திங்கள், 22 ஆகஸ்ட், 2016

தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்

தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்

இத்தல சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.

தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மத்தாக நின்ற மந்தரமலை சரியத் தொடங்கியது. ஆகையால் திருமால், ‘கச்சம்’ என்ற ஆமை உருவம் கொண்டு மலையைத் தாங்கினார். அந்த மலையைத் தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி திருமால் வழிபாடு செய்தார். அந்தத் திருத்தலமே திருக்கச்சூர் என்று அழைக்கப்படுகிறது.

திருக்கச்சூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கோவில் ‘ஆலக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. விழுதுகள் விடாத கல்லால மரம், தலவிருட்சமாக இருப்பதனால் இப்பெயர் வந்துள்ளது. இந்த ஆலயத்தை தாழக்கோவில் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள இறைவன் ‘கச்சபேஸ்வரர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். அம்பாள் திருநாமம் ‘அஞ்சனாட்சி’ என்பதாகும்.

இத்தல இறைவன் தியாகராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை ஏற்று, இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம். ஆகையால் இங்குள்ள இறைவனை அனைவரும் ‘அமுத தியாகர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆலயத்தின் தனி மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி தியாகராஜர், அம்பாள் மற்றும் முருகப்பெருமானுடன் ‘சோமாஸ்கந்தராக’ காட்சி தருகிறார்.

இத்தலத்துக்கு வந்து சிவனருள் பெற்ற சுந்தரர், தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது ஐந்தாவது பதிகத்தில்

‘மாலை மதியே மலைமேல் மருந்தே

மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

ஆலக்கோயில் அம்மானே’

என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, முற்காலத்தில் நெல் வயல்களும், கரும்பு ஆலைகளும் செழித்த ஊராக இந்தத் திருத்தலம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

மருந்தீசர் :

சரி.. ‘அது என்ன? மலைமேல் மருந்து!’ என்று வினவிய போது, இங்கிருந்து மேற்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் மலைக் கோவில் ஒன்று இருப்பது தெரியவந்தது. பெரிய மலையோ, குன்றோ அல்ல. கொஞ்சம் மேடிட்ட உயரமான பகுதி. அதன் மேலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். அவர்தான் ‘மருந்தீசர்’ எனப்படும் மகாதேவன். ‘ஔடத கிரி’ எனவும், ‘மருந்து மலை’ எனவும் புகழ் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த மலைக் கோவிலில் உள்ள ஔடத தீர்த்தம் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

தெற்கு நோக்கிய நுழைவு வாசல் வழியே சென்றால், மேற்குத் திசை பார்த்து மருந்தீசர் குடிகொண்டிருக்கிறார். எதிரே வாசல் கிடையாது. ஆலக்கோவில் போலவே சுவரும், அதில் சாளரத் துளைகளும் உள்ளன. அதன் நேரே பலிபீடமும், நந்தியும், கொடிமரமும் இருக்கின்றன.

கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நான்கு முகங்களுடன் சண்டேசர் அமர்ந்துள்ளார். இந்தத் தோற்றம் வேறு கோவில்களில் இல்லை. இவரது சன்னிதிக்கு அருகே தலவிருட்சமான வேர்ப்பலா, சுவாமி யின் கருவறை விமானத்தின் பின்புறம் கிளை விரித்து நின்றாடுகிறது. சற்று நடந்தால் சிறிய தனிச் சன்னிதியில், நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருள்நீக்கி அம்மை வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இவ்வாலயச் சிறப்புகளை அறிந்த போது, இது நோய் தீர்க்கும் மருந்துமலை எனவும், அபூர்வ மூலிகைகள் இந்த மலைமீது உள்ளன எனவும், அகத்திய முனிவர் திருவான்மியூர், திருக்கச்சூர் போன்ற தலங்களில் மருந்தீசராக எழுந்தருளியுள்ள இறைவனை தியானித்துதான் மூலிகை வைத்தியம் கற்றார் எனவும் கூறுகிறார்கள்.

மூலிகை மலை :

ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. இதையடுத்து அவன், தன்னுடைய தேவ மருத்துவர்களான அசுபதி, பசுபதியை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவரப் பணித்தான். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர். 

ஆனால் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள்நீக்கி அம்மை’ என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீசர் எனப்பட்டார்.

பிரார்த்தனை :

உடல் நலமில்லாதவர்கள், பவுர்ணமி நாளிலோ அல்லது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ இத்தலம் வந்து, கிரிவலம் வருவது சிறப்பு தரும். கிரிவலம் வரும்போது இங்கு வீசும் மூலிகைத் தென்றல் உடலையும், உள்ளத்தையும் தழுவி நோயைக் குணப்படுத்துகிறது என்பது நம்பிக்கை. மேலும் சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.

கோவில் கொடிமரத்தடியில் உள்ள குழியில் இருக்கும், மண்ணே மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆம்! பக்தர்கள் பலரும் அதனை எடுத்து நெற்றியில் இட்டும், உடலில் பூசியும், வீட்டுக்கு எடுத்து கொண்டும் செல்கிறார்கள்.

மலையே மருந்தாகவும், இறைவனே மருத்துவனாகவும் விளங்கும் இந்தத் திருக்கோவில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுந்தரருக்கு உணவளித்த ஈசன் :

சிவ தல யாத்திரை மேற்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு முறை திருக்கழுக் குன்றம் சென்று விட்டு, காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். நீண்ட தூர பயணக் களைப்போடு, பசியும் சேர்ந்து சுந்தரரை வாட்டியது. அவர் கோவில் வளாகத்தில் அடியாளர்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை அறிந்த இறைவன், முதியவர் வடிவம் கொண்டு சுந்தரரிடம் வந்தார்.

பின்னர் அவரிடம், ‘நீ பசியால் மிகவும் வாடியிருக்கிறாய். கொஞ்ச நேரம் இங்கேயே இரு. நான் உணவு கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார் முதியவர் உருவில் வந்த இறைவன்.

ஊருக்குள் சென்ற இறைவன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று, உணவு கொண்டு வந்தார். அதனை சுந்தரருக்குக் கொடுத்து பசியாற்றினார். சுந்தரருடன் இருந்த அடியார்களும் உணவை உண்டு பசியாறினர். பின்னர் முதியவராக இருந்த இறைவன் மறைந்தார். வந்தது இறைவன் என்பதை அறிந்த சுந்தரர், இறைவனின் அருளை எண்ணி வியந்தார். பின்னர் இறைவனைப் பற்றி பதிகம் பாடினார்.

சுந்தரருக்காக இரந்த (பிச்சை எடுத்து) சிவபெருமான், ‘இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோவிலுக்கு சற்று தூரத்திலும், சுந்தரருக்கு விருந்து படைத்த சிவன், ‘விருந்திட்டீஸ்வரர்’ என்ற பெயரில் ஆலயப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 

அமைவிடம் :

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கச்சூர் திருத்தலத்தை அடையலாம்.

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாணடியம்
நன்றி ; மாலை மலர் ஆன்மீகம் / கோவில்கள்

இத்தல சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.

தீராத நோய்களைத் தீர்க்கும் மருந்தீசர் கோவில்

தேவர்களும், அசுரர்களும் அமிர்தம் பெறுவதற்காக, திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்போது மத்தாக நின்ற மந்தரமலை சரியத் தொடங்கியது. ஆகையால் திருமால், ‘கச்சம்’ என்ற ஆமை உருவம் கொண்டு மலையைத் தாங்கினார். அந்த மலையைத் தாங்குவதற்கான வலிமையை பெறுவதற்காக, சிவபெருமானை நோக்கி திருமால் வழிபாடு செய்தார். அந்தத் திருத்தலமே திருக்கச்சூர் என்று அழைக்கப்படுகிறது.

திருக்கச்சூரின் மையப்பகுதியில் அமைந்திருக்கும் பெரிய கோவில் ‘ஆலக்கோவில்’ என்று அழைக்கப்படுகிறது. விழுதுகள் விடாத கல்லால மரம், தலவிருட்சமாக இருப்பதனால் இப்பெயர் வந்துள்ளது. இந்த ஆலயத்தை தாழக்கோவில் என்றும் அழைக்கிறார்கள். இங்குள்ள இறைவன் ‘கச்சபேஸ்வரர்’ என்று பெயர் பெற்று விளங்குகிறார். அம்பாள் திருநாமம் ‘அஞ்சனாட்சி’ என்பதாகும்.

இத்தல இறைவன் தியாகராஜர் என்றும் அழைக்கப்படுகிறார். அமிர்தம் கிடைத்த மகிழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் வேண்டுகோளை ஏற்று, இத்தல ஈசன் அமுத நடனம் ஆடினாராம். ஆகையால் இங்குள்ள இறைவனை அனைவரும் ‘அமுத தியாகர்’ என்று செல்லமாக அழைக்கின்றனர். ஆலயத்தின் தனி மண்டபத்தில் கிழக்கு நோக்கியபடி தியாகராஜர், அம்பாள் மற்றும் முருகப்பெருமானுடன் ‘சோமாஸ்கந்தராக’ காட்சி தருகிறார்.

இத்தலத்துக்கு வந்து சிவனருள் பெற்ற சுந்தரர், தேவாரப் பாடல்களைப் பாடியுள்ளார். அவர் தனது ஐந்தாவது பதிகத்தில்

‘மாலை மதியே மலைமேல் மருந்தே

மறவேன் அடியேன் வயல்சூழ்ந்த

ஆலைக் கழனிப் பழனக் கச்சூர்

ஆலக்கோயில் அம்மானே’

என்று குறிப்பிடுவதை வைத்துப் பார்க்கும் போது, முற்காலத்தில் நெல் வயல்களும், கரும்பு ஆலைகளும் செழித்த ஊராக இந்தத் திருத்தலம் இருந்திருக்கிறது என்பது உறுதியாகிறது.

மருந்தீசர் :

சரி.. ‘அது என்ன? மலைமேல் மருந்து!’ என்று வினவிய போது, இங்கிருந்து மேற்கே சுமார் 1 கிலோமீட்டர் தொலைவில் மலைக் கோவில் ஒன்று இருப்பது தெரியவந்தது. பெரிய மலையோ, குன்றோ அல்ல. கொஞ்சம் மேடிட்ட உயரமான பகுதி. அதன் மேலும் இறைவன் குடி கொண்டிருக்கிறார். அவர்தான் ‘மருந்தீசர்’ எனப்படும் மகாதேவன். ‘ஔடத கிரி’ எனவும், ‘மருந்து மலை’ எனவும் புகழ் வீசிக் கொண்டிருக்கிறது. இந்த மலைக் கோவிலில் உள்ள ஔடத தீர்த்தம் சிறப்பு பெற்றதாக விளங்குகிறது.

தெற்கு நோக்கிய நுழைவு வாசல் வழியே சென்றால், மேற்குத் திசை பார்த்து மருந்தீசர் குடிகொண்டிருக்கிறார். எதிரே வாசல் கிடையாது. ஆலக்கோவில் போலவே சுவரும், அதில் சாளரத் துளைகளும் உள்ளன. அதன் நேரே பலிபீடமும், நந்தியும், கொடிமரமும் இருக்கின்றன.

கோவிலைச் சுற்றி வலம் வரும்போது, நான்கு முகங்களுடன் சண்டேசர் அமர்ந்துள்ளார். இந்தத் தோற்றம் வேறு கோவில்களில் இல்லை. இவரது சன்னிதிக்கு அருகே தலவிருட்சமான வேர்ப்பலா, சுவாமி யின் கருவறை விமானத்தின் பின்புறம் கிளை விரித்து நின்றாடுகிறது. சற்று நடந்தால் சிறிய தனிச் சன்னிதியில், நான்கு கைகளுடன் நின்ற கோலத்தில் இருள்நீக்கி அம்மை வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

இவ்வாலயச் சிறப்புகளை அறிந்த போது, இது நோய் தீர்க்கும் மருந்துமலை எனவும், அபூர்வ மூலிகைகள் இந்த மலைமீது உள்ளன எனவும், அகத்திய முனிவர் திருவான்மியூர், திருக்கச்சூர் போன்ற தலங்களில் மருந்தீசராக எழுந்தருளியுள்ள இறைவனை தியானித்துதான் மூலிகை வைத்தியம் கற்றார் எனவும் கூறுகிறார்கள்.

மூலிகை மலை :

ஒரு முறை தேவேந்திரனுக்கு சாபத்தின் காரணமாக தீர்க்க முடியாத நோய் ஒன்று வந்தது. இதையடுத்து அவன், தன்னுடைய தேவ மருத்துவர்களான அசுபதி, பசுபதியை அனுப்பி, பலை, அதிபலை போன்ற மூலிகையை கொண்டுவரப் பணித்தான். பல இடங்களில் அலைந்து திரிந்து தேடியும் அந்த மூலிகைகள் கிடைக்கவில்லை. இறுதியில் தேவ மருத்துவர்கள், இந்த மலைப் பகுதிக்கு வந்தனர். 

ஆனால் இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்பட்டதால், மூலிகைகளை அடையாளம் காண முடியாமல் அவர்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து இத்தல அம்மை, இருளை நீக்கி ஒளிகாட்டி அருளினார். அதன் பின்னர் தேவ மருத்துவர்கள் தங்களுக்குத் தேவையான மூலிகையை பறித்துச் சென்று இந்திரனின் நோயைக் குணப்படுத்தினர். இருளை நீக்கி ஒளி காட்டியதால், இத்தல அன்னை ‘இருள்நீக்கி அம்மை’ என்ற பெயரைப் பெற்றார். இறைவனும் மருந்தீசர் எனப்பட்டார்.

பிரார்த்தனை :

உடல் நலமில்லாதவர்கள், பவுர்ணமி நாளிலோ அல்லது வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளிலோ அல்லது பிறந்த நட்சத்திர தினத்தன்றோ இத்தலம் வந்து, கிரிவலம் வருவது சிறப்பு தரும். கிரிவலம் வரும்போது இங்கு வீசும் மூலிகைத் தென்றல் உடலையும், உள்ளத்தையும் தழுவி நோயைக் குணப்படுத்துகிறது என்பது நம்பிக்கை. மேலும் சுவாமியையும், அம்பாளையும் பிரார்த்தித்து விபூதி தரித்துக் கொண்டால், நாள்பட்ட நோய்களும், தோல் நோய்களும் குணமாகும் என்று கூறப்படுகிறது.

கோவில் கொடிமரத்தடியில் உள்ள குழியில் இருக்கும், மண்ணே மருந்தாக கொடுக்கப்படுகிறது. ஆம்! பக்தர்கள் பலரும் அதனை எடுத்து நெற்றியில் இட்டும், உடலில் பூசியும், வீட்டுக்கு எடுத்து கொண்டும் செல்கிறார்கள்.

மலையே மருந்தாகவும், இறைவனே மருத்துவனாகவும் விளங்கும் இந்தத் திருக்கோவில், தினமும் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.

சுந்தரருக்கு உணவளித்த ஈசன் :

சிவ தல யாத்திரை மேற்கொண்டிருந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், ஒரு முறை திருக்கழுக் குன்றம் சென்று விட்டு, காஞ்சீபுரம் செல்லும் வழியில் திருக்கச்சூர் திருத்தலத்திற்கு வந்து சேர்ந்தார். நீண்ட தூர பயணக் களைப்போடு, பசியும் சேர்ந்து சுந்தரரை வாட்டியது. அவர் கோவில் வளாகத்தில் அடியாளர்களுடன் சேர்ந்து ஓரிடத்தில் அமர்ந்தார். அவரது பசியை அறிந்த இறைவன், முதியவர் வடிவம் கொண்டு சுந்தரரிடம் வந்தார்.

பின்னர் அவரிடம், ‘நீ பசியால் மிகவும் வாடியிருக்கிறாய். கொஞ்ச நேரம் இங்கேயே இரு. நான் உணவு கொண்டு வருகிறேன்’ என்று கூறிவிட்டு அங்கிருந்து அகன்றார் முதியவர் உருவில் வந்த இறைவன்.

ஊருக்குள் சென்ற இறைவன், கையில் ஒரு திருவோட்டை ஏந்திக்கொண்டு ஒவ்வொரு வீடாகச் சென்று யாசகம் பெற்று, உணவு கொண்டு வந்தார். அதனை சுந்தரருக்குக் கொடுத்து பசியாற்றினார். சுந்தரருடன் இருந்த அடியார்களும் உணவை உண்டு பசியாறினர். பின்னர் முதியவராக இருந்த இறைவன் மறைந்தார். வந்தது இறைவன் என்பதை அறிந்த சுந்தரர், இறைவனின் அருளை எண்ணி வியந்தார். பின்னர் இறைவனைப் பற்றி பதிகம் பாடினார்.

சுந்தரருக்காக இரந்த (பிச்சை எடுத்து) சிவபெருமான், ‘இரந்தீஸ்வரர் என்ற பெயரில் கோவிலுக்கு சற்று தூரத்திலும், சுந்தரருக்கு விருந்து படைத்த சிவன், ‘விருந்திட்டீஸ்வரர்’ என்ற பெயரில் ஆலயப் பிரகாரத்தில் தனிச் சன்னிதியிலும் வீற்றிருந்து அருள்பாலிக்கின்றனர். 

அமைவிடம் :

சென்னை தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் சாலையில் சிங்கப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கிருந்து வடக்கே சுமார் 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருக்கச்சூர் திருத்தலத்தை அடையலாம்.

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாணடியம்
நன்றி ; மாலை மலர் ஆன்மீகம் / கோவில்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக