சனி, 26 ஜூலை, 2014

கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம்


கழுகுமலை ஆடி அமாவாசை கிரிவலம் (26,7,2014) ஆன்மீக கடல், ஆன்மீகஅரசு வாசகவர் வட்டம் மூலம் இந்த கழுகுமலை கிரிவலம் ஒரு ஆன்மீகப் பயிற்சிக்காக ஆன்மீகஅரசு வலதைள நம் குருநாதர் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு 26,7,2014 அன்று சுமார் 200 ஆன்மீக அடியாளர்கள் கலந்து கொண்டனர் இந்த சச்சங்கம நிகழ்வு மிக சிறப்பாகவே நடைபெற்றது, பொதுவாக அமாவாசை என்றால் எல்லாம் வல்ல பரம்பொருளான , அருட்பெரும் ஜோதியின் வடிவான லிங்கேஸ்வரயை நினைவும், நம் மூதாதையர்களான பித்திருக்களை நினைந்து வணங்கி, அவர்களுக்கு விரதம் இருந்து ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது இந்து சமய மறபாக தொன்று தொட்டு இருந்துவருகிறது, அதிலும் வருடாந்திர பித்திரு திதி இந்த ஆடி மாதத்தில் வரும் அமாவாசையும், புரட்டாசி மாதத்தில்வரும் மகளாய அமாவாசை, மற்றும் தைமாதம் வரும் தை அமாவாசை ஆகிய தினங்கள் மிகவும் சிறப்பு பெற்றதாகும், இந்த நாட்களில் எல்லா சிவாலங்களிலும் சிற்ப்பு பெற்றதாயினும், ஆடி அமாவாசை என்றால் நமக்கு நினைக்கு வருவது சதுரகிரியும், மகளாய அமாவாசை என்றால், அம்பை பாபநாசமும், தை அமாவாசை என்றால் ராமேஸ்வரமும் முக்கியத்துவம் பெற்ற தலங்களாகவும், இந்த நாட்களில் இந்த தலங்களில் பக்தர்கள் கூட்டம் கணக்கில் அடங்காது என்பது சிவபக்தர்கள் யாவரும்அறிவர். இந்த முக்கியத்துவம் பெற்ற மேற்கண்ட அமாவாசை நாட்களில் நம்முன்னோர்களாகிய - பித்திருக்களுக்கு ஆண்டுக்கொரு முறை திதி கொடுப்பது என்பது யாவரும் அறிந்ததே,இந்துக்களின் ஒரு மறக்க முடியாத - மறக்கக் கூடாத செயலாக இது கருதப்பட்டு வருகிறது, இதனை ஒவ்வொரும் தனித்தனியாக புரோகிதர்கள் கொண்டு செய்ய முடியாதவர்களுக்கு, புண்ணிய தீர்த்த முள்ள சிவாலங்கள், புண்ணிய நதிக்கரைகள், மற்றும் புண்ணிய ஸ்தல கடற்கரைகள் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டமாக செய்வதை நாம் காணலாம், இந்நிகழ்வின் தொடர்பாக நம் ஆன்மீக கடல், மற்றும், ஆன்மீக அரசு வலைத்தள நம் குருநாதர் அவர்களின் நல்லெண்ண முயற்சியால் , ஆன்மீககடல், ஆன்மீகஅரசு வலைத்தள வாசகர்வட்டார ஆன்மீ தொண்டர்களுக்காக இந்த சித்தர்கள் வாழும் கழுகமலையில் ஒரு ஆன்மீக சச்சங்க நிகழ்ச்சியும், சித்தர் ஈஸ்வரபட்டர் அவர்கள் நினைவாக அன்னதான நிகழ்வும் நடத்துவதென நோக்கில் கழுகுமலை ஊராட்சி சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது, இதில் நம் குருநாதர், பித்திருக்களுக்கு திதி கொடுப்பதன் அவசியத்தையும், அதனால் விளையும், நன்மையும, செய்யமுடியாத பட்சத்தில் ஏற்படும் தீங்குகளையும் தெளிபட விளக்கினார், இல்லங்களில் மங்கையர் திருவிளக்கு தீபம் ஏற்றுவது பற்றிய ஆன்மீக விளக்கங்களை அருளினார், அன்னார் விளக்கிய தெளிவுரைகள் விளக்கின் அமைப்பு: 1, 8 அடுக்கு கொண்ட சுமார் 3 அடி உயரம் உள்ள விளக்கு - தாம் உட்கார்ந்து விளக்கு ஏற்றி வழிபடும் போது அவர்களி கண்இமைக்கு சமமாக தீபம் ஒளி அமைய வேண்டும் 2, ஐந்து முகம் கொண்டது மிகச்சிறப்பு - 4 முகம் கொண்ட விளக்குதான் இருந்தாலும் பயன்படுத்தலாம், 3, தீபம் கிழக்கு திசையை நோக்கி எறிய விட வேண்டும் 4, தீபம் ஏற்றும் நேரம் : சூரிய உதயத்திற்கு முன் காலை 6 மணிக்குள் அல்லது சூரியன் அஸ்தமத்திற்கு பின் அதாவது மாலை 6 மணிக்கு பின் 5, குத்து விளக்கின் அடி குமிழ் பாகத்தில் காந்தம் பிடிக்காத சில்லவர் குங்கும் இட்ட குங்கும பாத்திரம் 6, குத்து விளக்கின் அடியில் மாம் பலகை தான் வைக்க வேண்டும் தாம்பூலத்தட்டு அல்லது வேறு தட்டு வைக்கக் கூடாது கூடிய வரை மாம்பலகையில் தான் விள்க்கு வைக்க வேண்டும், 7, குத்து விளக்கை கழட்டி சுத்தம் செய்தல் வெள்ளிக்கிழமை கூடாது - ஒவ்வொரு வியாழக்கிழமையன்றே செய்து விடுவது சிறந்தது 8, தீப எண்ணெய் நல்ல எண்ணெய் பயன்படுத்தலாம், இருப்பினும் தீப வழிபாடு சிறக்க உங்கள் இல்லம் தெய்வீக மனம் பெற தங்களின் வேண்டுதல் நிறைவேற குருநாதரின் ஆராட்சியால் தயார்செய்த மூலிகை எண்ணெய் மிகமிக ஏற்படுடையது, தங்கள் எண்ண வேண்டுதல் கூடிய விரைவில் நிறைவேறும் இவ்வாறு குத்து விளக்கு தங்கள் தங்கள் இல்லங்களில் மங்கையர் தீபவழிபாடு செய்து சுத்தம செய்யும் நாளில் நாம் குத்துவிளக்கிற்கு அடியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து திலகமிட்டுக் கொண்டால் அஸ்ட லட்சுமியின் கடாச்சகம் இந்த இல்லத்திற்கே கிடைக்கும் என்றார் பின் சச்சங்க நிகழ்வு முடிந்தவுடன் " ஓம் சிவசிவ ஓம், ஓம் சிவசக்தி ஓம் " என்ற சிவ கோசத்துடன் கழுகுமலை கிரிவலம் புறப்பட்டது, கிரிவலப்பாதையில் உள்ள அருள்மிகு மிளகாய் வத்தல் சித்தர் ஜீவசமாதியில் குருபூசையும், அச் சித்தரிடம் அவரவர்கள் வேண்டுதல் வேண்டி கூட்டு பிராத்தனையும் நடந்தது. பின் கிரிவலப்பாதையில் ஈசான முலையான ஓர் இடத்தில் குருநாதர் ஏற்பாட்டின் படி பித்திருக்களுக்கான திதி கொடுப்பதற்கு ஓம் சிவசிவ ஓம் என்று கூறி எள்ளும் தண்ணீர் இறைத்து திதி எல்லோராலும் செய்யப்பட்டது,, பின் கிரிவலம் முடித்து, அருள்மிகு கழுகாசல மூர்த்தியின் வழிபாடும், பின் ஈஸ்வர பட்டர் நினைவாக அன்னதானமும் சிறப்புடன் நடந்து முடிவுற்றது, இந்த நிகழ்வில் தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான ஆன்மீக அடியார்கள், தொண்டர்கள் குருநாதரின் வலைதள வாசக அன்பர்கள் (followers) கலந்து கொண்டனர் திருச்சிற்றம்பலம் - ஓம் சிவசிவ ஓம் மேலும் சில ஆன்மீக தகவல்கள் தேடலுக்கு http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக