அறிந்தும் அறயாமலும், தெரிந்தும் தெரியாது செய்தி
சுந்தரபாண்டியம் சாலிய சமுதாயத்தின் சந்ததியினர் தமககும் சைவ மதத்திற்கும் இருக்கும் நெருங்கிய பந்தம் பற்றி இன்னும் அறியாது உள்ளனர். அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாது இருக்கும் நம்சாலிய சமுதாயத்தின் சைவ நெறியின் பங்கினை அறிந்திட இச்செய்தியினை மறு வெளியிடாக வெளியிடுகிறேன்.
வெள்ளி, 27 ஜூலை, 2012 அன்று வெளியிட்ட செய்தியின் மறு வெளியீடு
சைவமும், சாலிய சமுதாயமும்

(சிவனடியார்களுக்கு உடை,கோவணம்,கீள் முதலியன கொடுத்துக் காத்த சாலியர்.)
இதன் மூலம் சாலியரின் சைவத் தன்மைக்கு முத்திரை பதிக்கப் பட்டுள்ளது. அந்நாள் முதல் இந்நாள் வரை சைவ மதத்தில் சாலியர் சமூகம் முக்கிய பங்கினைக் கொண்டு சிவனடியார்களுக்கு சிவத் தொண்டும், சிவன் கோவில்களையே அடிப்படையாகக் கொண்டே குல தெய்வங்களும் அமைத்து வழிபாடு செய்து வருகின்றனர், அக்காலத்தில் சாலிய சமூக முன்னோர்கள் சைவ மதத்தின் அடையாளங்களான ருத்ராட்சம் அணிதல், பூணுல் போடுதல் போன்ற சைவ அடையாளங்களுடன் (அவர்களின் உருவ அமைப்பு மற்றும் லெளவிக அடையாளங்கள் கொண்ட உருவச்சிலைகளை நம் பெரியகோவில் மாமுண்டகருப்பர் சன்னதியின் மண்டப தூண்களில் காணலாம்)
வாழ்ந்து கொண்டு தேவாரம் திருவாசகம் இசையுடன் பஜனைப்பாடல்கள் பாடுவதற்கென்றே ஏழுர் சாலிய சமுதாய ஊர்களில் பஜனை மடங்களும் நாயன்மார்கள் பெயரில் திருச்சபை மன்றங்களும் இன்றளவும் இயங்கி வருவதை நாம் காண்கிறோம். இதற்கு உதாரணத்திற்கு கூற வேண்டுமானால் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணக்கவாசகர் திருச்சபை, முகவூரில் நாவுக்கரசர்-அப்பருக்கு மன்றமும், சுந்தரபாண்டியத்தில் சுந்தரமூர்த்தி நாயனார் திருசபை, ஸ்ரீவி,மற்றும் சத்திரப்பட்டியில் தேவார- திருவாச பக்த சபா போன்றவை இன்றளவும் நடைபெற்றுக்கொண்டு வருகிறது, சாலிய சமுதாயத்தில் இன்றளவும் சிவ வழிபாட்டுத்தளங்களில் தேவார பாடகள் பாடும் ஓதுவார்கள் போன்று தேவார - திருவாசப்பாடல்களை இராஜபாளையம்,ஸ்ரீவி,சத்திரப்பட்டி, வ,புதுப்பட்டி, சுந்தரபாண்டியம் மற்றும் ஏழுர் சாலிய சமுதாய மக்களால் பாடப்பட்டு வருகிறது, இதற்கு தேவார இன்னிசை மாமணி திரு, புதுப்பட்டி மோகன் என்பவரே முன் உதாரணமாகும் அவருடைய தேவார இன்னிசையில் மயங்காதார் யார் உளர். சுந்தரபாண்டியம் சாலியர் சமூகமும்-சுந்தரமூர்த்தி நாயனாரும் இதன் அடிப்படையில் சுந்தரபாண்டியத்தில் சைவ மத சிவத் தொண்டாக பெரிய புராணத்தின் பாட்டுடைத்தலைவான சுந்தரமூர்த்தி சுவாமிகள்


(இதுதான் அன்னக்காவடியின் தண்டம் (இதில் சாதத்திற்கான இரு குண்டாக்கள் தொங்விடப்பட்டிருக்கும்))
,இவ்வாறு சிவனடியார்கள் சிவத்தொண்டு வளர்ந்து வரும் நாட்களில் தான் பெரியபுராணத்தின் பாட்டுடைத்தலைவன் என்று போற்றப்படும் சுந்தரருக்கு திருச்சபை நிருவி அவருக்கு வருடாவருடம் குருபூஜை நடத்த திருச்சபை முயன்றது, இதன் பொருட்டு சுந்தரரையே தனது குருவாக கொண்டு நேசித்து அவரையே தியானித்து தனது குருவான சுந்தர மூர்த்தி சிவபொருமானால் ஆட்கொள்ளப்படப்போகிறார் எனவே அவருக்கு முன்னரே தான் முத்தி பெற வேண்டுமென்று தனது தவவண்மையால் ஆடித்திங்கள் 10ம் நாள் சித்திரை நட்சத்திரத்தில் முத்தி பெற்ற பெருமிழலைக் குறும்ப நாயனாருக்கும், ஆடித்திங்கள் 11ம் நாள் சுவாதி நட்சத்திரத்தில் முத்திபெற்ற சுந்தரமூர்த்தி நாயனாருக்கும் அவருடைய ஆன்மீக நண்பரும் சிவத்தொண்டருமான சேரமான் பெருமாள் நாயனருக்கும்( சுந்தரரின் வேண்டுகோளின்படி சேரமான் பெருமானையும் சிவனிடம் ஆட்கொள்ளவேண்டியதின் பெயரில் முக்தி பெற்றவர்) ஆகிய மூவருக்கும் இவ்விரு நாட்களிலும் சுந்தரபாண்டியம் ஸ்ரீசுந்தரமூர்த்தி சுவாமிகள் சபையின் திருமாடலாயத்தில் இத்துடன் கூறப்பட்ட அழைப்பிதழில் கண்டவாறு சிறப்பு பூஜைகளும் தேவார இன்னிசை நிகழ்ச்சியும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்றது, மேலே கூறப்பட்ட மூவருக்கும் இங்குதான் உற்சவ மூர்த்தி விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இரண்டாம் நிகழ்ச்சியில் அலங்கார சப்பரத்தில் சுந்தரபாண்டியம் திருவீதிகளில் ஊர்வலமாக திருவீதி உலா நடைபெறுகிறது, அன்னார்களின் திருவுருவ விக்ரங்களை இங்கு காணலாம்
இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!
பெறுவோம் சிவனருள்!!

(சைமதத்தின் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் இதோ !
இந்த சிறப்பு வாய்ந்த சிவ விழா நூற்றாண்டை நோக்கி பயனிக்கிறது, வளரட்டும் சிவத்தொண்டு!
பெறுவோம் சிவனருள்!!

(சைமதத்தின் தொடர்பில் மேலும் பல ஆதாரங்கள் இதோ !
திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக