ஞாயிறு, 20 ஜூலை, 2014

திரு ஐந்தெழுத்தின் மகிமை


திரு ஐந்தெழுத்தின் மகிமை " வீடு பிறப்பை அறுத்து மெச்சினர் பீடை கெடுப்பன பிள்ளை நாள்தொறம் மாடு கொடுப்பன மன்னு மாநடம் ஆடி உகப்பனஅஞ்செழுத்துமே. திரு ஞான சம்பந்தர் அரிய நடனத்தை ஆடும் பெருமானார் விரும்பும் திருஐந்தெழுத்தினை விரும்பி / செபிப்பவர் / ஓதுபவர்களின் பிறப்பும் இறப்பும் இல்லாமல் போகும். இப்பிறவியில் வரக்கூடிய துன்பங்கள் அகன்றுவிடும், வேண்டிய செல்வங்களை அளித்துக்காப்பார் இறைவர். கடவுளை கண்ட திருஞான சம்பந்த பெருமானார் கூறுவதை தான்நாம் இறைவர் கூறியதாகவே கொள்ளவேண்டும். அறிவு கொண்டு இவற்றைச் ெசான்னாரில்லை. இறைவர் உள் நின்றுணர்த்த இவற்றை கூறினார். மிக எளிய வழி "சிவாயநம " எனும் திருஐந்தெழுத்தினை ஓதுவது என்பது , நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் சொல்லலாம். பிரயாணம் செய்யும் பொழுதெல்லாம் சொல்லலாம். பணம் காசு செலவு ெசய்ய வேண்டியதில்லை. இதைவிட எளிய வழிைய யார் சொல்லமுடியும்? திருஐந்தெழுத்தினை ஓதி, துன்ப நீக்கமும் இன்ப ஆக்கமும் பெறுவோமாக. திருச்சிற்றம்பலம் நன்றி; தமிழ் வேதம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக