திங்கள், 12 அக்டோபர், 2015

அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை


அருள்மிகு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் இந்த ஆண்டு நவ ராத்திரி கொலு பூசை நாளை காப்பு நிகழ்ச்சியுடன் ஆரம்பமாகிறது. அன்றையதினம் அம்மன் கொலுவில் எழுந்தருள, திரு ஆனந்தவல்லியம்மன் கொலு மண்டபத்தில் ைவத்து இந் நிகழ்ச்சி நடைபெறும். இத்துடன் ஏழுர் சாலியர் சமுதாயத்தினரால் ஏழு முளைப்பாரியும் வளர்க்கப்படும். அனுதினமும் அம்மன் கொலுப்பாடல்கள் பாடியும் சிறப்பு ஆராதனைகளும் செய்து, அம்மன் உரு ஏற்றி ஆனந்தவல்லியின் சக்தி எல்லோருக்கும் கிடைக்க சிறப்பு பூசைகள் செய்யப்படும். விழாவிற்கு ஆனந்தவல்லி யம்மன் திருவருளால் நல்ல மழை பெய்தும், அரசு பாதுகாப்பு முயற்சியாலும் தாணிப்பாறை ஒரு சுத்தமான ஒரு ரம்மியமான ஆன்மிகத்தலமாக இவ்வாண்டு காட்சி அளிக்கிறது. வரும்13.10.2015 பிரதமை திதியில் அம்மன் ஏழுர் சாலியர் சமூகத்தினரால் நடத்தப்படும் நவராத்திரி திருவிழாவிற்கு காப்புக் கட்டும் நிகழ்வும், அதனை தொடர்ந்து நவராத்திரி கொலும் சிறப்புடன் நடைபெற உள்ளது. ஆன்மிக பக்தர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட இவ்வாண்டு சரியான தருணம் என்பதை பக்த கோடிகள் அனைவருக்கும் விண்ணப்பிக்கப் படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக