வியாழன், 5 ஜூன், 2014


திருமூலர் திருமந்திரம் - உபதேசம் 11 தெய்வ நிந்தை செய்யாதீர்கள் அனைத்துக்கும் ஆதியானவன் இறைவன், எவ்வகை உயிர்க்கும் அவனே தந்தையும், தாயும் தனக்கு நேரிடும் துன்பங்களுக்குத் தன்னுடைய ஊழ்வினையே காரணம் என்று எண்ணாது தன்னைப் படைத்தவன் மீது சினம் கொள்வர் கீழோர், பரமனை பழித்துரைக்க அவர்கள் தயங்கவதில்லை, "தெய்வநிந்தை தீது பயக்கும்" என்கிறது திருமந்திரம் தெளிவுறு ஞானத்துச் சிந்தையின் உள்ளே அளிவு உறார் அமரா பதி நாடி எளியன் என்று ஈசனை நீசர் இகழின் கிளியொன்று பூஞையால் கீழது வாகுமே. ,,, என்பது பாடல் தனது திருவடியைச் சிந்தையில் தேக்கியவர் உள்ளத்தில் சிறந்து விளங்குகிறான் இறைவன், அவனைத் தொழுது விண்ணவர் முதலானவர் அவனது அருளை பெறுவர், திருவடி உணர்வில்லாதவரோ எளியன் இவனென்று இகழ்ந்துரைப்பர். பூனையிடம் அகப்பட்ட கிளிபோல் அவர்கள் அழிவர் " அசுர தேவாதியர் அறியாமையால் செருக்குற்று பகைத்துக் கெட்டார்கள், இறைவனை பொய்யாகவும் பகைக்கூடாது. இறைவனிடம் பகை கொண்டவரால் எப்படி அவனை அடைய முடியும்? என்கிறார் திருமூலர். பாடல்: அப்பகையாலே அசுரரும் தேவரும்,,,,,,, ) தங்கள் நெஞ்சிலும், நினைவிலும் மங்கையரைச் சுமந்து அவர்களுடன் ஊடியும் கூடியும் சிற்றின்பத்தில் திளைப்பவர் தவப்பேறில்லாதவர். இறைவனைப் பற்றிய எண்ணம் அவருள் சிறிதும் இருக்காது, காரணம் மெய்யுணர்வு கைவந்த தவத்தோர் உணரும் முறை அவர்களிடம் இல்லாமல் போய்விடுகிறதுதான், ஞானியரை நிந்திக்கலாகாது சிவனைத் தொழுதேத்தும் சிவனடியார்கள் சிவஞானியர் எனப்படுவர். அவர்களை நிந்திப்பவர் நல்வினைப் பகுதி நீங்கி துன்புறுவர். சிவனடியாரை வணங்கி இணக்காமாய் நிற்பவர் தமது தீவினை நீங்கி இன்புறுவர், என்கிறது திருமந்ததிரம் பாடல் : ஞானியை நிந்திப்பவனும் நலனென்றே...........) சிவஞானியைப் பற்றி நிற்பவர் சிவயோகத்தை அடைவர், சிவனடியாரை இழித்துரைப்பவர் தாழ்ந்த நரகத்தை அடைய வழி செய்து கொண்டவராவர். பெரியோரைப் பிழையாமை என்கிற குறள் அததிகாரமும் பெரியோரை இகழ்வது தவறு என்று கூறுகிறது. "ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து வேந்தனும் வேந்து கெடும், உயர்ந்த நோன்புபளை கடைப் பிடித்த அருந்தவர் சீற்றம் கொண்டால் தேவருலகத் தலைவனும் தன் சிறப்புகளை இழந்து கெடுவான் என்பது பொருள் திருச்சிற்றம்பலம் .... ஓம் நமசிவாயம் மேலும் பல நாட : காணவும் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக