திங்கள், 14 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 24 ஆசையை விடுங்கள்


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 24 ஆசையை விடுங்கள் ஆசை காட்டாறு மாதிரி கரை மீறிப் போகும் திசை மாறிப் போகும். காட்டாற்றின் பேரிச்சலில் தேவகானம் அழங்கிவிடம் மனம் அமைதிக் குலையும், மக்கள் மீது வைக்கும் பாசத்தை பொருள்கள் மீது கொள்ளும் ஆசையை விடுங்கள். இறைவனின் இருப்பை உணர அதுவே எளிதான வழி என்கிறது திருமந்திரம். ஆசையை விட்டால் இறைவனை அடையலாம், பிறவாதிருக்கும் பேறுண்டு. அற்றவர் என்பார் அவஅற்றார் மற்றறையார் அற்றதாக அற்றது இலர் - குறள் பிறவி அற்றவர்என்று சொல்லப்படுபவர் ஆசையை ஒழித்தவரே , சிலவற்றின்மீது மட்டும் ஆசையை விட்ட வாராயின் , அவற்றால் சில துன்பங்கள் ஒழிந்தனவே யன்றி முற்றிலும் துன்பம் ஒழிந்தவர்ஆகார் என்கிறார் வள்ளுவர் எனவே ஆசையை அறவே அற்றவர்தான் பிறவியற்ற பேரின்பம் பெறுவர், சிவபெருமான் மாடத்திலோ, கூடத்திலோ இருப்பவனல்லன், ஆலயத்திலோ, வேடம் கொண்டவரிடமோ அவன் இருப்பதில்லை, ஆனால் ஆசையே அடம்பிடித்து உங்கள் மனதில் இடம் பிடிக்கும், இதனால் வாழ்வில் துன்பங்கள்தான் வந்து சேரும், அந்த ஆசை என்னும் நச்சு இருக்கும் இடத்தில் இறைவன் குடிகொள்வதில்லை எனவே ஆசையை விடுங்கள், இறைவன் அஙகே ( மனத்தில் ) வந்தமர்வான் என்கிறார் திருமூலர். ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் ஆசை படப்பட ஆய்வரும் துன்பஙகள் ஆசை விடவிட ஆனந்தமாமே உங்களுக்குள் ஆசையே இல்லை என்கிற நிலையை உருவாக்குங்கள், அந்த மேலோனின் மீதும் ஆசை வைக்க வேண்டாம், ஆசைக்கு இடமளித்தால் அது மேலும் வளர்ந்து கொண்டே போகும். துன்பங்களும் அடுக்கடுக்காய் வந்து சேரும், ஆசையை விட்டால் ஆனந்தம் உண்டு, இது பாடலின் பொருள். ஆசையை விட்ட மனம், மழையில் கழுவிவிட்ட உடம்பு மாதிரி சில்லென்று சுகமாயிருக்கும், புத்துணர்வு பெற்று குதியாட்டம் போடும், ஆசையை விட்டால் சித்தியும் கைகூடும், என்கிறார் சித்தர், அது எப்படியோ உண்மையான ஞானத்தை அடைந்தாலே போதும் , எனவே ஞானம் பெற, முக்தியடைய ஆசையை மனத்திலிருந்து அகற்ற வேண்டும், திருசிற்றம்பலம் - ஒம் நமசிவாய ஒம் மேலும் ஆன்மீக தகவலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக