வியாழன், 3 ஜூலை, 2014

திருமூலர் கூறும் அறநெறி


திருமூலர் கூறும் அறநெறி அறிது அறிது மானிடராய் பிறப்பது அரிது அவ்வாறு பிறந்த காலை கூன், குருடு செவிடு, ஊனம் மற்று பிறப்பது அதனினும் அரிது என்கிறார் அவ்வையார், அவ்வாறு கிடத்தற்கரிய மானிட பிறவி எண்ணிய சில நாட்களிலேயே மூப்பு என்பதை அடைகிறது, அக் குறுகிய காலத்தில் பயனுள்ள செயல்களை நாம் செய்யமால் பொருள் சேர்த்தல், பிள்ளை பேறு அைடதல் போன்ற சிற்றின்பங்களிலேயே காலத்ைத வீணாக்குகிறோம், காலையில் உதிக்கிற சூரியன் மாலையில் மறைகின்றது, நம் கண்ணெதிரே கன்று எருதாய் வளர்வதும், புழு பூச்சிகளாக மாறி மடிவதும் நிகழ்கின்றன,நாம் கொண்ட இளமையும் அதுபோல் மறையும் என்பதை உலகோர் உணர்வதில்லை, இதனை திருமூலர் " கிழக்கெழுந் தோடிய ஞாயிறு மேற்கே விழக்கண்டும் தேறார் விழியிலா மாந்தர் குழக்கன்று மூத்தேரு தாய்ச்சில நாளில் விழக்கண்டும் தேறார் வியர்உலகோரே. சூரியன் தோன்றுகிறான், மறைகிறான், இது எதைக்காட்டுகிறது தோன்றிய ஒன்று அழிவுறுகிறது என்பதைக்காட்டுகின்றது. இதனை நேரில் கண்டும் அறியாமல் இருக்கின்றனரே, மற்றும் இளைய கன்றானது இளைமயாகவே இருப்பதில்லையே, அது மூப்பு அடைகிறது, கன்று என்னும் பெயர் மாறி எருது என்னும் பெயைரப் ெபறுகிறது. பிறகு சில நாட்களில் இறந்தும் விடுகிறது. இதனையும் உணர்ந்திலரே, எனவே தோன்றி பொருளுக்கு அழிவு உண்டு என்பதைஅறியாது அரிதற்கரிய மானிடப் பிறவியை வீணே காலம் கழிக்கும் மானிடேரே இருக்கும் காலத்தில் நல்லறம் செய்து பிறவி பிணி நீக்கி பிறவாமை என்னும் பேறு அடைய முயல்வீரே, இதனை அறநெறிச்சாரம் பாடல் ஒன்றின் மூலம் விளக்குவதை இங்கு காணலாம், " சென்றநாள் எல்லாம் சிறுவிரல்வைத்து எண்ணலாம் நின்றநாள் யார்க்கும் உணர்வு அரிது / என்று ஒருவன் நன்மை புரியாது நாள் உலப்ப விட்டிருக்கும் புன்ைம பெரிது புறம்." நம்முடைய வாழ்ககையில் கழிந்துபோன நாட்கள் விரல் விட்டு எண்ணி விடலாம்,ஆனால் நாம் வாழப் போகும் நாட்கள் எவ்வளவு என்று அளவிட யாராலும் முடியாது. இதனைக் கருத்தில் கொண்டு , ஒருவர் தான தருமங்களையும் , நற்செயல்களையும் விரைந்து செய்யாமல் வாழ்நாள் முழுவதும் வீணே கழியுமாறு விட்டிருப்பதால் வருகின்ற துன்பம் பின்னர் அதிகமாகிவிடும். எத்தனைநாள் வாழப் போகின்றோம் என்பது நமக்கு தெரியாது, இதனை இறைவரே அறிவார், எனவே அறச் செயல்களை விரைந்து ெசய்துவிடவேண்டும், நற்செயல்களை நாளை செய்வோம் என்று தள்ளிப்போடக் கூடாது. அறம்தான் நமக்கு சிறந்த பாதுகாப்பு அரன் ஆகும், முதுமையையும் கொடிய நோயையும் கூற்றுவன் முன்னதாகவே அனுப்பிவிடுவான். பின்னர் வந்து அழித்து விடுவான், அறமே உயிரகளுக்கு சிறந்த பாதுகாப்பு , என்பதை சான்றோர்கள் தங்களின் அனுபவத்தால் கூறியுள்ளதை மனத்தில் கொள்ள வேண்டும் நாம். திருச்சிற்றம்பலம் ..... ஓம் நமசிவாய ஓம் மேலும் பல ஆன்மீக தேடலுக்கு; http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக