செவ்வாய், 19 ஏப்ரல், 2016

நவ கைலாயம் / சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர்

நவ கைலாயம் / சேர்ந்தபூமங்கலம் கைலாயநாதர்



இதுவும் நவ கையால தலங்களில் ஒன்பதாவது தலமாகும், தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள கடைசி தலம்.

இதுவும் அகத்திய அகத்திய முனிவரின் சிஷ்யர் உரோமச மகிரிஷி அகத்தியரின் வேண்டிதலின் படி தாமரை மலர்களை ஆற்றில் விட மலர் 9 வதாக ஒதுங்கிய இடமே ேசேர்ந்தபூமங்கலம் கைலாசநாதர் ஆலயம்.


மூலவர் ; கைலாசநாதர்
அம்மாள் ;அழகிய பொன்னம்மை  
அமைவிடம் ; சேர்ந்தபூமங்கலம்  தூத்துக்குடி மாவட்டம்  தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ளது.
பிராத்தனையும் நேர்த்திக்கடனும் ;இது நவக்கிரங்களின் அமைப்பில்சுக்கிரன் தலமாகும். மூலவர் சுக்கிரன் அம்சத்துடன் காட்சி தருகிறார், எனவே சுக்கரன் பரிகாரம் , தோசம் உள்ளவர்களின் வழிபாடு செய்ய உகந்த தலம், சுக்கிரன் வழிபாட்டு முறையில் , வெண்ணிற வஸ்திரம் சாத்தி, மொச்சை பொடி, தயிர் சாதம், நெய்வேத்தியம் படைத்து தாமரை மலரால் அபிசேகம் செய்யப்படுகிறது. வெள்ளிக் கிழமைகளில் சுக்கிர ஓரையில் வழிபாடு செய்தல் மிகவும் ஐஸ்வரியம் என நம்பப்படுகிறது.

சிறப்பு ; இவ்வாலயத்தில் இரண்டு வாசல்கள் உள்ளது. இங்கு பணத்திற்கு அதிபதியான குபேரன் தனது இரு தேவியருடன் கைலாச நாதரை வழிபட்டது முன் மண்டபத்தில் யானையின் மேல் அமர்ந்தவாறு  காணப்படுகிறது. குபேரனே இங்கு வழிபாடு செய்து பொன்னும் பொருளும் பெற்றதால், இங்கு வழிபடுவோர்
பொன் பொருள் வேண்டி வழிபாடு செய்ய, கடன் தொல்லை தீரும், இழந்த செல்வம் திரும்பக் கிடைக்கும் , 
முக்கிய சிறப்பு சுக்கிரன் கிரக வழிபாட்டிற்கு மிக உகந்த தலம்

நவக் கையால தலங்களும் நவக்கிரங்களின் தலங்களும்  உங்களின் தெளிவுக்காக 


திருச்சிற்றம்பலம்
ஓம் நமசிவாய நம ஓம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

நவக்கையால தலங்களின் வரிசை இத்துடன் முடிவுற்றது. நன்றி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக