புதன், 17 ஆகஸ்ட், 2016

இருந்தாலும் இறந்தாலும் புண்ணிய பலன்

இருந்தாலும் இறந்தாலும் புண்ணிய பலன்

இந்த உலக வாழ்க்கையில் ஒருவர் நற்செயல்கள் செய்து பு்ண்ணியம் பெறுவது எல்லாம்அந்த மனிதரின் மரணத்தோடு முடிவடைந்து விடுகிறது, இது இயற்கை வகுத்த விதி. இந்த இயற்கை விதியை மீறியும் ஒருவர் இறந்த பிறகும் நற்செயல்கள் செய்ய இயலும். அதனால் புண்ணியமும் தேடிக் கொள்ள முடியும், ஒருவர் வாழ்கின்ற காலத்தில் அவர் செய்த சில நல்ல செயல்கள் அவர் இறந்த பின்னரும் நிரந்தரமாக என்றென்றும் புண்ணியத்தை கொடுத்துக் கொண்டே இருக்கும். வாழும் போது எந்த நோக்கத்துடன் அச்செயல் நிறைவேற்றப்பட்டதோ அந்த நோக்கங்கள் கால காலமாக நிலைத்து அவருக்கு நன்மைகள் செய்த கொண்டே இருக்கும். 



உதாரணமாக பசி்த்தவர்களுக்கு புசி என்று உணவிடும் தர்ம சாலைகள்,தாகம் தீர்க்கும் குடிநீர் வசதிகள், அப்பாடா என்று ஓய்வெடுக்க நிழல் தரும் மரங்கள் நடுவது. கோயில்கள் கட்டுவது, அல்லது புணரமைப்பது, அதுவும் இயலாவிடில் காலம் காலமாக கோயில் விள்கு எரய உதவுவது,ஏழைகள் இலவசமாக கல்வி பெற கல்விக் கூடங்கள் அமைப்பது, இலவசமாக மருத்துவ உதவிகள் தருவது,ஆதரவற்றவர்களுக்கு இல்லங்கள் அமைப்பது, தர்ம ஸ்தாபனங்கள் அமைப்பது, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்கள் மூலம் நற்செயல்கள் செய்வது, போன்ற செயல்கள் யாதேனும் செய்து புண்ணியத்தை பெற்று அது இறந்தபின்னரும் தமக்கும் தன் சன்னதினருக்கும் கிடைக்கும், தான் அன்புடன் பண்புடன் ஒழுக்கத்துடன்இறை நன்பிக்கையுடன் இருந்து தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் தன்னைப்போல் மாற்றி வழி நடத்தி செல்பவர்களுக்கு தன் கொள்கைகளை பின் பற்றுவார்களால் கிடைக்கும் புண்ணியம் இறந்த பிறகும் கிடைத்தபடியே இரு்ககும், சாஸ்திர சம்பிரதாயப்படி மதம்வலியுறுத்தும் நெறிகளை தானும் கடைபிடித்து,தன் குடும்பத்தாரையும்பின் பற்ற ைவத்து, அதன்படி தம்மால் வளர்க்கப்பட்ட வாரிசுகள் ஆற்றுகின்ற நற்செயல்கள் யாவும்அவர்களுக்கும் அதை பின்பற்ற வைத்த ஊக்கியாக இருந்த மரணமடைந்த பெற்றோரகளுக்கு  புண்ணியம் சேர்த்து வை்ப்பதாகும், நாம் பெற்ற பிள்ளைகள் சிரத்தையுடன் செய்யும் சிராத்த பித்ரு காரியங்ள் , அவரகள் நாளும் செய்யும் இறைவணக்கம் இறைஉண்ர்வோடு அவர்கள் செய்யும் எந்த ஒரு நற்செயலும் அந்த செயல்களால் கிடைக்கும் புண்ணியம் பெற்றோருக்கு  மரணத்திற்கு பிறகும்நன்மை கொடுப்பவனவாகும்.
  மேலே கூறிய நற்செயல்கள் செய்தால் ஒருவர் தமது வாழ் நாளிலும், அவர் இறந்த பின்பும் புண்ணியத்தை பெற்றுக் கொண்டேஇருக்கலாம், 
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை, பூமாலை, சுந்தரபாண்டியம்
மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு
http://vpoompalani05.blogspot.in/
http://vpoompalani05.wordpress.com
http://www.vpoompalani05.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக