சனி, 20 ஆகஸ்ட், 2016

திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்

மாணி்க்க வாசகரின் 


திருவாசகப்பதிகங்கள் உணர்த்தும் ஒளி நெறி விளக்கங்கள்
திருச்சாழல்
மாணிக்க வாசக பெருமான் சிவபிராைன தன் பதிகப் பாடல்கள தனது குரு, தனது தலைவன, தனது தாய் தந்தையான தத்துவன், தனது ஈசன் எனக் கொண்டு எல்லாம் ஆன பரம்பொருைளை பல்ேவறு கோணங்களில் உருவப்படுத்தியும், அவனது வீர தீர செயல்களை அந்த நாட்களில் நடைபெறும் கேளிக்கை விளயாட்டு, ஆன்மிக சம்பிரதாயங்கள் , ஒழுக்க நெறிகள், ஆகியவற்றுடன் இணைத்தும் பதிகப்பாடல்களாக பாடியுள்ளார், அவர் ஒவ்வொரு பதிகப் பாடல்களில் எவ்வாறு புணைந்து பாடியுள்ளார் என்பதை  திருவெம்பாவை  திருச் பொற்சுண்ணம் , திரு அம்மானை போன்ற பதிகப்பாடல் கள் வாய்லாக கண்டோம், இக் கட்டுரை வாயிலாக திருச்சாழல் என சொற்போர் விளயாட்டாக  பாடிய பாடல்கள் பற்றி நாம்  காண்போம், மகளிர் விளையாட்டுப் பாடல்களில் அவை இன்ன பாடல் வகையில் திருச்சாழல்

திருச்சாழல் ;
சிவபிரானுடைய செயல்களை வினா விடைகளால் விளக்குவது திருச்சாழல். இதுவும் ஒரு மகளிர் விளையாடும் சொ்ற்போர் விளையாட்டாகக் கொண்டது. ஒரு பெண் பாட்டுடைய தலைவனான சிவபிரானின  பெருமைகளையும், வீர தீரச் செயல்களையும் அவர் ஏன் செய்தார்,அதன் பயன் என்ன? என்பது போன்று கேள்வி கனைகளை பாடல்களால் தொடுப்பாா், இதற்கு எதிரில் வாதாடும் மற்றொரு பெண் அதற்கு பதில்களை பாடல்களால் பதிலளிப்பாா், இதுவே திருச்சாழல் 
   ஈழநாட்டு புத்தர்கள் தில்லையம்பதியின் அளவற்ற பெருைமகளையும், சிறப்புகளையும் அறிந்து பொறாமை ெகாண்டு, அரசனையும், அவரது ஊமைப் பொண்ணையும் கூட்டுக் கொண்டு தி்ல்லையம்பலம் சிதம்பரம் வந்தனா். அங்கு வந்த அவர்கள் அந்தணர்களிடம் எங்களிடம் சொற்போர் புரிந்திட வம்புக்கு வந்தனா். அவர்கள் இவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்விகளுக்கு தங்களால் சரியான பதில் அளிக்க முடியாது என கொண்டு மாணிக்க வாசகரிடம் அறிமுகம் செய்து அவர்களின் சொற்போருக்கு மணிவாசகரை பதிலளிக்க வேண்டினர். அப்போது அவர்களால் குதர்க்கமாக  கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சரியான பதில் அளித்தும், அதனை அவர்கள் ஏற்க மறுத்தனர் இதற்கு உடனே மணிவாசகர் ஈசனிடம் வேண்டி குதர்க்கம் செய்யும் புத்தர்களையும் அவனை சேர்ந்தவர்களையும், ஊமையாக்க வேண்டினார், அதன்படி அவர்கள் குதர்க்கம் செய்த புத்தர் பிச்சுக்கள் ஊமையாகினா். இதனால் அவர்கள் மனம் நொந்து மணிவாசகரிடம் பணிந்து வேண்ட, அதன் பொருட்டு மனம் இறங்கிய மணிவாசகர் அரசனின் மகள் ஊமைப் ெபாண்ணை திருச்சாழல் பாட்டுக்களுக்கு விடையளிக்கும் விதமாக அக் கேள்விகளுக்கு அப்பெண்ணே பதில் அளித்தார். இதனால் பிறவி ஊமையான அரசனின் புதல்வியும் பேச வைத்தும், குதர்க்கம் செய்த புத்த பிச்சுக்ளும் பேசும்படி செய்தார். 
இதனால் புத்த பிச்சுக்களும் மதம் மாறி மகிழந்தனா். 
  அவ்வினாவையும், விடையையும் அமைத்து திருச்சாழல் என்னும் விளையாட்டு பதிகம் பாடினார். அந்த பாடல்களில் உள்ள சராம்சங்கள் 
1, சிவபிரான் நஞ்சுண்டமையால் ேதவர்கள் எல்லாம் பிழைத்தனா்
2. பெருமான் மலைமகளை திருமணம் செய்யாவிட்டால்  யாவரும் யோகநிலை அடைந்திருப்பர்
4. தில்லையில்  பெருமான் நடம் புரியாவிடில் உலகமெல்லாம் காளிக்கு ஊனாகி அழிந்திருக்கும்.
5.பெருமான் எலும்பு மாலையை ஏன் அணிந்துள்ளாா். 
  மாலும் பிரமனும் தம் காலம் முடிந்து இறந்து பட்டனா் என்பதை குறிப்பதற்கு
6. பிரான் அறம் உரைத்ததும், புரம் எறித்ததும் அவருடைய  அறக் கருணையையும், மறக்கருணையையும் காட்டும்.

திருச்சாழல் பாடல்களில் சில
பூசுவதும் வெண்ணீறு
    பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால்
    மறைபோலுங் காணேடீ
பூசுவதும் பேசுவதும்
    பூண்பதுவுங் கொண்டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும்
    இயல்பானான் சாழலோ  

பூசுவது வெண்ணீறு; அணிவது பாம்பு; பேசுவது வேதம்; உங்கள் தெய்வத்தின் தன்மையிருந்தபடி என்னேடி? என்று புத்தன் வினாவ, பூசுவது, பூண்பது, பேசுவது என்னும் இவற்றைக் கொண்டு உனக்காகுங் காரியம் ஒன்றுமில்லை; அந்த பரமசிவன் எல்லா உயிர்களுக்கும் தக்க பயன் அளிப்பவனாய் இருக்கிறான் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

.பாடல் எண் : 5
தக்கனையும் எச்சனையுந்
    தலையறுத்துத் தேவர்கணம்
தொக்கனவந் தவர்தம்மைத்
    தொலைத்ததுதான் என்னேடீ
தொக்கனவந் தவர்தம்மைத்
    தொலைத்தருளி அருள்கொடுத்தங்
கெச்சனுக்கு மிகைத்தலைமற்
    றருளினன்காண் சாழலோ 

தக்கனையும், யாகத்து அதிதேவரையும் தலை அரிந்து, கூடி வந்த தேவர்களையும் அழித்தது என்ன காரியம்? என்று புத்தன் வினாவ, தேவர்களை அழித்தாலும் மறுபடியும் அவர்களை உயிர் பெறச் செய்து, யாகத்தினை நடத்தியவனாகிய தக்கனுக்கு ஆட்டின் தலையை அருள் செய்தான் என்று ஊமைப் பெண் விடை கூறினாள்.

பாடல் எண் : 10
தானந்தம் இல்லான்
    தனையடைந்த நாயேனை
ஆனந்த வெள்ளத்
    தழுத்துவித்தான் காணேடீ
ஆனந்த வெள்ளத்
    தழுத்துவித்த திருவடிகள்
வானுந்து தேவர்கட்கோர்
    வான்பொருள்காண் சாழலோ  

தான் முடிவு இல்லாதவனாயிருந்தும் தன்னை அடைந்த என்னை ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்தான், இது என்ன புதுமை? என்று புத்தன் வினாவ, ஆனந்த சாகரத்தில் அழுந்தச் செய்த திருவடிகள் தேவர்களுக்கு மேன்மையான பொருளாகும் என்று ஊமைப் பெண் விடை சொன்னாள்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக