வெள்ளி, 4 ஜூலை, 2014


வேற்று மதத்தாருக்கும் பரவோகாரி காஞ்சி பரமாச்சாரியார் ஒருதடவை அயல்நாட்டு வேற்று மத பால்பிரண்டன் என்பவர் இந்து சமயத்தில் மிக ஈடுபாடு கொண்டும் இந்து மத துறவியரின் ஆன்மீக வெள்ளத்தில் அவர் திளைத்து வந்தார், அவர் உயர்ந்த இந்து மத ஆன்மீக நாட்டம் உடையவர், அவரது ஆன்மீக நாட்டம் மதங்கடந்து எல்லா மதச் சான்றோர்களையும் போற்றுவது மற்றும் இந்துமத துறவிகளின் சனாதன தர்மம் எத்தைதய ஆபூர்வ ஆன்மீக நெறி என்பதை அறியவும், நம் மதத்தின்பால் அளவற்ற மதிப்பும் ஈடுபாடும் கொண்டிருந்தார், காஞ்சி பரமாச்சாரியாைரப் பற்றி அவர் கேள்விப்பட்ட விசங்கள் அவரை எவ்வித்திலும் சந்திக்க ேவண்டும் என்ற எண்ணம் தோன்றியது, பதவியையோ, புகழையோ பரமாச்சாரரியார் மதிப்பதில்லை, பணத்தின் மேல் அவருக்கு ஒரு சிறிதும் நாட்டம் இல்லாதவர்,அவரைப்பற்றி அறிய, அறிய பிரண்டனுக்கு அளவரியாய அவா அவரை சந்திக்க தோன்றயது, எப்படியும் சந்தித்தாக வேண்டும் என்ற போது தனக்கு அறிமுகமான எழுத்தாளர் திரு வெங்கடரமணி என்பவர் மூலம் பராமாச்சாரியாைர சந்திக்க சென்றார், திரு வெங்கடரமணியும் சத்குருவிடம் பால் பிரண்டனது ஆன்மிக வேட்கைைய சொல்லி அறிமுகம் செய்து வைத்தார், பரமாச்சாரியார் அந்த வெளிதேச மனிதரை கனிவோடு பார்த்தார், மத வேறுபாட்ைடக் கூட பொருட்படுத்தாமல் அந்த வேற்று மதத்தினருக்கு அவரின் அருள் பார்வையால் அப்படியே பிரண்டனின் உள்ளத்தை கவர்ந்தார், அந்த தெய்வீக மனிதரின் சந்நிதியில் பெரும் சாந்தியை உணர்ந்தார், இவரையே தம் குருவாக பெற்று அவரிடம் உபதேசம் பெற எண்ணினார்.இவர் நினைத்ததை சத்குரு உணர்ந்து, பால் பிரண்டனை அன்போடு பார்த்த பரமாச்சாரியார் அருள்மொழியாக " அன்பனே உனக்கு ஒரு குரு வேணடும் அவ்வளவுதானே, நீ உபதேசம் பெற விரும்புகிறாய், நான் இங்கே ஒரு மடத்தின் மடாதிபதியாக இருக்கிறேன், இந்த மடத்திற்கு சிலகட்டுப்பாடுகள் உள்ளன, அைத நான் மீற முடியாது உனக்கு உபதேசம் செய்யக்கூடிய ஆன்மிகவாதி திருவண்ணாமலையில் ரமண மகரிசி இருக்கிறார், நீ வெளிதேசம் திரும்புவதற்கு முன் கட்டாயம் அவரைச் சென்று சந்தித்பாயாக உன் வாழ்க்கை சிறப்படையும் " என அருள் வாக்கு தந்து ஆசிரவதித்தார். பிரண்டன் மறுநாள் அவசர வேலையாக கட்டாயம் நாடு திரும்ப வேண்டிய சூழ்நிலையில் இருந்தார், தனக்கு ஏற்பட்ட ரமணரின் ஆசி கிைடக்காமல் போய்விடுேமா என்ற தாபத்தில் மன்குறைவுடன் சஞ்சலத்தில் தூக்கம் வராமல் அரைகுறை தூக்கத்தில் இருந்தபோது அவர் சற்றும் எதிர்பாராத சூழலில் பராமாச்சரியார் தீடீெரன அவர்முன் தோன்றி " அன்பனே ரமணரை நீ தரிசிப்பது மிக முக்கியம் அந்த சந்திப்பு உன் வாழ்வின் திசையை மாற்றும் " என்று சொல்லிவிட்டு மறைந்து விட்டார்,பிரண்டனோ இது கனவோ அல்லது நிசமோ என்ற நினைவில் உலன்று கொண்டிருந்தார்,அவர் விழிகளில் கண்ணீர் வழிந்தது,பிறகு அவ் வாக்குப்படியே ரமணரைச் சந்தித்து அவரின் ஆசியையும் அருள் வாக்கையும் பெற்றுச் சென்றார், இந்நிகழ்வை ஒரு அன்பர் அறிந்து பராமாச்சாரியாரிடம் எவ்வாறு இங்கேயே இருந்து கொண்டு அன்னாருக்கு உபதேசம் செய்தீர்கள் என்று வினவ அதற்கு பராமாச்சாரியார் " எந்த எண்ணத்திலேயே தாங்கள் தூங்குவதற்கு முன் இருக்கிறதோ அதுவே உங்கள் கனவாக அமையும் நல்ல எண்ணங்கள் உங்களுக்கே உபதேசமாக அமையும் என்று புன்னகையுடன் கூறி சென்றார், எனவே நல்ல எண்ணங்களும் நல்ல செயல்களும் உங்களுக்கு தக்க சமயத்தில் உபதேசமாகவே அமையும், இதுவே பெரியோர்களின் அருள்வாக்கு நன்றி ஆன்மீகமலர் திருசிற்றம்பலம் ,,, ஓம் நமசிவாய ஓம் http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://poompalani.weebly.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக