சனி, 31 மே, 2014


மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம். மெய்ஞானமா விஞ்ஞானமா என்று சிலர் பட்டி மன்றம், வெட்டி மன்றம் நடத்தி கொண்டு இருக்கின்றனர். இது எவ்வாறு இருக்கிறது என்றால் ஆறு, நதி இரண்டில் எது சிறந்தது என்று சிலர் வாதம் செய்தால் எப்‌படி இருக்குமோ அதை போல் தான் இருக்கிறது. ஆறு என்றாலும் நதி என்றாலும் அது ஒரே பொருளையே குறிக்கும். அதுபோலவே மெய்ஞானம் என்றாலும் விஞ்ஞானம் என்றாலும் அது ஒன்றே. ஆனால் அதே சமயம் எந்த கருவியும் இல்லாமல் வெறும் கண்ணாலேயே விண்ணை ஆராய முடியுமா. இதற்க்கு விஞ்ஞானம் கூறும் பதில் முடியாது. ஆனால்? ஆரியபட்டா, பஸ்கராசார்யா போன்ற நமது நாட்டு விஞ்ஞானிகள் வெறும் கண்ணாலேயே விண்ணை ஆறாய்ந்தனர். அதற்க்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கியங்கள். அதற்க்கும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் முன் தோன்றிய வேதங்களில் கணக்கில் அடங்கா விஞ்ஞான தகவல்கள் இருக்கிறது. வெறும் கண்ணால் விண்ணை ஆராயமுடியும் என்பது விஞ்ஞானததால் நிரூபிக்கப்பட்டது அல்ல. ஆனால் ஆரியபட்டா போன்ற நமது நாட்டு விஞ்ஞானிகள் நிரூபித்ததை பொய் என்று விஞ்ஞானததால் நிரூபிக்கமுடியவில்லை. இலக்கியங்களில் உள்ள, வேதங்களில் உள்ள விஞ்ஞான தகவல்களும் நம்பமுடியாத உண்மையாக இருக்கிறது. . நமது நாட்டவர்கள் மற்றும் சீன, ஈஜிப்ட், பாபிலோன், சுமேறியா, கிரேக்க நாட்டை சேர்ந்தவர்கள் எவ்வாறு அதை செய்தார்கள். அனைத்து மெய்ஞனிகளுக்கும் தெரியும். மெய்ஞானமும், விஞ்ஞானமும் ஒன்று என்று. ஆனால். அனைத்து விஞ்ஞானிகளும் மெய்ஞானமும் விஞ்ஞானமும் ஒன்று என்பதை உணரவில்லை. ஆனால். எந்த கருவியும் இல்லாது பலகோடி மைல் தள்ளி உள்ள கிரகங்களை, அதன் குணங்களை மனித சக்தியை கொண்டு சொல்ல முடியாது. அதற்க்கும் மேற்பட்ட சக்தியால் தான் முடியும் என்பதை வேறு வழி இல்லாமல் விஞ்ஞானம் ஒப்பு கொண்டு உள்ளது. எனக்கு தெரிந்த மெய்ஞானம் கூறும் மேன்மையான விஞ்ஞான தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இருக்கிறேன். முதலில் தமிழ் இலக்கியங்களில் மிக பழமையான தொல்காப்பியதாலேயே போற்றப்பட்ட வேதத்தில் இருந்து அதில் முதன்மையான ரிக் வேதத்தை நாம் பார்ப்போம். 01.மித்ரோ ததாரா ப்ரதவி முட்டாத்யம் மித்ர க்ரிஷ்டிஸ் (ரிக் வேதம் 3:55:91) இதன் பொருள்: தனது ஈர்ப்பு சக்தியால் சூரியன் பூமியையும் வேறு கோள்களையும் தாங்கிப்பிடித்த வண்ணம் உள்ளது. 02.த்ரின பிகா க்ரமஜார்மனர்வம் யெனிமா விஸ்வ பூவா னானி டஸ்தூ(ரிக்வேதம் 1:16:41) இதன் பொருள் எல்லா கிரகங்களும் விடுவதை கொண்ட ஓர் சுற்றுவட்டத்தில் சுற்றுகின்றன 03.அயம் கவ் பிர்ஸ்னிரக்ராமிட் அசடன்மட்டராம் புரா பிடரம் க பிரயந்ஸ்வா (ரிக்வேதம் 10:16:91) இதன் பொருள் சந்திரன் பூமிக்கு துணைக்கோள். பூமி சந்திரன் , சூரியன் இரண்டையும் சுற்றுகிறது. சில நாட்டவர்கள் அன்று சூரியன் பூமியை சுற்றுவதாகவும் பூமி தட்டை என்றும் நம்பினர். நமது நாட்டின் பொக்கிஷமான சதுர் வேதங்களில் சொல்லப்பட்டவை வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல. சத்தியத்தை, உண்மையை அடிப்படையாக கொண்டு. வேத வாக்கு என்றும் பொய் ஆகாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக