செவ்வாய், 13 மே, 2014


மான்குட்டியைக் கையிலேந்திய, பார்வதி பாகனுடைய பூமாலைகள் சார்த்தப்பெற்ற திருவடிகளை உள்ளம் பொருந்தக் கைதொழுவதற்கு நாவை இணைந்து தழுவிய திருவைந்தெழுத்தைப் பற்றிய இப்பத்துப்பாடல்களை வழிபட வல்ல அடியவர்களுக்கு எத்தகைய துயரங்களும் ஏற்படமாட்டாது என திருநாவுக்கரசு சுவாமிகள் ஐந்தெழுத்திந்தின் வல்லமைதனை காணலாம். கற்றுணை பூட்டியும் கடலில் பாய்ச்சினாலும் நற்றுணையாவது "நமசிவாயமே" நாவினுக்கு அருங்கலம் "நமசிவாயமே" பண்ணிய பாவத்தை நண்ணின்று அறுப்பது "நமசிவாயமே" அடியார்களுக்குச் சிறந்த அணி "நமசிவாயமே" நடுக்கத்தை கெடுப்பது "நமசிவாயமே" நலமிக் கொடுப்பது "நமசிவாயமே" இல்லக விளக்கது "நமசிவாயமே" சொல்லக விளக்கது "நமசிவாயமே" சோதி உள்ளது "நமசிவாயமே" பல்லக விளக்கது "நமசிவாயமே" பலரும் காண்பது "நமசிவாயமே" நன்னெறியாவது "நமசிவாயமே" இடுக்கன் தவிர்ப்பது "நமசிவாயமே" திருச்சிற்றம்பலம் "நமசிவாயமே" http://vpoompalani05.wordpress.com, http://poomalai-karthicraja.blogspot.in, http://vpoompalani05.blogspot.in

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக