முக்தி பெற எளிய வழி
அரிது அரிது மானிடராய் பிறத்தல் என்கிறார் அவ்வை. மனித பிறவி உயர்வானது, உண்ணதமானது. காரணம் வேறு எந்த பிறவியிலும் கிடைக்காத முக்தி என்ற மோட்சம் இந்த மனிதப்பிறவியில் நாம் அடையமுடியும், அதனால் தான் பல மகான்கள், சித்தர்கள், ஞானிகள் கிடைத்த இந்த மானிடப் பிறவியில் பக்தியாலும், இறைவழிபாட்டாலும் ஈடுபடுத்தி முக்தி என்ற பேரானந்தம் கண்டனர். ஐயா நான் சாதாரண மனிதன் எனக்கு குடும்பம் இருக்கிறது. வீடு இருக்கிறது, பிழைப்பு இருக்கு, நாம் எப்படி சதா காலமும் பக்தி செய்யமுடியும்? எப்படி இறைவனை நினைத்துக் கொண்டே இருக்க முடியும்? இப்படி பலர் கேட்பதும் வாழ்வியல் நியாயமே. இப்படிப்பட்டவர்களும் எளியதாக முக்தி பெறலாம். அதற்கு எளிய வழிகளை மகான்கள் கூறியுள்ளார்கள்.
பஞ்ச பூத தலங்களில் ஆகாயத்தலமாக விளங்குவது சிதம்பரம். சிதம்பரம் என்னும் கனக சபாபதி தலம். இந்த சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை போன்ற நாட்களில் நடைபெறும் நடராஜ மூர்த்தியின் ஆனந்த தாண்டவத்தை பக்தியோடு மனம் குளிர தரிசனம் செய்து, எனக்கு மறு பிறவி இல்லாத முக்தியை தந்து அருள் புரிய வேண்டும் என்று நடராஜ மூர்த்தியிடம் பிராத்தித்துக் கொண்டால் , மறு பிறவி இல்லாத முக்தி கிடைத்து விடும்.

” காசியில் இறக்க முக்தி
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
(திரு) அண்ணாமலயைில் நினைக்க முக்தி ” என்கிறது சாஸ்திரம்
திருவாரூரில் பிறக்க முக்தி
தில்லையில் தரிசிக்க முக்தி
(திரு) அண்ணாமலயைில் நினைக்க முக்தி ” என்கிறது சாஸ்திரம்

புண்ணிய நதி கங்கா நதி பெங்கி ஓடும் கைலாச வாசியான சிவன் தனது கணங்களுடன் விசுவநாதராக அன்னபூரணி உடன் எழுந்தருளியிருக்கும் தலமான உத்திரபிரதேச மாநில வாராணசி என்னும் காசி தலத்தில் உடலிருந்து ஜீவன் பிறியும் அனைத்து ஜீவன்களுக்கும்தாரக பிரம்ம மாகிய ஸ்ரீசீதா ராமச்சந்திர மூர்த்தியே நேரிடையாக அருள் வழங்கி மறுபிறவி அற்ற முக்தியை வழங்குகிறார். என்கிறது சாஸ்திரம், ஆகவே காசியில் இறக்க முக்தி என்கிறது சாஸ்திரம். ஒருவர் இறக்கும்சமயத்தில் அவனது மகன், இறப்பவரின்அருகில் இருந்து பணிவிடைகள் செய்தும் இறுதி காலத்தில் பெற்றோருக்கு வாயில் பால் விட்டு அவரை தன் வலது தொடையில் கிடத்தி வைத்துக் கொண்டு அவரது வலது காதில் கர்ண மந்திரங்களையும் , பகவான் நாமங்களையும் கூறி அவரை நல்ல நினைவுடன் இறக்கும்படி செய்தால், இறப்பவர் நிச்சயம் முக்தியை அடைவர் என்கிறது சாஸ்திரம்.

அடுத்ததாக இறைவன் ஆதியும் அந்தமும் இல்லாது தீப ஜோதியாய் காட்சி தந்த அண்ணாமலை என்னும்திருத்தலத்தில் இறைவன் ஜோதியாய் காட்சி தரும் கார்த்திகை தீபம் தரிசனம் கண்டோ, அல்லது அவனது திருவடியினை அனுதினமும் மனமார நிைத்து வணங்கினால் அந்த ஜீவனுக்கு அண்ணாமலையார் முக்தி அருள்கிறார் என்கிறது சாஸ்திரம்,
இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது எது எளியது என்பது தங்களுக்கே விளங்கும்
திருவாரூரில் பிறத்தல் என்பது நம்கையில் இல்லை, அது போல் காசியில் இறப்பது என்பது நம் கையில் இல்லை. பிறப்பும் இறப்பும் ஈசன் செயலாகும். மீதமுள்ள தரிசித்தல் – வழிபடுதல், எப்போதும் அவன் திருவடியே சரணம் என்று நினைத்தலும் மானிட பிறவி எடுத்த நம்மால் இயலும், எனவே தில்லை நடராஜ பெருமானை மனம் உருகி வழிபட்டும், அண்ணாமலையாரை அனுதினமும் சர்வ காலமும் அவன் திருத்தாள சரணடைய நினைத்தும் பிறவி இல்லா முக்தி அடைய வழி உள்ளது என்பதை காணலாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு: வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
இந்த நான்கு வழிகளில் எது சிறந்தது எது எளியது என்பது தங்களுக்கே விளங்கும்
திருவாரூரில் பிறத்தல் என்பது நம்கையில் இல்லை, அது போல் காசியில் இறப்பது என்பது நம் கையில் இல்லை. பிறப்பும் இறப்பும் ஈசன் செயலாகும். மீதமுள்ள தரிசித்தல் – வழிபடுதல், எப்போதும் அவன் திருவடியே சரணம் என்று நினைத்தலும் மானிட பிறவி எடுத்த நம்மால் இயலும், எனவே தில்லை நடராஜ பெருமானை மனம் உருகி வழிபட்டும், அண்ணாமலையாரை அனுதினமும் சர்வ காலமும் அவன் திருத்தாள சரணடைய நினைத்தும் பிறவி இல்லா முக்தி அடைய வழி உள்ளது என்பதை காணலாம்.
திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய ஓம்
தொகுப்பு: வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக