்ப கரணியும், அதன் வடபக்கத்தில் கெளடின்னிய தீர்த்தமும் உள்ளன.
இச்சதுரகிரியில் குகைகளிலும், ஆசிரமங்களிலும் இருந்து ஆத்ம ஞானம் கருதி பதினென் சித்தர்கள் தவஞான நிஷ்டை புரிந்திருக்கின்றனர். சதுரகிரியின் நடுவில் உள்ள சஞ்சீவி மலையில் உள்ள மூலிகைகள் காய சித்தி பெறுவதற்கும் அஷ்ட சக்திகளான வசிகம், மோகனம், தம்பனம்,பேதனம், மாரணம் , ஆகிருஷ்ணம், உச்சாடனம், வித்துவேடனம் முதலான அஷ்டகருமங்களுக்கும் ஆதாரமாகிய அநேக மந்திர சித்திகளிக்கு உதவுவதேடு இம்மலையின் காற்றானது மனிதனின் தேகத்தில் பட்ட மாத்திரத்திலேயே சகல வியாதிகளையும் போக்க வல்ல மூலிகைகளைக் கொண்டது.
நவராத்திரி கொலு பூசை
இத்தகைய சிறப்பு வாய்ந்த சதுரகிரியில் நீண்ட நெடுங்காலமாக நவராத்திரி கொலு பூசை திருவிழா தென்மாவட்டத்திலுள்ள ஏழுர் சாலியர் மக்களால் அருள்மிகு உமையம்மையின் தவக்கோல ஆனந்தவல்லிக்கு அஷ்ட்டோத்திர முறைப்படி கொலுவில் ஆனந்தவல்லி அம்மையை எழுந்தருளச்செய்து நவராத்திரி ஒன்பது தினங்களிலும் அஷ்ட கோச்சார முறைப்படி பூசைகள் செய்து வரப்படுகிறது.
துன்பங்கள் செய்யும் அசுரர்களை வதம் செய்த சம்கார மூர்த்திகள் போலும் சிவ சக்தியான பரமேஸ்வரிக்கும் வதம் செய்து அசுரர் களை வதம்செய்ய வேண்டு மென்றும், ஆதிபராசக்தியே, பிரம்மா முதலான தேவர்களுக்கெல்லாம் உயர்வானவர் , அவள் அருளாலே வேண்டுவன கிடைக்கும் என்றுஎண்ணிய பிரமர், காலங்கி சட்டைநாதர் ஆகிய மகரிஷிகள் ஆதிபராசக்தியை மகிஷா அசுரனை வதம் செய்ய, தேவி உபாசனை பூசை விரத்தை கொண்டு, தவம் இருக்க செய்ய வேண்டிக்கொண்டதன் நிகழ்வே இந்த சதுரகிரி ஆனந்தவல்லி நவராத்திரி கொலு விழா.
புரட்டாசி மாத அமாவாசைக்கு பின் வரும் பிரதமை தினத்தில் ஆரம்பம் ஆகி விஜய தசமி நாளுடன் இவ் விழா முடிவு பெறும். பிரதமையில் ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் தலை வாழை இலை பரப்பி அதில் நெல்லை பரப்பி, அதன் மேல் திருநூல் சுற்றிய தீர்த்த கும்பத்தை வைத்து, அக்கும்பத்தின் மீது மாவிலை யுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைத்து ம், அதன் முன் வாழையிலையில் பூசை பொருட்களும், படையல் பொருட்களும் வைத்து, நெய்வேத்தியம் செய்து முனைமுறியாத மஞ்சளை ஒரு கயிற்றில் கட்டி மான் தோல் ஆசனத்தில் வடக்கு நோக்கி அமர்ந்து தேவியின் பஞ்சாட்சர மந்திரத்தினை, ஒரு செம்பு தகட்டில் எழுதி கும்பத்தின் முன்பு வைத்து அம்மந்திரத்தை நாள் ஒன்றுக்கு 1008 முறை உருச் செய்து மணமலர்களால் அஷ்ட்டோத்திர அர்ச்சனைகள் செய்து கற்பூர தீபாரதனைகள் செய்து நிகழ்வுக்கு காப்புக்கட்டுதல் என்றுபெயர், இந்நாளிலிருந்த ஒன்பது நாட்களிலும் இது போன்ற பூசைகள் மற்றும் ஆனந்தவல்லி தோத்திரப்பாடல்ககள் பாடி அம்மனுக்கு உருவேற்றி , நமஸ்கரிக்க பிரம்ம முனிவரின் உபாஸனா பூசா விரத்திற்கு இரங்கி அக்கும்பத்தில் இருந்து அலங்கார மங்கை மதி முக விலாசரூபத்தோடு ஆதிபராச்க்தி பிரசன்னமாகி திருக்காட்சி தந்து, ஒன்பதாம் நாள் அம்மனை மலையில் உள்ள சுந்தரரர் ஆலயத்தின் எதிரில் பள்ளத்தில் அசுரான வாழை மரத்தில் உள்ள மகிசாசூரனை அம்பு எய்தி வதம் செய்யும் நிகழ்வு நடைபெறும். அம்மனுக்கு பின்னால் பிரதமை முதல் வளர்க்கப்பட்ட முளைப்பாரியும் உடன் எடுத்துச் சென்று கரைக்கப்படும். முளைப்பாரியம்மன் எடுப்பதால் நல்ல மழை வேண்டி முளைப்பாரியும் கொண்டப்படுகிறது.
இவ்விதம் திருக்காட்சி தந்தருளி சதுரகிரிய திருக்கோவிலில் கொண்டிருக்கும் சர்வ வல்லமை பொருந்திய தேவி அன்னை பராசக்தியாம் ஆனந்தவல்லியை தோத்திரம் செய்ய தோத்திரப்பாடல்கள் சுந்தரபாண்டியத்தில் சாலிய வம்சத்தில் தோன்றி திரு முத்துச்சாமி மூப்பனார் அவர்களின் தோத்திரப்பாடல்கள் சில வற்றை இங்கு வைத்துள்ளேன் தாங்களும் பாடி அந்த ஆனந்தவல்லிஅம்மனின் அருள் பெற்றுய்ய அன்புடன் வேண்டுகிறேன்.
ஆனந்தவல்லியம்மன் தோத்திரப்பாடல்கள் 20ல் சில
விநாயகர் துதி
அல்லல் வினையை யகற்றிடு மானந்த
வல்லிமேற் செந்தமிழ் வழுத்த வேணது
இல்லை யென்னாமலே யீயும் சதுர்வரை
வெள்ளப் பிள்ளையார்தம் மெய்ப்பதம் போற்றுவாம்.
ஆனந்தவல்லியம்மன் வரலாற்று பாடல்
மாதவர்க் கிடர்செய்யு மகிஷா சூரன்தனை
வதைத்திட வராகி வாலை
வளர்சதுர கிரிதனின் மாலிங்கரைக் கருதி
வந்திடுங் கன்னி மாதஞ்
சாதன மதாகவே நவராத்திரி தன்னில்
தசமி வரை பத்து நாளுந்
தவமி வியற்றியே கொலுவினி லிருந்திடத்
தாணுவு மிரங்கி வந்து
தீதரக்கன் கெடவரந் தந்து வாயுதந்
தேவியும் பெற்று வந்து
சிந்திடக் கணைகளை நொந்திட வரக்கனுஞ்
சீரியே யெதிர்த்து வந்த
பாதகன் சிரமற்று வீழவு நொடியினிற்
பதைத்துயிர் துடிக்க மாய்த்த
பங்கயச் செல்வியே ! துங்கமிகு வல்லியே!
பாவை யானந்தி யுமையே!!
தோத்திரப்பாடல் - 1
மங்கள கல்யாணி பரிபூரணி மனோன்மணி
வதன சிங்கார ரூபி
மாலின் சகோதரி வாலை பரமேஸ்வரி
வராகி மாதங்கி வர்மி
சங்கரி சடாக்ஷரி தயாபரி மக்ஷேஸ்வரி
சாமளாதேவி தர்மி
சத்துரு சங்கரி நிர்த்தனி யுத்தமி
தாய் பராசக்தி வாணி
கங்கை திரிபுரை கெளரிகாளி கங்காளி சிவ
காமி தவநேமி வாமி
கமலி கருணாகரி விமலி கிருபாகரி
கபாலி திருசூலி நிலி
அங்கற் கண்ணியுவுராமி யெனதாயினின்
னடியேனே யாள வருவாய்
அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள
ரானந்த வல்லி யுமையே.
பாடல் -2
சந்தனச் சோலைய மஞ்சள் நீரோடையுந்
தடாகமும் பொய்கை வளமுந்
தாய் கன்னி மார்தினம் நீராடி யூஞ்சலிற்
றானாடு கின்ற வனமும்
விந்தைசேர் நவகோடி சித்தர்கள் சதாநிஷ்டை
மேவியே புரியு மிடமு
மேலான சஞ்சீவி மூலிகை ரசவாத
வித்தைக் கிசைந்த தழையுஞ்
சுந்தர மாலிங்கர் சன்னதி வாசல்முன்
றூய திருக்கூட்ட முயர்வுந்
தோணும் பலாவடி தன்னிற் கருப்பண்ண
சுவாமியும் பேச்சியருளும்
அந்தமிகு நவராத்திரி கொலுவலங் காரியே
அடியேனை யாள வருவாய்
அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள
ரானந்த வல்லி யுமையே.
பாடல் 3
மாதா பிதாகுரு தெய்வ முனையல்லாது
மற்று மொரு செயலு முளதோ
மனமும் புண்ணாகியே தினமுங் கண்ணோயினான்
வாடுவது கண்டிருந்து நீயே
சோதனை யாகவே யெதுவுஞ் சொல்லாமலே
சும்மா விருக்க லாமோ
சுருதிமறை வாக்கியம் கேட்பதின் நோக்கமோ
தூங்கிடாத தூக்க மாமோ
பாதமே கதியென்று நம்பினே னிதுவரை
பட்ட துன்பங்கள்போதும்
பளீரென்று நயனங்களொளிதந்து வருள்செயும்
பாக்யமே யெனது பாக்யமே
ஆதரி யீததி யாகிலாண்ட யீஸ்வரி
அடியேனை யாள வருவாய்
அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள
ரானந்த வல்லி யுமையே.
பாடல் 20
சந்தன முந்தனைச் சிந்திக்கு மென்மனந்
தளரா திருக்க வேண்டுஞ்
சரியை கிரியா யோக ஞானமார்க் கந்தனிற்
சார்ந்துமோ பழக வேண்டும்
புந்தியிற் கருதியே புருவநடு மத்தியிற்
பொந்தி மனநிற்க வேண்டும்
பொன்னில மாதர் தமாசையு நிராசையெப்
போதுமே கொளவும் வேண்டும்
எந்தையுயர் சுந்தர மகாலிங்கர் பொற்பத
மெப்பவும் வணங்க வேண்டும்
ஏழுருச் சாலியர் நவராத்திரி யுற்சவ
மெனும் பெயர் துலங்க வேண்டும்
அந்திபகல யெனக் காறுதலைத் தேறுதலை
அருள்புரிந் துதவ வேண்டும்
அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள
ரானந்த வல்லி யுமையே.
பாடல் 21
கும்பமுனி மச்சமுனி சட்டைமுனி கருவூரார்
கொங்க னர் புலிப் பாணியுங்
கோரக்கர் புண்ணாக்கர் கமலமுனி காலாங்கி
கூன ரழுகண்ணர் மூலர்
இன்பமுறு நந்தீசர் சுந்தரம் ரோமரு
மிடைக்காடர் போகநாதர்
இவர்கள் பதிணென்மருந் தவமுனிவர் நாதாக்க
ளிணையடி தனையுந் துதித்து
சம்பிர மாமுத்துச் சாமி பாமாலையாய்
சாற்றினேன் தயவு கூர்ந்து
சகலவித ரோகமும் மகலவிரை வாகவுந்
தள்ளித் துரத்தி யருள்வாய்
அம்பிகை நின்பதஞ் தஞ்சமென வந்தநின்
னடியேனை யாள வருவாய்
அனவரத காலமுஞ் சதுரகிரி மீதுவள
ரானந்த வல்லி யுமையே.
இப்பாடல்களை கொலுவில் பாடி அம்மனுக்கு உருவேற்றி அம்மனின் அருள் பெறலாம்,
(இப்பாடல்கள் வேண்டுவோர் கேட்டுக்கொண்டால் டைப்செய்து அனுப்புகிறேன்.)
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை. சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மிகத் தேடலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com
திங்கள், 19 அக்டோபர், 2015
அறியாமையால் செய்த வினையாலும் விடா.......
வியாழன், 15 அக்டோபர், 2015
Sadhananda Swamigal: ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...
Sadhananda Swamigal: ஒன்பதின் தத்துவம்,என்ன என்பதைத் தெரிந்து கொள்ளுங்க...: 9ன் சிறப்பு தெரியுமா? எண்களில் விசேஷமான எண்ணாக கருதப்படுவது ஒன்பது. அந்த எண்ணில் நீண்ட வாழ்வு எனும் அர்த்தம் பொதிந்திருப்பதாகச் சொல்க...
செவ்வாய், 13 அக்டோபர், 2015
தினமும; ஒரு திருபுகழ;
முத்தைத்தரு பத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்
முக்கட்பர மற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித் திருவரும்
முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்
பத்தற்கிர தத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே
தித்தித்தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்
திக்குப்பரி அட்டப் பயிரவர்
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக்குகு குக்குக் குகுகுகு
குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.
......... சொல் விளக்கம் .........
முத்தைத்தரு பத்தித் திருநகை ... வெண்முத்தை நிகர்த்த, அழகான
பல்வரிசையும் இளநகையும் அமைந்த
அத்திக்கு இறை ... தேவயானை* தேவியின் தலைவனே,
சத்திச் சரவண ... சக்திவேல் ஆயுதத்தை ஏந்தும் சரவணபவக் கடவுளே,
முத்திக்கொரு வித்துக் குருபர ... மோக்ஷ வீட்டுக்கு ஒப்பற்ற ஒரு
விதையாக விளங்கும் ஞான குருவே,
எனவோதும் முக்கட்பரமற்கு ... என்று துதிக்கும் முக்கண்ணர்
பரமசிவனார்க்கு
சுருதியின் முற்பட்டது கற்பித்து ... வேதங்களுக்கு முதன்மையான
ஓம் என்னும் மந்திரத்தை உபதேசித்து,
இருவரும் ... (மும்மூர்த்திகளில் எஞ்சியுள்ள) பிரம்மா, திருமால் ஆகிய
இருவரும்,
முப்பத்துமுவர்க்கத்து அமரரும் அடிபேண ... முப்பத்து முக்கோடி
தேவர்களும் அடி பணிய நின்றவனே,
பத்துத்தலை தத்தக் கணைதொடு ... ராவணனுடைய பத்துத்
தலைகளும் சிதறி விழுமாறு அம்பை விட்டு,
ஒற்றைக்கிரி மத்தைப் பொருது ... ஒப்பற்ற மந்தர மலையான மத்தைக்
கொண்டு பாற்கடலைக் கடைந்து,
ஒரு பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாக ... ஒரு பகற்
பொழுதை வட்டமான சக்ராயுதத்தால் இரவு ஆக்கி,
பத்தற்கு இரதத்தைக் கடவிய ... நண்பனாகிய அர்ச்சுனனுக்கு,
தேர்ப்பாகனாக வந்து தேரினைச் செலுத்திய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள் ... பசுமையான
நீலமேகவண்ணன் திருமால் பாராட்டும் பரம்பொருளே,
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே ... பரிவோடு
என்னைக் காத்தருளும் நாள் ஒன்றும் உண்டோ? (இப்பாடலின் பிற்பகுதி
முருகன் அசுரர்களுடன் செய்த போரினை விரிவாக வருணிக்கிறது).
தித்தித்தெய ஒத்தப் பரிபுர ... தித்தித்தெய என்ற தாளத்துக்கு ஒத்து,
சிலம்புகள் அணிந்த
நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி ... நாட்டியப் பாதங்களை வைத்து
காளிதேவி
திக்கொட்க நடிக்க ... திசைகளில் எல்லாம் சுழன்று தாண்டவம்
செய்யவும்,
கழுகொடு கழுதாட ... கழுகுகளோடு பேய்கள் சேர்ந்து ஆடவும்,
திக்குப்பரி அட்டப் பயிரவர் ... எட்டுத் திக்குகளிலும் உலகங்களைத்
தாங்குகின்ற அஷ்ட பைரவர்கள்**
சித்ரப்பவுரிக்கு ... இந்த அழகிய கூத்துக்கு ஏற்ப
தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக
எனவோத ... 'தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு த்ரிகடக'
என்ற தாள ஓசையைக் கூறவும்,
கொத்துப்பறை கொட்ட ... கூட்டமாகப் பற்பல பறை
வாத்தியங்களை அதே தாளத்தில் முழக்கவும்,
களமிசை முதுகூகை ... போர்க்களத்தில் கிழக் கோட்டான்கள்
குக்குக்குகு குக்குக் குகுகுகு குத்திப்புதை புக்குப் பிடியென
கொட்புற்றெழ ... 'குக்குக்குகு குக்குக் குகுகுகு' என்ற ஓசையோடு
'குத்திப் புதை, புகுந்து பிடி' என்றெல்லாம் குழறி வட்டமாகச்
சுழன்று மேலே எழவும்,
நட்பற்ற அவுணரை ... சினேக எண்ணம் தவிர்த்து விரோத
மனப்பான்மையே கொண்ட அசுரர்களை
வெட்டிப்பலியிட்டுக் குலகிரிகுத்துப்பட ... கொன்று பலி
கொடுத்து, அசுரர் குல மலை கிரெளஞ்சகிரி தூளாக,
ஒத்துப் பொரவல பெருமாளே. ... தர்ம மார்க்கத்துக்குப் பொருந்த,
போர் செய்யவல்ல பெருமாளே.
குறிப்பு:
முருகன் அருணகிரிநாதருக்கு அடி எடுத்துக் கொடுக்கப் பாடிய பாடல் இது.
* தேவயானை கிரியாசக்தி என்பதால், கர்மயோகத்தை முதலில் அனுஷ்டிக்க
அவளைக் குறிப்பிட்டார்.
** அஷ்ட பைரவர்கள்:
அசிதாங்கன், காபாலி, சண்டன், உருரு, குரோதன், சங்காரன்,
பீடணன், உன்மத்தன்.
திங்கள், 12 அக்டோபர், 2015
திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்

திரு + பூ + அல்லி என்பது ‘திருப்பூவல்லி’. இதுவும் பண்டைய மகளிரின் விளையாட்டுதான். அல்லி மலரைக் கொண்டு ஆடிப்பாடுவது. அதில் சிவபெருமானின் பெருமைகளைச் சொல்லும்வண்ணம் மாணிக்கவாசகர் அமைத்திருக்கிறார்.
தில்லையில் அருளப்பட்டது
பாடலின்பம்
சீர்ஆர் திருவடித் திண்சிலம்பு சிலம்புஒலிக்கே
ஆராத ஆசையதாய் அடியேன் அகம்மகிழ,
தேர்ஆர்ந்த வீதிப் பெருந்துறையான் திருநடம்செய்
பேரானந்தம் பாடிப் பூவல்லி கொய்யாமோ.
*
மாஆர ஏறி, மதுரைநகர் புகுந்துஅருளி,
தேவுஆர்ந்த கோலம் திகழ, பெருந்துறையான்
கோஆகி வந்துஎம்மைக் குற்றேவல் கொண்டுஅருளும்
பூஆர் கழல்பரவிப் பூவல்லி கொய்யாமோ.
பொருளின்பம்
சிறப்பு நிறைந்த சிவபெருமானின் திருவடிகளில் திண்மையான சிலம்புகள் எழுப்புகின்ற ஒலியைக் கேட்பதற்கு என் மனத்தில் தீராத ஆசை உண்டானது,
தேர்கள் சிறப்பாகச் செல்லும் அகன்ற வீதிகளைக் கொண்ட திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான் என் உள்ளம் மகிழும்படி திருநடனம் செய்தான், அந்தப் பேரானந்தத்தை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
*
குதிரையின்மேல் ஏறி மதுரைநகருக்குள் புகுந்தான் சிவபெருமான், தன்னுடைய தெய்வ வடிவத்தை அழகுறக் காட்டினான், திருப்பெருந்துறையில் எழுந்தருளியிருக்கும் அந்தப் பெருமான் தலைவனாக வந்து நம்மை ஆட்கொண்டான், எல்லாருக்கும் அருள் பொழியும் அவனுடைய மலர்த் திருவடிகளை நாம் பாடுவோம், அல்லி மலர்களைக் கொய்து ஆடுவோம்.
அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை




அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை நாளை காப்பு நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அன்றையதினம் அம்மன் கொலுவில் எழுந்தருள, திரு ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் ைவத்து இந் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் ஏழுர் சாலியர் சமுதாயத்தினரால் ஏழு முளைப்பாரியும் வளர்க்கப்படும். அனுதினமும் அம்மன் கொலுப்பாடல்கள் பாடியும் சிறப்பு ஆராதனைகளும் செய்து, அம்மன் உரு ஏற்றி ஆனந்தவல்லியின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க சிறப்பு பூசைகள் செய்யப்படும். விழாவிற்கு ஆனந்தவல்லி யம்மன் திருவருளால் நல்ல மழை பெய்தும், அரசு பாதுகாப்பு முயற்சியாலும் தாணிப்பாறை ஒரு சுத்தமான ஒரு ரம்மியமான ஆன்மிகத்தலமாக இவ்வாண்டு காட்சி அளிக்கிறது. வரும்13.10.2015 பிரதமை திதியில் அம்மன் ஏழுர் சாலியர் சமூகத்தினரால் நடத்தப்படும் நவராத்திரி திருவிழாவிற்கு காப்புக் கட்டும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நவராத்திரி கொலும் சிறப்புடன் நடைபெற உள்ளது. ஆன்மிக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இவ்வாண்டு சரியான தருணம் என்பதை பக்த கோடிகள் அனைவருக்கும் விண்ணப்பிக்கப் படுகிறது.
ஞாயிறு, 11 அக்டோபர், 2015
மாணிக்க வாசகர் அருளிய திரு வாசகம்
உலகியல் மற்றும் அருளியல் கல்வி பெற தினமும் இதைப்பாடினால் மெய்ஞான அறிவு பெருகும்.
இரும்புதரு மனத்தேனை
ஈர்த்தீர்த்தென் என்புருக்கிக்
கரும்புதரு சுவைஎனக்குக்
காட்டினைஉன் கழலிணைகள்
ஒருங்குதிரை உலவுசடை
உடையானே நரிகளெல்லாம்
பெருங்குதிரை ஆக்கியவா
றன்றேஉன் பேரருளே பாடல் 1
அடங்கிய அலைகளையுடைய கங்கையின் நீர் ததும்புகின்ற சடையை உடையவனே! இரும்பு போன்ற வலிமையான நெஞ்சையுடையவனாகிய என்னைப் பலகாலும் உன் வசமாக இழுத்து என் எலும்பினை உருகும்படி செய்து உன் இரண்டு திருவடிகளில் கரும்பு தருகின்ற இனிமை போன்ற இனிமையை எனக்கு உண்டாக்கி யருளினாய். இத்தகைய உன்னுடைய பெருங்கருணை நரிகள் எல்லா வற்றையும் பெரிய குதிரைகளாக ஆக்கியது போன்றது அன்றோ
கடைசி பாடல்
பாடல் எண் : 10
நானேயோ தவஞ்செய்தேன்
சிவாயநம எனப்பெற்றேன்
தேனாய்இன் அமுதமுமாய்த்
தித்திக்குஞ் சிவபெருமான்
தானேவந் தெனதுள்ளம்
புகுந்தடியேற் கருள்செய்தான்
ஊனாரும் உயிர்வாழ்க்கை
ஒறுத்தன்றே வெறுத்திடவே.பொழிப்புரை : தேன்போன்றும், இனிமையான அமுதத்தைப் போன்றும் இனிக்கின்ற " சிவாய நம " என சிவபிரானானவன் தானே எழுந்தருளி வந்து, என் மனத்துள் புகுந்து உடம்போடு கூடிய உயிர் வாழ்க்கையை வெறுத்து நீக்கும்படி அடியேனாகிய எனக்கு அருள் புரிந்தான். அதனால் சூக்கும பஞ்சாக்கரத்தைச் சொல்லப் பெற்றேன். இப் பேற்றைப் பெறுவதற்கு நானோ முற்பிறப்பில் தவம் செய்தேன்?. உயிர் வாழ்க்கையை ஒறுத்து அன்றே வெறுத்திட அருள் செய்தான்; அதனால், சிவாயநம எனப் பெற்றேன்; அதற்கு அன்னதொரு தவத்தை நான் செய்தேனோ` என்கிறார்.
புனல் வாத திருப்பதிகம் (ஏடு வையாற்றில் எதிர்த்து வந்தது ) திரு ஞானசம்பந்தர் பாடியது
சமணர்கள், பாண்டியர் நகை உட்கொண்டு சொல்லிய சொற்பொருளை அறியாராகி, திரித்துணர்ந்து. "முன்னே இரண்டு தரம் வாது செய்தோம். இன்னும் ஒருதரம் செய்ய வேண்டும். மூன்றுதரத்தில் ஒருதரமாயினும் வெற்றி பெறுவோம்" என்றார்கள். பாண்டியர் "இது என்னவார்த்தை" என்று மறுத்த பின்னும். பிள்ளையார் சமணர்களை நோக்கி "இனி என்ன வாது செய்வோம்" என வினாவியருள; சமணர்கள் "நாங்கள் இருபக்ஷத்தேமும் எங்கள் எங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை ஓடுகின்ற வைகையாற்றிலே இடுவோம் எதிர்த்துச் செல்லும் ஏடே மெய்ப்பொருளையுடையது" என்றார்கள். பிள்ளையாரும் "அப்படியே செய்வோம்" என்று அருளிச்செய்தார். அப்பொழுது குலச்சிறைநாயனார் சமீபத்தில் வந்து, "இனிச் செய்யப்படும் இவ்வாதிலே தோற்றவர்கள் செய்வது யாது" என்றார். அதைக் கேட்ட சமணர்கள் அவர் மேற் கோபங்கொண்டு, பொறாமை காரணமாக, தங்கள் வாய் சோர்ந்து "நாங்கள் வாதிலே தோற்றோமாயின், எங்களை இவ்வரசர் கழுவில் ஏற்றக்கடவர்" என்றார்கள். இதைக் கேட்ட அரசர் "வைகையாற்றிலே ஏடு இடும்பொருட்டுப் புறப்படுங்கள்" என்று சொல்ல; முன்னே பிள்ளையார் இரத்தினாசனத்தினின்றும் இறங்கிப் போய், முத்துச்சிவிகைமேற் கொண்டு சென்றார். அவர்பின்னே பாண்டியர் குதிரைமேற்கொண்டு சென்றார். சமணர்கள் மயக்கமேற்கொண்டு சென்றார்கள். சமுத்திரத்தை நோக்கித் திரையெறிந்து அதிவேகத்துடன் பாய்கின்ற வைகையாற்றின் கரையை அடைந்தவுடனே பாண்டியர் "இருபக்ஷத்தாரும் தங்கள் தங்கள் சமயவுண்மையை எழுதிய ஏட்டை இடக் கடவர்கள்" என்றார். அரிசியாகிய உள்ளீடில்லாத நெற்பதர்போல "அறிவாகிய உள்ளீடு இல்லாத மக்கட்பதராகிய சமணர்கள் "அத்திநாத்தி" என்று எழுதிய ஏட்டை நதி அதிவேகத்துடன் பாய்தலைக் கண்டும், அவா மேலீட்டினாலே இடுதலும்; அது விரைந்து கொண்டு கடலை நோக்கி ஓடிற்று. சமணர்கள் ஆறுகொண்டோடும் ஏட்டைத் தொடர்ந்து எதிரே அனைப்பவர் போலக் கரைமேல் ஓடிப்போனார்கள். அவ்வேடு நூறுவிற்கிடைக்கும் அப்பாற் சென்றமையால், அதைக் காணுதற்கும் கூடாதவர்களாகி, வேறொருசெயலுமின்றி, தங்களுக்கு நாசகாலம் வந்தது என்று அஞ்சி நடுநடுங்கி, அரசருக்கு எதிரே வந்து தங்கள் நெஞ்சில் அச்சம் வெளிப்பட ஒளிப்பார்போல பிள்ளையாரை நோக்கி "நீரும் உம்முடைய ஏட்டை இட்டால் அறியலாம்" என்றார்கள். பாண்டியராஜா அவர்களை விட்டு பிள்ளையாருடைய திருக்குறிப்பை நோக்க; தம்மை அடைந்த அன்பர்களுடைய சனனமரணங்களுக்கு ஏதுவாய் இருக்கின்ற மலமாயாகர்மங்களை நீக்கியருளுந்தேசிகோத்தமராகிய திருஞானசம்பந்தப் பிள்ளையார், பாண்டியராஜர் தம்முடைய அருமைத் திருக்கரத்தினாலே தீண்டி விபூதி பூசப் பெற்று மல பரிபாகமும் இருவினையொப்பும் உற்று நிற்றலால், அவருக்கும் அவர் போலப் பக்குவப்படும் சர்வான் மாக்களுக்கும் சைவ சமயத்துண்மைப் பொருளை விளக்கும் உபதேசமொழியாகிய "வாழ்கவந்தணர்" என்னும் திருப்பாசுரத்தைப் பாடி, ஏட்டில் எழுதி அத்திருவேட்டைத் தமது திருக்கரத்தினாலே வைகை நதியில் இட்டருளினார். அத்திருவேடு நதியிலே எதிர்ந்து ஜலத்தைக் கிழித்துக்கொண்டு சர்வான்மாக்களுக்கும் இதுவே மெய்ப்பொருள் என்று காட்டிக் கொண்டு சென்றது. பரமசிவனே எல்லாப்பொருளும் என்று எழுதிய திருவேட்டிலே "வேந்தனு மோங்குக" என்று பாடியருளியபடியால் பாண்டியராஜருடைய கூன் நிமிர்ந்தது. ஏடு எதிகொண்டு செல்லும்பொழுது, தேவர்களெல்லாரும் ஸ்தோத்திரஞ்செய்து, புஷ்பமாரி பெய்தார்கள் பாண்டியர் அற்புதங்கொண்டு நின்றார். சமணர்களெல்லாரும் அஞ்சிப்பதைபதைத்துத் தலைகுனிந்து நின்றார்கள். குலச்சிறைநாயனார் அத்திருவேட்டைத் தொடர்ந்து எடுத்தற்கு விரும்பி, காற்றைப்போல அதிவேகத்தோடு செல்கின்ற குதிரைமேல் ஏறிக்கொண்டு, பின் சென்றார். பிள்ளையார் அவ்வேடு தங்கும் பொருட்டு, "வன்னியுமத்தமும்" என்னுந் திருப்பதிகம் பாட; குலச்சிறைநாயனார் சிவாலயத்துக்குப் பக்கத்தில் இருக்கின்ற நீர் நடுவிலே புகுந்து, அங்கே தங்கிய ஏட்டை எடுத்துச் சிரமேற் கொண்டு பெருமகிழ்ச்சி பொங்க, கரையில் ஏறி, திருவேடகத்தில் எழுந்தருளியிருக்குங் கடவுளை வணங்கித் துதித்து, திருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் சந்நிதியில் வந்து அவருடைய திருவடிகளை வணங்கிக்கொண்டு, பாண்டியர் முதலாயினோ ரெல்லாருக்குங் காட்ட; அடியார்கள் எல்லாரும் அத்தியந்த ஆனந்தத்துடனே "ஹரஹர" என்று ஆரவாரித்தார்கள்.
பாடல் எண் : 1
வாழ்க அந்தணர் வானவ ரானினம்
வீழ்க தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெல் லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே.
பொழிப்புரை :
உலக நன்மையின் பொருட்டு வேள்விகள் , அர்ச்சனைகள் , வழிபாடுகள் ஆகியவை செய்யும் அந்தணர்கள் வாழ்க . அவ்வேள்விகளைச் சிவன் நியதிப்படி ஏற்றுச் செலுத்தும் வானவர்கள் வாழ்க . வேள்வி , வழிபாடு இவற்றிற்குரிய பஞ்ச கௌவியங்களையும் , திருநீற்றினையும் அளிக்கும் பசுக்கூட்டங்கள் வாழ்க . வேள்வியின் பயனால் குளிர்ந்த மழை பொழிக . சிவாலய பூசை முதலியவற்றை அழியாது காத்துவரும் மன்னனின் செங்கோலாட்சி ஓங்குக . வேள்விகளால் வரும் நலங்களை அடைய வொட்டாது கேடுவிளைவிக்கும் அயனெறிகளிலுள்ள தீயவை ஆழ்க . உயிர்கள் யாவும் சிவன் நாமத்தை ஓதுக . இவ்வுலக மக்களின் துன்பம் நீங்குக
பாடல் எண் : 2
அரிய காட்சிய ராய்த்தம தங்கைசேர்
எரிய ரேறுகந் தேறுவர் கண்டமும்
கரியர் காடுறை வாழ்க்கைய ராயினும்
பெரிய ராரறி வாரவர் பெற்றியே.
பொழிப்புரை :
பாச ஞானத்தாலும் , பசு ஞானத்தாலும் காண்பதற்கு அரியவர் . பதிஞானத்தால் உணரும் மெய்யன்புடைய அடியவர்க்கு அவர் திருமேனி தரித்து வந்து , நெருப்பேந்திய கையர் , ஏறுகந்தேறுவர் , கண்டமும் கரியவர் , காடுறை வாழ்க்கையராய் எளிதிற்காட்சி அருளுவர் . ஆயினும உலகத்தையே தம் வடிவமாகக் கொண்ட பெரியவர் . அவருடைய தன்மையை யாவரால் அறிந்து கொள்ள முடியும் ?
பாடல் எண் : 3
வெந்த சாம்பல் விரையெனப் பூசியே
தந்தை யாரொடு தாயிலர் தம்மையே
சிந்தியா வெழு வார்வினை தீர்ப்பரால்
எந்தை யாரவ ரெவ்வகையார் கொலோ.
பொழிப்புரை :
இறைவன் வெந்த சாம்பலை வாசனைப் பொடியெனப் பூசியவர் . தந்தையும் , தாயுமில்லாதவர் . தம்மை இடையறாது சிந்திப்பவர்கள் வினையைத் தீர்ப்பவர் . அத்தகைய எம் தந்தையாரான அவரின் பண்புகளை எவ்வகைக் கூற்றால் கூறுவது
பாடல் எண் : 4
ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.
பொழிப்புரை :
இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற தன்மையும் , பழமை வாய்ந்த புகழ்களும் கேட்கவும் , சொல்லவும் தொடங்கினால் அளவில்லாதன . ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி வேண்டா . எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி அவன் புகழ்களைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும் , தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது . தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல் என்னும் நான்காவது ஞானநிலை .
பாடல் எண் : 5
ஏதுக்க ளாலு மெடுத்த மொழியாலு மிக்குச்
சோதிக்க வேண்டா சுடர்விட்டுள னெங்கள் சோதி
மாதுக்க நீங்க லுறுவீர் மனம்பற்றி வாழ்மின்
சாதுக்கண் மிக்கீரிறையே வந்து சார்மின்களே.
பொழிப்புரை :
இறைவனை அன்பால் வழிபடும் ஞானிகளே ! அனுமானப் பிரமாணத்தாலும் உரையளவையாலும் இறைவனை மிகுதியாகச் சோதிக்க வேண்டா . அவன் ஊனக்கண் கொண்டு நோக்கப்புறத்தே சோதிவடிவமாகவும் , அன்போடு கூடி அகத்தால் ஞானக்கண் கொண்டு நோக்க உள்ளொளியாகவும் விளங்குபவன் . அவனை விரைவில் வந்து சார்ந்து , மனம் ஒன்றி வழிபட்டுப் பிறவித் துன்பத்தைப் போக்கிக் கொள்ளுங்கள் . இறைவன் அளவைகளால் அறியப்படும் ஆராய்ச்சிக்கு அப்பாற் பட்டவன் .
பாடல் எண் : 6
ஆடும் மெனவும் மருங்கூற்ற முதைத்து வேதம்
பாடும் மெனவும் புகழல்லது பாவநீங்கக்
கேடும் பிறப்பும் மறுக்கும் மெனக்கேட் டீராகில்
நாடுந் திறத்தார்க் கருளல்லது நாட்ட லாமே.
பொழிப்புரை :
இறைவன் திருநடனம் புரிவதும் , மார்க்கண்டேயருக்காகக் காலனைக் காலால் உதைத்ததும் , வேதங்களை அருளிச் செய்ததும் ஆகிய செயல்கள் புகழ் கருதியா , மன்னுயிர்களின் தீவினைகளை நீக்குவதற்கா , பிறப்பை அறுத்துப் பிறவா நெறியை அளிப்பதற்கா என்று கேட்பீராயின் , இவை தன்னைச் சார்ந்த அடியார்கட்கு அருள் செய்வதற்கேயன்றி வேறு காரணத்தாலல்ல என்று உறுதியாகக் கூறலாம் . இறைவன் உயிர்களிடத்துக் கொண்ட அளப்பருங் கருணையே அவன் செயல்கட்குக் காரணம் .
பாடல் எண் : 7
கடிசேர்ந்த போது மலரான கைக்கொண்டு நல்ல
படிசேர்ந்த பால்கொண்டங் காட்டிடத் தாதை பண்டு
முடிசேர்ந்த காலையற வெட்டிட முக்கண் மூர்த்தி
அடிசேர்ந்த வண்ணம் மறிவார் சொலக்கேட்டு மன்றே.
பொழிப்புரை :
சண்டீசர் நறுமணமுடைய மலர்களைத் தூவிப் போற்றி , நல்ல பசுவின் பால் கொண்டு மணலாலான சிவலிங்கத்திற்குத் திருமுழுக்காட்டத் தந்தை கோபம் கொண்டு காலால் இடற , சிவபூசைக்கு இடையூறு செய்த கால் மீது அருகிலுள்ள கோலை எடுத்து ஓச்ச , அது மழுவாக மாறிக் காலை வெட்டினாலும் , முக்கண் மூர்த்தியான் சிவபெருமான் அவ்வடியவருக்குத் திருவடிப்பேற்றினை அளித்தருளியதை அறிவு சால் அன்பர்கள் அன்றே சொல்லக் கேட்டோம் அல்லமோ ?
பாடல் எண் : 8
வேத முதல்வன் முதலாக விளங்கி வையம்
ஏதப் படாமை யுலகத்தவ ரேத்தல் செய்யப்
பூத முதல்வன் முதலே முதலாப் பொலிந்த
சூத னொலிமாலை யென்றே கலிக்கோவை சொல்லே.
பொழிப்புரை :
வேதத்தை அருளிச் செய்தவனாய் , வேதப் பொருளாகவும் விளங்கும் சிவபெருமானை முதல்வனாகக் கொண்டு , குற்றம் செய்யாது நன்னெறியில் நிற்கும் பொருட்டு உலகத்தோர் அவனைப் போற்றிசைக்க , பூத நாயகனான அவனைப் போற்றிச் சூதமுனிவர் அருளிச் செய்த பதினெட்டு புராணங்களும் ஒழுக்கத்தைப் போதிப்பனவாகும்
பாடல் எண் : 9
பாராழி வட்டம் பகையா னலிந்தாட்ட வாடிப்
பேராழி யானதிடர் கண்டருள் செய்தல் பேணி
நீராழி விட்டேறி நெஞ்சிடங் கொண்ட வர்க்குப்
போராழி யீந்த புகழும் புகழுற்ற தன்றே.
பொழிப்புரை :
கடல்போல் பெருகியுள்ள இப்பூவுலக மக்கள் பகைவர்களால் நலிவுறுத்தி அலைக்கப்பட , அவர்கள் துன்பத்தை அறிந்து அருள் செய்ய விரும்பி , தான் கண்துயிலும் கடலைவிட்டுப் பூமிக்கு வந்து , தம்மைத் தன்நெஞ்சிடமாகக் கொண்ட திருமாலுக்கு அவர் வேண்டுகோளுக்கிணங்கக் காத்தல் தொழில் நன்கு நிகழப் பேராற்றல் மிகுந்த சக்கராயுதப் படையைச் சிவபெருமான் ஈந்தது மெய்யான புகழ் அன்றோ ?
பாடல் எண் : 10
மாலா யவனும் மறைவல்ல நான்மு கனும்
பாலாய தேவர் பகரில் லமு தூட்டல் பேணிக்
காலாய முந்நீர் கடைந்தார்க் கரிதா யெழுந்த
ஆலால முண்டங்கம ரர்க்கருள் செய்த தாமே.
பொழிப்புரை :
திருமாலும் , நான்மறைகளையும் நன்கு கற்ற பிரமனும் , பலராகிய தேவர்களும் சொல்வதற்கரிய அமுதுண்ண விரும்பி , பாற்கடலைக் கடைய அரிதாய் எழுந்த ஆலகால விடத்தை உண்டு , தேவர்களைக் காத்து அருள்செய்தவர் சிவபெருமான்
பாடல் எண் : 11
அற்றன்றி யந்தண் மதுரைத் தொகை யாக்கினானும்
தெற்றென்று தெய்வந் தெளியார் கரைக்கோலை [ தெண்ணீர்ப்
பற்றின்றிப் பாங்கெதிர்வி னூரவும் பண்பு நோக்கில்
பெற்றொன் றுயர்த்த பெருமான் பெருமானு மன்றே.
பொழிப்புரை :
சிவபெருமான் முன்னர்க்கூறிய புகழுரைகட்கு மட்டுமன்றி , மதுரையில் தமிழ்ச்சங்கம் அமைத்து தமிழ் வளர்த்தருளியவர் . சிவபெருமானே முழுமுதற்பொருள் எனத் தெளிவு பெறாதவர்கள் தெளிவுபெறும் பொருட்டு வாதத்தில் உண்மைகாண ஞானசம்பந்தர் இட்ட ஏடு பற்றற்ற சிவஞானிகளின் மனம் பிறவியாற்றை எதிர்த்துச் செல்வது போல , வையையாற்றை எதிர்த்துச் சென்ற தன்மையை நோக்கில் , இடபவாகனத்தின் மீதேறிய சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்பது உண்மையாகும் . ஆதலால் அவர்பால் அன்பு செய்தல் கடன் என்பது குறிப்பு . ஞானசம்பந்தர் சமணர்களோடு புனல்வாதம் செய்ததற்கும் , அப்போது அவரிட்ட ஏடு வையையாற்றை எதிர்த்துச் சென்ற அற்புத நிகழ்ச்சிக்கும் இப்பாடலே அகச்சான்றாகும் .
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை
வெள்ளி, 9 அக்டோபர், 2015
Aanmigam: சனி மகா பிரதோஷம்
Aanmigam: சனி மகா பிரதோஷம்: சனி மகா பிரதோஷம் சனிக்கிழமையில் திரயோதசி வந்தால் அது சனி மகா பிரதோஷம் ஆகும். 10.10.2015 சனிக்கிழமை மகாபிரதோஷம் பிரதோஷ விரத மகிமை ...
செவ்வாய், 6 அக்டோபர், 2015
திரு மாணிக்கவாசக பெருமானாரின் திருவாசக திருஉந்தியார்
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)

