ஞாயிறு, 4 அக்டோபர், 2015

கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க


கரு சிதையாமல் உருப்பெற்று ஊனமின்றி குழந்தை பிறக்க பன்னிரு திருமுறைகளில், தித்திக்கும் அறநூல் தேவாரம் தந்த ஆசான் திரு நாவுக்கரசர் என்ற திருவருட் செல்வர் என்ற அப்பர் பெருமான், கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் குழந்தைகள் கரு சிதையாமலும், ஊனமின்றியும் குழந்தை பிறக்க, நாவுக்கரசர்அருளி இப்பதிகப் பாடல்களை பாடினால் நல்ல குழந்தைகள் நலமுடன் பிறக்கும் என்பது தின்னம் , இப்பதிகம் சிவ பெருமானின் வீரதீரச்செயல்களையும், அவன் புகழையும், எட்டு மூர்த்தியாகவும், அவன் வீரமும், கருணையும் திருமாலுக்கும், தனது உடம்பில் ஒரு பாகத்தை உமையம்மைக்கும் கொடுத்ததையும் விரித்துரைக்கிறார். மேலும் பெண்களின் கர்ப்பம் தரிக்கும் காலத்தும் அது வினையால் சிதையும் காலத்தும் இறைவனின் புகழை முழுமையாக எடுத்துச் ெசால்லும் இப் பதிகத்தை தூய்மையான இடத்ததில் கிழக்கு முகமாக ஆசனம் இட்டு அதன் ேமல் அமர்ந்து அருள்தரும் கர்ப்பரட்சி (கரும்பைனயாளம்மை) உடனாய அருள்மிக முல்லைவனேசுவரர் திருவடியை தியானித்து கர்ப்பகாலத்தில் , எனது கருகலையாமல், நல்ல வளர்ச்சியுடன் ஊனமின்றி உரிய பருவத்தில் உருப்பெற்று சுகமான நல்ல ஞானக்குழந்தை தரவேண்டும் எனத் தியானித்து அனுதினமும் உணவுக்கு முன் காலை, மாலை, நன்பகல், ஆகிய மூன்று வேளை ஓதிவர கரு உருப்பெற்று வளமாக வளரும் என்பது தின்னம். இத்தலத்து இறைவி ஆதரவற்ற ஒரு பெண்ணிற்கு மருத்துவம் பார்த்து கருவை காத்தபடியால், கருகாவூர் என்னும் பெயர் உண்டாயிற்று. தற்ேபாது இவ்வூ்ர் திருக்களாவூர் என்று மருவியுள்ளது. இறைவன் திருமேனி மணலால் ஆக்கப் பெறறது. இறைவன்திருமேனியில் முல்லைக் ெகாடி சுற்றியிருக்கும் அடையாளம் இருப்பதால், முல்லைவனேசுவரர் என அழைக்கப்படுகிறார். தீர்த்தம், பாற்குளம், தலமரம் முல்லைக்கொடி, சந்திரன் வழிபட்ட தலம் . திருஞானசம்பந்தரும், ஒரு பதிகம் பாடப்பட்ட தலம். இனி இப்பதிகப் பாடல்களைக் காண்போம். பாடல் எண் : 1 குருகாம் வயிரமாங் கூறு நாளாம் கொள்ளுங் கிழமையாம் கோளே தானாம் பருகா அமுதமாம் பாலின் நெய்யாம் பழத்தின் இரதமாம் பாட்டிற் பண்ணாம் ஒருகால் உமையாளோர் பாக னுமாம் உள்நின்ற நாவிற் குரையாடியாம் கருவா யுலகுக்கு முன்னே தோன்றுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூரில் உகந்தருளியிருக்கும் எம்பெருமான் குருத்துப்போன்ற மெல்லிய பொருள்களாகவும் , வயிரம் போன்ற வலிய பொருள்களாகவும் விண்மீன்கள் , ஞாயிறு முதலிய கிழமைகளுக்குரிய கிரகங்கள் என்பனவாகவும் உள்ளான் . பருகாமலேயே , மலத்தைப் போக்கும் அமுதமாவான் . பாலில் நெய்போலவும் பழத்தில் சுவை போலவும் எங்கும் நீங்காது பரவியுள்ளான் . பாட்டில் பண்ணாக உள்ளான் . ஒருநிலையில் பார்வதி பாகனாக உள்ளான் . நாவின் உள்ளே பொருந்தி மொழியைப் பேசுவிப்பவனாவான் . முதற் பொருளாய் உலகத்தோற்றத்து முன்னேயும் இருப்பவன் , முன்னே தோன்றி நின்று எல்லோரையும் நடத்தும் கண் போன்றவன் . பாடல் எண் : 2 வித்தாம் முளையாகும் வேரே தானாம் வேண்டும் உருவமாம் விரும்பி நின்ற பத்தாம் அடியார்க்கோர் பாங்க னுமாம் பால்நிறமு மாம்பரஞ் சோதி தானாம் தொத்தாம் அமரர்கணஞ் சூழ்ந்து போற்றத் தோன்றாதென் உள்ளத்தி னுள்ளே நின்ற கத்தாம் அடியேற்கும் காணா காட்டுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : வித்து , முளை , வேர் எனக் கருகாவூர் எந்தை வேண்டி நின்ற உருவத்தன் . தன்னை விரும்பும் பக்தியை உடைய அடியார்க்குத் தோழன் . செந்நிறமேயன்றிப் பால் நிறமும் உடையவன் . தான் மேம்பட்ட ஒளி உருவனாயிருந்தும் தன்னைத் தேவர் குழாம் சுற்றி நின்று துதிக்கவும் அதற்குக் காட்சி வழங்காது அடியேனுடைய உள்ளத்திலே மறைந்திருந்து அடியேன் முன் அறியாதனவற்றை எல்லாம் தெரிவிக்கும் கண்ணாக உள்ளவன் . பாடல் எண் : 3 பூத்தானாம் பூவின் நிறத்தா னுமாம் பூக்குளால் வாசமாய் மன்னி நின்ற கோத்தானாங் கோல்வளையாள் கூற னாகுங் கொண்ட சமயத்தார் தேவ னாகி ஏத்தாதார்க் கென்று மிடரே துன்பம் ஈவானா மென்னெஞ்சத் துள்ளே நின்று காத்தானாங் காலன் அடையா வண்ணங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : பூவும் , பூவின் நிறமும் அதன் மணமுமாய் நிலைபெற்றிருக்கும் தலைவனாகிய கருகாவூர் எந்தைதிரண்ட வளைகளை அணிந்த பார்வதி பாகன் . ஒவ்வொரு சமயத்தாரும் வழிபடும் தேவராக உள்ளவன் . தன்னை வழிபடாதவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளையும் மனக்கவலைகளையும் போக்காதவனாய் அடியேன் நெஞ்சில் இருந்து காலனால் அச்சம் நிகழா வண்ணம் காத்து வழிகாட்டும் கண்ணாக உள்ளான் பாடல் எண் : 4 இரவனாம் எல்லி நடமாடியாம் எண்திசைக்குந் தேவனாம் என்னு ளானாம் அரவனாம் அல்ல லறுப்பானுமாம் ஆகாச மூர்த்தியாம் ஆனே றேறும் குரவனாங் கூற்றை யுதைத்தான் தானாங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கரவனாங் காட்சிக் கெளியா னுமாங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூர் எந்தை , இராப்பொழுதாகவும் , இரவில் கூத்தாடுபவனாகவும் எண்திசைக்கும் உரிய தேவனாகவும் , என் உள்ளத்தில் உறைபவனாகவும் , பாம்பினை அணிபவனாகவும் அடியார்களுடைய துன்பங்களைத் துடைப்பவனாகவும் , ஆகாயத்தையே வடிவாக உடையவனாகவும் , இடபத்தை இவரும் தலைவனாகவும் , கூற்றினை உதைத்தவனாகவும் தன் புகழ் கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர்களுக்கு என்றும் மறை பொருளாகவும் , அடியார்களின் மனக்கண்களுக்கு எளியவனாகவும் அவர்களுக்குக் கண்ணாகவும் உள்ளான் . டல் எண் : 5 படைத்தானாம் பாரை யிடந்தா னாகும் பரிசொன் றறியாமை நின்றான் தானாம் உடைத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலால் மூட்டி யொருக்கி நின்று அடைத்தானாஞ் சூலம் மழுவோர் நாக மசைத்தானாம் ஆனேறொன் றூர்ந்தா னாகும் கடைத்தானாங் கள்ள மறிவார் நெஞ்சிற் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : உலகைப்படைத்த பிரமனும் , அதனை ஊழி வெள்ளத்திலிருந்து பெயர்த்தெடுத்த திருமாலும் தன் தன்மையை அறிய இயலாதவாறு தீப் பிழம்பாய் நின்ற கருகாவூர் எந்தை , பகைவருடைய மும் மதில்களையும் ஒருசேரத் தீயினால் அழித்தவன் . சூலத்தையும் மழுவையும் ஏந்திப் பாம்பினை இடையில் இறுகக் கட்டிக் காளை மீது இவர்ந்தவன் . வஞ்சனை உடையவர் நெஞ்சத்தைக் கலக்கிக் தன்னை அறியும் அடியார் நெஞ்சில் வழிகாட்டுவோனாய் இருப்பவன் . பாடல் எண் : 6 மூலனாம் மூர்த்தியாம் முன்னே தானாம் மூவாத மேனிமுக் கண்ணி னானாம் சீலனாஞ் சேர்ந்தா ரிடர்கள் தீர்க்குஞ் செல்வனாஞ் செஞ்சுடர்க்கோர் சோதி தானாம் மாலனாம் மங்கையோர் பங்க னாகும் மன்றாடி யாம்வானோர் தங்கட் கெல்லாம் காலனாங் காலனைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : முதற்பொருளாய் வடிவு கொள்வோனாய் , எல்லாப் பொருள்களுக்கும் முற்பட்டவனாய் , என்றும் மூப்படையாத மேனியனாய் , முக்கண்ணினனாய் , நற்பண்புகளுக்கு இருப்பிடமாய்த் தன்னை அடைந்தவர்களின் துயர்தீர்க்கும் செல்வனாய் , கருகாவூர் எந்தை , சூரியனுக்கும் ஒளி வழங்குபவனாய்த்தன் திருமேனியில் ஒருபாகத்தைத் திருமாலுக்கும் மற்றொரு பாகத்தை உமாதேவிக்கும் வழங்குபவனாய் , மன்றங்களில் கூத்தாடுபவனாய் , தேவர்களுக்கு எல்லாம் இறுதிக்காலத்தை வரையறுக்கும் கூற்றுவனையும் கோபித்தவனாய் , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் . பாடல் எண் : 7 அரைசே ரரவனாம் ஆலத் தானாம் ஆதிரை நாளானாம் அண்ட வானோர் திரைசேர் திருமுடித் திங்க ளானாந் தீவினை நாசனென் சிந்தை யானாம் உரைசே ருலகத்தா ருள்ளா னுமாம் உமையாளோர் பாகனாம் ஓத வேலிக் கரைசேர் கடல்நஞ்சை யுண்டா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூர் எந்தை பாம்பை இடையில் அணிந்து விடத்தை உண்டு ( ஆல நிழலில் தங்கி ) ஆதிரை நட்சத்திரத்திற்கு உரிமை பூண்டு , ஆகாய கங்கை அலைவீசும் தன் அழகிய சடையில் பிறை சூடி , தீவினையைப் போக்கி என் உள்ளத்திலுள்ளான் . அவனே புகழ்சேரும் இவ்வுலகத்து மக்கள் உள்ளத்தில் இருப்பவனாய் , பார்வதிபாகனாய் , உலகுக்கு எல்லையாய்க் கரையமைந்த கடலில் தோன்றிய நஞ்சினை உண்டு , அடியார்களுக்கு வழிகாட்டும் கண்ணாக இருப்பவன் . பாடல் எண் : 8 துடியாந் துடியின் முழக்கந் தானாஞ் சொல்லுவார் சொல்லெல்லாஞ் சோதிப் பானாம் படிதானாம் பாவ மறுப்பா னாகும் பால்நீற்ற னாம்பரஞ் சோதி தானாம் கொடியானாங் கூற்றை யுதைத்தா னாகுங் கூறாத வஞ்சக் குயலர்க் கென்றும் கடியானாங் காட்சிக் கரியா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூர் எந்தை உடுக்கையாகவும் உடுக்கையின் முழக்கமாகிய ஒலிகளாகவும் , அவ்வொலியிலிருந்து தோன்றிய மொழிகளைப் பேசுவாருடைய சொற்களின் வாய்மை பொய்ம்மைகளைச் சோதிப்பவனாகவும் , நன்னெறியாகவும் , பாவத்தைப் போக்குபவனாகவும் , வெள்ளிய நீறணிந்த பரஞ்சோதியாகவும் கொடிய கூற்றுவனை உதைத்தவனாகவும் , உண்மை கூறாத வஞ்சகத்தில் தேர்ந்தவர் கிட்டுதற்கு அரியனாய் , அவர்களை ஒறுப்பவனாகவும் , அடியார்க்கு வழிகாட்டும் கண்ணாகவும் உள்ளான் . பாடல் எண் : 9 விட்டுருவங் கிளர்கின்ற சோதி யானாம் விண்ணவர்க்கும் அறியாத சூழ லானாம் பட்டுருவ மால்யானைத் தோல்கீண் டானாம் பலபலவும் பாணி பயின்றான் தானாம் எட்டுருவ மூர்த்தியாம் எண்தோ ளானாம் என்னுச்சி மேலானாம் எம்பி ரானாம் கட்டுருவங் கடியானைக் காய்ந்தா னாகுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூர் எந்தை செந்நிற ஒளிவீசும் சோதியனாய் , தேவர்களும் அறியாத நிலையினனாய் , தன்னால் கொல்லப் பட்ட யானைத் தோலை உரித்துப் போர்த்தவனாய் , பலபலதாளத்திற்கு ஏற்பக் கூத்தாடுபவனாய் , அட்டமூர்த்தியாய் , எண்தோளனாய் , என் தலையின் உச்சி மேலானாம் எம் தலைவனாய் , இளைய வடிவினை உடைய மன்மதனைக் கோபித்தவனாய் , அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் . பாடல் எண் : 10 பொறுத்திருந்த புள்ளூர்வா னுள்ளா னாகி உள்ளிருந்தங் குள்நோய் களைவான் தானாய் செறுத்திருந்த மும்மதில்கள் மூன்றும் வேவச் சிலைகுனியத் தீமுட்டுந் திண்மை யானாம் அறுத்திருந்த கையானா மந்தா ரல்லி யிருந்தானை யொருதலையைத் தெரிய நோக்கிக் கறுத்திருந்த கண்ட முடையான் போலுங் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : தன்னை இடபமாய்த் தாங்கிய கருட வாகனனாகிய திருமாலுடைய உள்ளத்தே பொருந்தி அவன் உள்ளக் கவலையைப் போக்கிய கருகாவூர் எந்தை , தன்னைப் பகைத் தோருடைய மும்மதில்களும் ஒன்றும் எஞ்சாமல் வில்லை வளைத்துத் தீ மூட்டி அழித்தவன் . தாமரையில் இருந்த பிரமனுடைய ஐந்தாந் தலையை அவன் செருக்கினை நோக்கி அறுத்த கையனாவான் . நீல கண்டனாகிய அப்பெருமான் அடியார்க்கு வழிகாட்டியாக உள்ளான் . பாடல் எண் : 11 ஒறுத்தானாம் ஒன்னார் புரங்கள் மூன்றும் ஒள்ளழலை மாட்டி யுடனே வைத்து இறுத்தானாம் எண்ணான் முடிகள் பத்தும் இசைந்தானாம் இன்னிசைகள் கேட்டா னாகும் அறுத்தானாம் அஞ்சும் அடக்கி யங்கே ஆகாய மந்திரமு மானா னாகும் கறுத்தானாங் காலனைக் காலால் வீழக் கண்ணாங் கருகாவூ ரெந்தை தானே. பொழிப்புரை : கருகாவூர் எந்தை பகைவருடைய மும்மதில்களையும் தீ மூட்டி அழித்தவன் . தன்னை மதியாத இராவணனுடைய தலைகள் பத்தினையும் நசுக்கி அவன் இசையைக்கேட்டு அவனைக் காப்பாற்ற இசைந்தவன் . பொறிவாயில் ஐந்தவித்த அப்பெருமான் , பரமாகாயத்திலுள்ள வீட்டுலகை இருப்பிடமாக உடையவன் . கூற்றுவனைக் கீழே விழுமாறு தன் காலால் கோபித்து உதைத்தவன் . அவன் அடியவர்களுக்கு வழிகாட்டியாக உள்ளான் . திருச்சிற்றம்பலம் தொகுப்பு ; வை.பூமாலை மேலும் பல ஆன்மிகத்தகவலுக்கு http://vpoompalani05.blogspot.in/ http://vpoompalani05.wordpress.com http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக