திங்கள், 25 ஜூலை, 2016

எது கெளரவம்?

எது கெளரவம்?
நம்மை விட உயர்ந்தவரை பார்த்து பொறரமைப்படாமலும், நம்மை விட தாழ்ந்தவர்கள் மீது வெறுப்பு ஏளனம் காட்டாமலும் எவராக இருந்தாலும் சமமாக பாவித்து அன்பு காட்டுவது ஒரு வகை பண்பு நலம். இத்தகைய இனிய பண்பு நலன்களை நம் மனதின் அடி ஆழத்தில் நீர் ஊற்றுப் போல இருக்கிறது. நம் மனதில் நாம் சேர்த்துக் கொண்ட போட்டி, பொறாமை வறட்டுக் கவுரம், போன்றவை அந்த ஊற்றை மூடி விடுகின்றன. பெரிய மகான்கள் ஞானிகள், குருமார்கள் தொண்டுள்ளம் படைத்தவர்களைப் பாருங்கள் அவர்கள் கொஞ்சம் கூட கவுரம் பார்க்கமாமல் ஏற்ற தாழ்வு காணாமல் சாதி இன பேதம் பாராமல் மக்களை மகேசனாக பாவித்து அன்பு காட்டிவார்கள். நாமோ சாதாரண மானவர்கள் நமக்கு தான் எத்தனை ஆனவம், அகம்பாவம், வறட்டுக்கவுரவம் உள்ளது. சக மனிதனையே பேதம் பிரித்து பார்க்கிறோம். ஆனால் நம்மைவிட மேலான இறைவன் மட்டும் நம்மை பேதம் பார்க்காமல் நமக்கு அருள்புரிய வேண்டும்என ஆசைப்படுகிறோம். நியாயம் தானா? இதனை விளக்கும் ஒரு சிறிய நிகழ்வு :


பாரத்போர் முடிவடைந்த தருணம் கிருஷ்ணன் களைப்படைந்து தன் கண்ணில் ஒளியிழந்து உடல் சோர்உற்று காணப்பட்டார். இதற்கு காரணம் பாரதப்போருக்காக துரியோதனனும் அர்ச்சுனனும் கிருஷ்ணனிடம் உதவி கேட்டு நாடியபோது,கிருஷ்ணனிடமிருந்த தன் சேனைகளை துரியோதனனுக்கும், அரிச்சுனனுக்கு தன்னையும் பெற்றுக்கொண்டனர். இறுதியில் போரில் அர்ச்சுனன் பக்கம் வெற்றியும் அடைந்தனர் , தனது படைகள் போரில் மடிந்தன. இந்த பாவம் அவரைத்தாக்கியது. இதன் பொருட்டு கிருஷ்ணன் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தார். விருந்தில் எல்லோரும் கலந்து கொண்டனர். அப்போது விருந்துண்பவர்களிடம் ஒரு வரம் கேட்டார். அதற்கு எல்லோரும் சம்மதித்தனர். திடீரென்று விருந்து முடிந்தவுடன் கிருஷ்ணனை காணவில்லை. அப்போது கிருஷ்ணன் விருந்துண்டவர்களின் இலையை எடுத்துக்கொண்டிருந்தார். அதை எல்லோரும் தடுத்தனர். அதற்கு கிருஷ்ணன் எனக்கு தாங்கள் எல்லோரும் வரம் கொடுத்துள்ளீர்கள். அதனை மறக்கக் கூடாது. அது தான் இது என்றார். எனவே தான் இலையை நான்தான் எடுப்பேன்என்றார் உறுதியாக. இச்செயல் முடிந்தவுடன் கிருஷ்ணன் உற்சாகம் அடைந்தார். அவர் முகத்தில் அழகு கலை பிறந்தது. தன் பாவம் நீங்கி புண்ணியம் கிடைத்தது. உண்ண உணவு கொடுப்பதைவிட உண்ட இலையை எடுப்பது பாவம் விலகி புண்ணியம் பெருகிறது என்பதை எல்லோருக்கு உணர்த்தினார். இதனை உணர்த்தவே இச்சம்பவம் உருவாக்கப்பட்டது. 
நாம் வறட்டுக் கவுரவம் சாதி இன ஏழை செல்வ ஏற்றத்தாழ்வு பார்க்காதிருக்கவே அந்த நிகழ்வை உணர்த்தினார்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : பிரத்திலிப் ஆன்மீகச் சிந்தனைகள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக