திங்கள், 2 ஜூன், 2014

ஸ்ரீகாளிமுத்து சுவாமிகளின் குருபூஜை


ஸ்ரீகாளிமுத்து சுவாமிகளின் குருபூஜை விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியம் / இராமச்சந்திரபுரத்தில் அமைந்துள்ள சதுரகிரி (கஞ்சிமட) அன்னதான சக்கரவர்த்தி ஸ்ரீலஸ்ரீ காளிமுத்து சுவாமிகள் ஆஸ்ரமம் , அங்கு ஜீவஜோதியாக அமைந்துள்ள ஸ்ரீ காளிமுத்து சுவாமிகளுக்கு( ஸ்ரீலஸ்ரீ காளிதாஸ் சுவாமிகளின் சீடர்) 9ஆம் ஆண்டு குருபூஜையும், ஸ்ரீ சக்திவேல் சுவாமிகளுக்கும 5ஆம் ஆண்டு குருபூஜையும் 2.6.2014 திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் மிக சீரும் சிறப்புமாக நடைபெற்றது, ஆன்மிக பெரியோர்கள் மதுரை திருப்பரங்குன்றம் ஸ்ரீஇராமகிருஷ்ணா சேவாஸரமம் ஸ்ரீமத் சுவாமி முருகானந்தர் அவர்களின் ஆசியுடன் இராஜபாளையம் ஸ்ரீ சரவணா குரூப்ஸ் சேர்மன், திரு, வை,சண்முகம்அவர்கள் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய ஊர்தலைவர்கள் மற்றும் ஆன்மீக பெருமக்கள் தொழிலதிபர்கள் கலந்து ஸ்ரீகாளிமுத்து சுவாமிகள் மற்றும் ஸ்ரீசக்திவேல் சுவாமிகளுக்கு சிறப்பு யாகசாலை பூைஜகள் மற்றும் அபிசேக ஆராதனைகளும் நடைெபற்றது, பகல் 1.00 மணியளவில் மகேஸ்வர பூஜையில் நூற்றுக்கணக்கான சிவனடியார்களுக்கு சிறப்பு மரியாதையுடன் அன்னதானம், வஸ்தரதானம், பொன்தானம் ஆகியவற்றுடன் அன்னதானம் வழங்கப்பட்டது, விழாவில் ஸ்ரீமத் சுவாமி முருகானந்தம் அவர்கள் இராமகிருஷணரும் விவேகானந்தரும் தீட்சத் பெற்று அவர்கள் இந்து / சைவ மதத்திற்கு ஆற்றிய பெரும்பணிகள் பற்றி சிறந்த ஆன்மீக அருளுரை வழங்கினார்கள். இராஜபாளையம் சத்திரப்பட்டி ஸ்ரீசுந்தரமகாலிங்கசுவாமி சேவா சங்கத்தினரின் ஸ்ரீகாளிமுத்து சுவாமிகளின் குருபூஜை மலர் வெளியிட்டனர்,இவர்களின் சிவத்தொண்டு மிகவும் பாரட்டும்படி இருந்தது, அதில் கண்ட சில காட்சி தொகுப்புகள் ; http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக