புதன், 16 ஜூலை, 2014

திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 25 முந்தையா வினை ( ஊழ்வினை)


திருமூலரும் திருமந்திரமும் - உபதேசம் 25 முந்தையா வினை ( ஊழ்வினை) பழைய வினை என்பார், "விதி" என்றும் இது பூர்வகன்மம் என்றும் கூறப்படுகிற ஊழ்வினை,நல்லது நடக்கட்டும் எல்லாம் விதியின் பயன் என்றிருப்பர் ஞானிகள், இன்பமும் துன்பமும் வினைப்பயனால் உண்டாவன என்கிறார் திருமூலர், "தான் முன்னம் செய்த விதிவழி தானல்லாமல் வான் முன்னம் செய்தங்கு வைத்ததோர் மாடில்லை கோன் முன்னம் சென்னி குறிவழியே சென்று நான் முன்னம் செய்ததே நன்னில மானதே" திருமந்திரம் ஆற்றில் மேடு பள்ளங்கள் தானே அமைகின்றன. தானேமறைகின்றன, அது வெள்ளத்தின் செயலன்றி வேற்றார் செய்வதில்லை. நாம் செய்த வினைப்பயன் நம்மையே வந்து சேரும். இதனை உணர்ந்திருக்கும் நாம் திருநீற்றொளியில் விளங்கும் பெருமானை பெரும் பேறாய் கொ ண்டு அவனை விட்டு நீங்காதிருப்போம், ஆறு தன்னை வந்தடையும் மணலை தானே சுமக்கும், அதுதான் இயற்கையின் நியதி, வானமே இடிந்து விழட்டும் கடலின் ஆங்காரத்தால் அழிவு நேரட்டும், காட்டு தீயில் சர்வ நாசம் விளையட்டும் பெருங்காற்றில் பொருட்கள் சேதமடையட்டும், ( இயற்கைக்கு எதிராய் போரிடமுடியாது, இயற்கையை சார்ந்த இருந்தாக வேண்டும். நான் எவ்வற்றாலும் பாதிக்கப்படாமல் எப்போதும் இறைவனையே நினைந்திருப்போம். குடியிருந்த வீடு பழுதானால் வேறு வீட்டுக்கு சென்று வசிக்கிறோம், நாட்டில் பஞ்சம் வந்தால் மக்கள் அண்டை நாட்டில் போய் வாழ்கிறார்கள். இந்த சரீரம் பழுதுற்றால் இன்னொரு சரீரத்தை இறைவன் வழங்கி விடுவான். சிவஞானம் பெற்றவர்கள் இவ்வுண்மையை அறிவார்கள், தங்கள் பணியை அவர்கள் தொடர்வார்கள். கர்மா என்றால் வினை அல்லது செயல் என்று பொருள். உடலாலும் மனத்தாலும் செய்யப்படும் எந்த ஒரு செயலும் ஒரு வினையே. கர்மா என்பது செயலை மட்டுமன்றி விளைவையும் குறிக்கும். இறைவன் பாரபட்சமாக செயல்படுவதில்லை. அவருடைய பார்வையில் எல்லோரும் ஒன்றுதான். ஆனால் ஒருவர் சுகப்படவும், இன்னொருவர் துயர்படவும் என்ன காரணம்?தம்முடைய தீய செயலே காரணமாகவே ஒருவர் துன்பப்படவும் நேரிடுகிறது. ஆசை எண்ணம், செயல் என்கிற மூன்று இழை களைக் கொண்டே வினைக்கயறு முறுக்கப்படுகிறது. வினைகள் மூன்று வகை, சஞ்சிதம், பிராப்தம், கிரியாமனம், என்று , இதுவரை சேர்த்த சஞ்சிதம், தற்போது அனுபவிக்கிற வினைப்பயன் பிராப்தம், எதிர்காலத்தை கருத்தில் கொண்டு செய்யப்படும் செயல் அல்லது வினைகள் கிரியாமனம் ( ஆகாமியம்) , எதை அனுபவிக்க வேண்டுமோ அதை அனுபவித்தே தீரவேண்டும். மாற்ற முடியாது. அவரவர் ஊழ்வினையும், அவரவரால் உருவாக்கி கொள்ளப்படுவதே . சரியான எண்ணங்களும் சரியான செயல்களும் வினைகளை குவிய விடாமல் தடுக்கும் திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாயம் மேலும் பல ஆன்மீக தகவல்களுக்கு www.vpoompalani05.wordpress.com www.poompalani.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக