செவ்வாய், 22 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28 ஞானி யார்?


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 28 ஞானி யார்? யார் தெய்வத்தில் வாழ்கிறாரோ, பேரின்பத்தை அனுபவிக்கிறாரோ, அவரே ஞானி. ஆனவம் , தன்னலம், தற்பெருமை, விருப்பு , வெறுப்பு, காமம், சினம், பேராசை, இவற்றில் இருந்து விலக முடிந்தவர் ஞானி. கருணை, பொறுமை, அறிவுணர்வு, பிரபஞ்ச அன்பு, மனதின் சமநிலை, கொண்டவர் ஞானி. ஞானியரின் ஆற்றலும், அருளாளரின் பெருந்தன்மையும், அத்தகையது. காலம் என்கிற மணற்பரப்பில் தங்கள் காலடிகளை அவர்கள் பதித்து சென்றார்கள். ஆன்மா, சார்ந்த தேடல் உள்ளவர்கள் உண்மையும், நம்பிக்கையும், கொண்டவராய் அந்த சுவடுகளைப் பின்பற்றி செல்கிறார்கள். ஞானிகள் இனம் மொழி எல்லை கடந்தவர்கள், அவர்கள் தொடங்கி வைத்த ஆன்மீக நீரோட்டம் காலவெளியைக் கடந்து செல்கிறது. ஆனால் அமைதியையும் ஞானத்தையும் பெறுதற்கான வேட்கை மக்களிடம் இருக்கிறதா? தங்கள் வாழ்க்கையையும், ஒழுக்கத்தையும், எதிர்காலத்தையும், மேம்படுத்தவே ஞானிகள் ஒளிவிளக்கேந்தி வருகிறார்கள், என்பதை மக்கள் உணரவேண்டும். அவர்களின் அன்பை பெற முடிந்தவர்கள் பாக்கியவான்கள், ஞானம் என்பது உருவாக்கப்பட்டதல்ல. சட்டென்று உதயமாவது அல்ல, அது தேடிப் பெறுவதல்ல தானாக வருவது. ஆன்மா சிவத்தன்மை பெறும் தன்னை அறிகிறபோது . இதனை திருமூலர் கீழ்கண்ட பாடல் வாயிலாக கூறுகிறார், பாடல்: நான் என்றும் தான் என்றும் நாடினேன்............. " நான்வேறு, சிவன் வேறு, என்று எண்ணியிருந்தேன், என்னை தன்னில் அடக்கியவன் (இறைவன்) நான் என்றும் தான் என்றும் இரண்டு பொருட்கள் இல்லை, என்றுைரைத்தான் அவன். அப்போது என்னுடைய நான் அற்றுப் போனதை உணர்ந்தேன், என்கிறார், இறைவனின் பேராற்றலை, பெருங்கருணையை உணர்ந்தவராயிருங்கள், அவனுடைய நிறம், என்ன, வடிவம் என்ன, எது என்றெல்லாம் ஆராய்ந்து கொண்டிராதீர்கள், உனக்கு கெடுதல் நேரிட்டாலும், அவருடைய நன்மையில் அக்கறை காட்டு இதுவே சிவன் பாற்கடல் அமுதை தேவர்கட்கு வழங்கி நஞ்சினை தானே விழுங்கி உலகிற்கு அறிவித்த நன்னெறி, நெறியில் நிற்பார்க்கு ஞானத்தை குறைவின்றி அளிப்பான் இறைவன், பாடல்: மிக்கர் அழுதுண்ண, நஞ்சுண்டமேலவன்.......... தான் உடலல்ல, அறிபவன் என்பதை ஆன்மா உணர்கின்ற போது அது சிவமான தன்மை பெற்றுவிடுகிறது. அருள்வழி நின்று தன்னை காண்பார்க்கு சிவன் தானே வெளிப்படுகின்றான். அன்புமிக்கவர்க்கு நீண்ட ஆயுளை அளிப்பதோடு அவனே உற்ற துணையாகின்றான். பூவில் இருந்து அதன் நிறத்தை யும் வாசத்தையும் வேறாய் பிரிக்க முடியுமா? அவ்விதப் பிணைப்பு சிவனுக்கும் சீவனுக்கும் அமைகிறபோது சீவனுக்கு போரானந்தம் கிட்டுகிறத. மெஞ்ஞான விளைவாகும் ஆனந்தம் அதுவே பரமானந்தம். சிவன் உங்கள் உள்ளத்தில் பதிய வேண்டுமானால் அவனை மன நெகிழ்ச்சியோடு வணங்குங்கள். பாடல்களால் துதியுங்கள், என்கிறார் சித்தர. தத்துவ்ஙகள் விட்டு, மல வாதனைகள் நீங்கி அவத்தைகள் கடந்து உண்மையான ஞான ஆனந்தத்தில் திளைக்க வேண்டும். ஞானியின் செயல்: புலத்தின் தன்மை அறிந்து, மெய்ப்பொருளை உணர்ந்த ஞானிகள் கர்ம சட்டத்தை உடைத்தெறிவதில்லை, தங்களுடைய ஊழ்வினைகளை அவர்கள் அனுபவித்தே கழிப்பார்கள், சஞ்சித கர்மத்தை தீர்ப்பதோடு தற்போதைய பிறவியில் புதிய கர்மங்கள் ஏற்படாதவாறும் தடுத்து க் கொள்வர், பாடல்: தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்.................. மனம் , வாக்கு காயம் என்னும் முக்கரணங்களும் வினைகளும் பற்றிட மூலகாரணமாய் இருக்கும், ஆனால் அந்த முக்கரணங்களை உலகியலில் இருந்து விலக்கி, சிவனிடம் செலுத்ததினால் வினைகள் பற்றாது. ஞானிகள் கரணவகையில் செயல்படாதிருந்து வினைகளை வலக்குவர். பாடல்: மனவாக்கு காயத்தால் வல்வினை மூளும்............. காண்கிற எதுவும் பரமாத்மாவாகி விடுகிறபோது ஞானம் முழுமை பெறும், எவர் உள்ளபடி அறிகிறாரோ, அவர் அடைகிறார் ஞானம், http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக